Skip to main content

இந்திய அளவில் நான்காவது இடம்;நெட்டப்பாக்கம் போலீசாருக்கு நாராயணசாமி பாராட்டு!!

Published on 27/12/2018 | Edited on 27/12/2018

இந்திய அளவில்  நான்காவது இடம் பிடித்த நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தை முதலமைச்சர் நாரயணசாமி ஆய்வு செய்து  காவல்துறையினருக்கு பரிசுத்தொகை அறிவித்தார் 

 

police

 

கடந்த 20- ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரியிலுள்ள நெட்டப்பாக்கம் காவல் நிலையம் இந்திய அளவில்  நான்காவது இடம் பிடித்ததாக அறிவித்தது அரசு. மத்திய உள்துறை அமைச்சகம் CCTMS மூலம் குற்ற சம்பவங்கள் குறைவாகவும், குற்ற சம்பவங்களை தடுப்பதிலும், கண்டுபிடிப்பதிலும் எந்த காவல் நிலையம் சிறப்பாக செயல்படுகின்றது என்ற அடிப்படையில் நெட்டப்பாக்கம் காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.

 

மேலும் சுகாதாரம், குடிநீர்வசதி, புகார் கொடுப்பவர்களிடம்  அணுகுமுறை, பாதுகாப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து இதனை தேர்வு செய்துள்ளனர்.

 

police

 

இந்நிலையில் முதலமைச்சர் நாராயணசாமி இன்று நெட்டப்பாக்கம் காவல் நிலையத்துக்கு நேரடியாக சென்று பார்வையிட்டு, அதிகரிகளுக்கு பாராட்டு தெரிவத்தார். தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளுக்கு குற்ற சம்பவங்களை தடுக்கவும் அறிவுரை கூறினார். தொடர்ந்து காவல் கண்காணிப்பாளருக்கு 35,000 ரூபாயும், ஆய்வாளருக்கு 30,000, உதவிஆய்வாளர்களுக்கு 25,000 துணை உதவி ஆய்வாளருக்கு 20,000, காவலருக்கு 5,000 ரூபாய்கள் என அனைவருக்கும் சன்மானம் அறிவித்துள்ளதாகவும் அதனை வரும் குடியரசு தினத்தன்று வழங்கப்படும் என்றும் நாராயணசாமி அறிவித்தார். அவருடன் சபாநாயகர் வைத்திலிங்கம், காவல் துறை  இயக்குநர் சுந்தரி நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.