Skip to main content

"அப்பப்பா... காதல் போதும்..." - எழுத்தாளர் சேத்தன் பகத்

Published on 15/09/2018 | Edited on 15/09/2018

டீசர், ட்ரைலர் வெளிவரும், அட்வான்ஸ் புக்கிங் நடக்கும், கதையின் உரிமை பல கோடிகளுக்கு உடனே வாங்கப்படும்... இதெல்லாம் நடப்பது ஒரு பெரிய நடிகரின் திரைப்படத்துக்கு அல்ல, இந்த எழுத்தாளரின் நாவல்களுக்குதான். சேத்தன் பகத், இந்தியாவில் வாசிப்பு குறைந்துவிட்டது என்று கூறப்பட்ட காலத்தில் கோடிகளில் இவர் எழுதிய புத்தகங்கள் விற்றன. கிட்டத்தட்ட அத்தனை புத்தகங்களும் திரைப்படங்களாகி வெற்றியும் பெற்றுவிட்டன. ஆனாலும், இவரை தரமான இலக்கியவாதி என்று ஏற்றுக்கொள்ளாதவர்கள் பலர் உண்டு. இவரது நாவல்கள் இளைஞர்களை சீரழிப்பதாக விமர்சிப்பவர்கள் உண்டு. படுக்கையறை காட்சிகளுக்காகத்தான் இவரது நாவல்கள் விற்கின்றன என்னும் அளவுக்கு சொல்பவர்கள் உண்டு. ஆனால், இவர் தன் பாதையில் மேலே சென்றுகொண்டே இருக்கிறார்.

 

chethan bagat



தான் சிறந்த இலக்கியவாதியல்ல என்று கூறும் சேத்தன், ஆனால் தன் புத்தகங்கள் சிறப்பாக விற்பதை தன்னை விமர்சிப்பவர்களும்   ஒத்துக்கொள்ளத்தான்வேண்டும் என்கிறார். தான் பேச விரும்பும் மாற்றத்தை நோக்கி கவனம் ஈர்ப்பதற்காக ஆரம்பத்தில் காதல், கேளிக்கை கதைகள் எழுதினேன். ஆனால், அவற்றிலும் கூட அரசியலும் சமூக விஷயங்களும் இருக்கும் என்கிறார். இதுவரை சேத்தன் பகத்தின் நூல்களை ரூபா பப்ளிகேஷன் நிறுவனம்தான் கொண்டுவந்தது. இப்பொழுது அமேசான் வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் இணைந்திருக்கிறார் சேத்தன்.

 

girl in 105



இவரது ஃபைவ் பாய்ண்ட் சம் ஒன் (five point someone) நாவல் 'த்ரீ இடியட்ஸ்' படமாகி பல மொழிகளிலும் பெருவெற்றிபெற்றது. '3 மிஸ்டேக்ஸ் ஆஃப் மை லைஃப்', '2 ஸ்டேட்ஸ்', 'ஹாஃப் கேர்ள் ஃப்ரெண்ட்' என இவரது நாவல் வெற்றி வரிசையில் அடுத்ததாக வர இருக்கிறது 'த கேர்ள் இன் ரூம் 105' நாவல். காதலுக்குப் பெயர் போன இவரது இந்த நாவலின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் 'அன்லவ் ஸ்டோரி' (unlove story) என்ற குறிப்புடன் வந்திருக்கின்றன. "நான் போதுமான அளவு காதல் கதைகள் எழுதிவிட்டதாக உணர்கிறேன், அதனால் இது அன்லவ் ஸ்டோரியாக வரும்" என்கிறார் சேத்தன். நாயகனின் தந்தை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர், நாயகி காஷ்மீர் முஸ்லீம் என காஷ்மீர் பின்புலத்தில் நடக்கும் கதையாம். திரைப்படங்கள் அளவுக்கு வரவேற்பு கிடைத்தது சரி, திரைப்படங்கள் அளவுக்கு எதிர்ப்பை பெறாமல் இருக்கிறதா பார்ப்போம்.                        

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மீண்டும் அதே இயக்குநர் - பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹூரோவாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் இப்படம் உருவாவதாகவும் இந்தி மற்றும் தமிழில் இப்படம் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

இப்படம் உறுதியாகும் பட்சத்தில் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாவார். ஏற்கனவே இசையமைப்பாளராக அனுராக் கஷ்யப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைத்திருந்தார். இப்போது இந்தியில் கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி, சூரரைப் போற்று ரீமெக் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அனுராக் கஷ்யப், விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

Next Story

சர்ச்சையை ஏற்படுத்திய திரைப்படம் - பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் சிறப்பு சலுகை

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
article 370 movie tax free in madhya pradesh

ஆதித்யா சுஹாஸ் ஜம்பாலே இயக்கத்தில் யாமி கவுதம், பிரியா மணி, அருண் கோவில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாத 23ஆம் தேதி வெளியான படம் ‘ஆர்டிக்கிள் 370’. பி62 ஸ்டூடியோஸ், தயாரிப்பில் ஜியோ ஸ்டூடியோஸ் வழங்கும் இப்படத்திற்கு ஷஷ்வத் சச்தேவ் இசையமைத்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு உருவாக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படம் வெளியாவதற்கு முன் படம் குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் சரியான தகவலைத் தெரிந்துகொள்ள இப்படம் உதவும். அது நல்ல விஷயம்” என்றார். இப்படம் ட்ரைலர் வெளியான பிறகும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படம் வெளியான பிறகு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்திற்கு வளைகுடா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டது. படத்தில் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் மத்தியப்பிரதேச அரசு இப்படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது. இதனை மத்தியப்பிரதேச முதல்வர் மோகன் யாதவ் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், “சட்டப்பிரிவு 370-ன் கசப்பான யதார்த்தத்தை மாநில குடிமக்கள் அறியும் வகையில், மத்தியப் பிரதேசத்தில் ஆர்டிக்கிள் 370 திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம். பிரதமர் மோடி ஜம்மு - காஷ்மீரில் இருந்து பிரிவு 370-ஐ நீக்கியதன் மூலம் ஜம்மு - காஷ்மீரில் வளர்ச்சிக்கான மகத்தான சாத்தியக்கூறுகளை திறந்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் கடந்த கால மற்றும் நிகழ்கால சூழ்நிலைகளை நெருக்கமாக புரிந்து கொள்ள இந்த படம் உதவுகிறது” என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய  “தி கேரளா ஸ்டோரி” படத்திற்கும் மத்தியப் பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.