Published on 28/06/2019 | Edited on 28/06/2019
ரயில்வே துறையில் நிரப்பப்பட உள்ள 9000 பணிகளில் 50 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
![fifty percent reservation for women in railway police jobs](http://image.nakkheeran.in/cdn/farfuture/wG54TY4mHehlwhApCfjudDkxwAX91kwe5VqlffM3joo/1561714863/sites/default/files/inline-images/piyush-ggg.jpg)
ரயில்வே போலீசில் கான்ஸ்டபிள் மற்றும் துணை ஆய்வாளர் பொறுப்புகளுக்கு 9000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு, இந்த இடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.