பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில்
337 எம்.பி.க்கள் பங்கேற்பு
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பல மாநிலங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பு வகிக்கும் 1400 பேர், சில மாநிலங்களில் உள்ள சட்டமன்ற மேல்சபை உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற இரு அவைகளை சேர்ந்த 337 எம்.பி.க்கள் பங்கேற்கின்றனர்.
இதுதவிர, அனைத்து மாநில பா.ஜ.க. தலைவர்கள் செயலாளர்கள் என இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளும் நாளைய கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.