Skip to main content

இதுக்காகவா திருமணத்தை நிறுத்துவாங்க! மணப்பெண் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ந்த உறவினர்கள்!!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

jlk

 

உத்தரப் பிரதேசத்தில் திருமணத்தை நிறுத்த மணப்பெண் கூறிய காரணத்தைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

 

இந்தியாவில் சில வருடங்களாக மணமக்கள் திருமண மேடைக்கு வந்த பிறகும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து திருமணங்களை நிறுத்துவது அவ்வப்போது நடந்து வருகிறது. மதுப் பழக்கம்,  குட்கா பயன்படுத்துதல், காதல் போன்ற பல்வேறு காரணங்களால் திருமணங்கள் பாதியில் நின்று போனது தொடர்பாக பல செய்திகள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இந்த மாதிரியான சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகிறது. அந்த வகையில் உ.பி மாநிலம் மங்கல்பூர் பகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த திருமணத்தை மணப்பெண் திடீரென நிறுத்தியதும், அதற்கு அந்த பெண் கூறிய காரணமும் அங்கிருந்த உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

 

உ.பி மாநிலம் மங்கல்பூரில் இன்று நடைபெறவிருந்த தனது திருமணத்தை மணமேடையில் இருக்கும்போது நிறுத்தியுள்ளார் இளம்பெண் ஒருவர். இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் அங்கிருந்த உறவினர்கள் விசாரித்த போது, அந்த பெண், " இந்த திருமணம் என் வாழ்வில் மிக முக்கியமான ஒரு தருணம். ஆனால் மணமகன் வீட்டில் இந்த நிகழ்ச்சியைப் புகைப்படம் எடுக்க ஒரு புகைப்பட கலைஞர்களையும் அழைக்கவில்லை. இதுவே செய்ய முடியாத ஒரு நபருடன் நான் இனி வரும் காலத்தை எப்படி வாழ்வேன். இவருடன் வாழ எனக்கு விருப்பமில்லை. அதனால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினேன்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, திருமணம் நின்றுபோவது உறுதியானதை தொடர்ந்து, காவல் நிலையம் சென்ற இரு குடும்பத்தாரும் தங்களுக்கான திருமண செலவைப் பிரித்து பங்கு போட்டுக்கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மணமகன் வராததால் அண்ணனையே திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
A young girl who married her brother because the groom did not come

மாநில அரசு சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் மணமகன் வராததால், அரசு நிதியுதவியைப் பெறுவதற்காகத் தனது அண்ணனையே ஒரு பெண் திருமணம் செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில அரசின் சமூக நலத்துறை சார்பில் அவ்வப்போது ஏழை மணமக்களுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், திருமணம் செய்யும் மணமக்களுக்கு ரூ. 51,000 மதிப்புள்ள பொருட்கள், ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 5 ஆம் தேதி அன்று மகராஜ்கஞ்ச் பகுதிக்கு அருகே உள்ள லகிம்பூரில் உத்தரப் பிரதேச மாநில அரசு சார்பில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மணமக்கள் கலந்து கொண்டனர். இதில், திருமணமான பெண்ணான பிரீத்தி யாதவ், அரசு நிதியுதவி பெறுவதற்காகப் பொய்யாக மீண்டும் தனது கணவர் ரமேஷ் யாதவ்வை திருமணம் செய்ய இருந்துள்ளார். ஆனால், குறித்த நேரத்தில் ரமேஷ் யாதவ் வரவில்லை.

இந்த நிலையில், அரசு நிதியுதவியைத் தவறவிடக் கூடாது என்று, பிரீத்தி யாதவின் அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்வது போல் நடிக்குமாறு அங்குள்ள தரகர்கள் பிரீத்தி யாதவ்விடம் கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்ட பிரீத்தி யாதவ், தனது அண்ணன் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், நிர்வாக அதிகாரியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசு நிதியுதவி பெறுவதற்காக பொய்யாகத் திருமணம் செய்துகொண்ட பிரீத்தி யாதவ், ரமேஷ் யாதவ், கிருஷ்ணா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.