Skip to main content

கேரளாவில் 105 வயது மூதாட்டிக்கு கரோனா!! மருத்துவமனையில் அனுமதி!

Published on 30/07/2020 | Edited on 30/07/2020
கரத

 

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை ஆறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது. கேரளாவை பொறுத்த வரையில், ஆரம்பத்தில் கரோனா கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,999 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 105 வயது உடைய மூதாட்டி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்