Skip to main content

ஏடிஎம்ல் பணமெடுக்கும் கணவன்மார்களே உஷார்...!!

Published on 08/06/2018 | Edited on 08/06/2018
atm

 

 

 

கணவராக இருந்தாலும் மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்த கூடாது என்று நுகர்வோர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

 

பெங்களூரைச் சேர்ந்த வந்தனா என்பவர் தனது ஏடிஎம் கார்டை கணவரிடம் கொடுத்து 25000 பணத்தை எடுத்துவர சொல்லியிருக்கிறார். கணவர் ஏடிஎம் மெஷினில் கார்டை போட்டும் அவருக்கு பணம் வரவில்லை. ஆனால் வந்தனாவுக்கு பணம் கழிந்துவிட்டது என்று மெசேஜ் சென்றுள்ளது. 

 

இதனால் குழம்பிபோனவர்கள், வங்கியை நாடியுள்ளார்கள். அவர்களிடம் இதைப்பற்றி கூறியதை கண்டுகொள்ளாமல் அவர்கள் கணவரிடம் எதற்கு உங்களின் பின் நம்பரை பகிர்ந்து கொண்டீர்கள் என்று கேட்டுள்ளனர். இது விதி மீறல் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

அதன்பின் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியதால், சிசிடிவி காட்சிகளை பார்த்திருக்கின்றனர். அப்போது ராஜேஷுக்கு சாதகமாக காட்சிகள் இருந்துள்ளது. இருந்தாலும் நீதிமன்றம் நீங்கள் செய்தது விதிமீறல் என்று சொல்லி நீதிமன்றம் இந்த தகவலை தள்ளுபடி செய்துள்ளது.

 

எனவே இனி உங்கள் ஏடிஎம் கார்டை கணவராக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்களிடம் பின் நம்பரை பகிர்வது விதிமீறல் ஆகையினால் இதுபோன்று ஏதேனும் பிரச்சனை நேர்ந்தால் உங்கள் பணம் கிடைக்காது. 

சார்ந்த செய்திகள்

Next Story

வங்கி மேலாளரைத் தாக்கிய பா.ஜ.க. நிர்வாகி; வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
BJP Administrator vs bank manager Shocked when the video was released

திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்குச் சொந்தமான  ஏ.டி.எம். ஒன்று உள்ளது. இந்த ஏ.டி.எம். மையத்திற்கு நேற்று (13.03.2024) பா.ஜ.க. மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் அபிலாஷ் என்பவர் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது வங்கியின் மேலாளர் பிரதீப், “ஏ.டி.எம். மையத்தில் சர்வீஸ் பணிகள் நடந்து கொண்டு இருப்பதால் பணம் எடுக்க கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அபிலாஷ் மேலாளரை கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து வங்கியின் மேலாளர் பிரதீப் மணவாளநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அபிலாஷை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் அபிலாஷை அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அபிலாஷ் வங்கியின் மேலாளர் பிரதீப்பை கொடூரமாகத் தாக்கும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியிலும், வங்கி ஊழியர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களின் சிசிடிவி கேமராக்கள் உடைப்பு!

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதி பிரதான சாலையில் உள்ள இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை, கொள்ளையர் ஒருவர் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களின் கதவுகளை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்துள்ளது. வெளியே வந்த பார்த்து சிசிடிவியில் தனது முகம் பதிவானதை அறிந்து கேமராவை உடைத்து சென்றுள்ளார்.

Close to Vaniyambadi, two ATM, centers CCTV cameras were broken

இதுகுறித்து வங்கியின் நிர்வாகத் தரப்பிலிருந்து புகார் ஏதும் எழாத நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபரின் முகம் தெளிவாகப் பதிவானதைத் தொடர்ந்து இவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.