Skip to main content

யூனிகார்ன் சி.இ.ஓ... முதல் இந்தியப் பெண்

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

aa

 

தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் இலாப மதிப்பை கணக்கிட்டு யூனிகார்ன் என்ற தகுதி வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நிறுவனம் யூனிகார்ன் தகுதியை பெற வேண்டுமென்றால் குறைந்தது ஒரு பில்லியன் டாலர்கள் அதாவது, 100 கோடி டாலர்கள் சந்தை மதிப்பில் அந்த நிறுவனம் செயல்பட வேண்டும். அப்படி யூனிகார்ன் மதிப்பை பெறும் நிறுவனத்தின் நிறுவனருக்கும் 'யூனிகாரின் தலைமை செயல் அதிகாரி' என்ற அந்தஸ்து வழங்கப்படும். இந்த யூனிகார்ன் தகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பு தேர்வு செய்து வழங்குகிறது.

 

இதனை முதல்முறையாக மும்பையைச் சேர்ந்த 27 வயதேயான இந்தியப் பெண் அங்கிடி போஸ் என்பவர் இந்த அந்தஸ்தை பெற்றிருக்கிறார். அங்கிடி போஸ் என்பவர் ஷிலிங்கோ எனும் ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை இயக்கிவருகிறார். இவர் அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

aa

 


தற்போதைய நிலவரப்படி அங்கிடி போஸ் நிறுவனமான ஷிலிங்கோவின் மதிப்பு 970 மில்லியன் டாலர்களாக உள்ளது. சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட ஷிலிங்கோ நிறுவனம் நான்கே ஆண்டுகளில் இந்த இடத்தை அடைந்துள்ளது. இந்தியாவின் பெங்களூருவிலும் இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

 


யூனிகார்ன் என்ற தகுதியை ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஷிலிங்கோவும், அந்நிறுவனத்தின் இணை நிறுவனரான இந்தியப் பெண்மணி அங்கிடி போஸுக்கு யூனிகாரின் தலைமை நிர்வாக அதிகாரி என்ற அந்தஸ்தும் தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்தை பெறும் முதல் இந்தியப்பெண்மணி அங்கிடி போஸ் என்பது இந்தியர்களின் பெருமைக்குரியது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சிஇஓ நியமனம்!

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
Kilambakkam Bus Station Appoints CEO

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காகச் செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பளவில் புதிய புறநகர்ப் பேருந்து முனையம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய புறநகர்ப் பேருந்து முனையக் கட்டுமானத்திற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு நிலம் மாற்றப்பட்டு, தொடர்புடைய அனைத்துக் கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி இந்த புதிய பேருந்து முனையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ எனப் பெயரிடப்பட்டு 393.74 கோடி ரூபாய் செலவில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இந்த பேருந்து முனையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 31 ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கிளாம்பாக்கம் மற்றும் குந்தம்பாக்கம் பேருந்து நிலையங்களை நிர்வகிக்க, தலைமை நிர்வாக அலுவலரை நியமித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில், “சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றி வரும் ஜெ. பார்த்திபன், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்களின் தலைமை நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சிஇஓ பதவிக்கு விண்ணப்பம்

Published on 08/10/2023 | Edited on 08/10/2023

 

Application for the post of CEO of Tamil Nadu Mercantile Bank

 

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வங்கிக் கணக்கில் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியிலிருந்து ரூ. 9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இதனையடுத்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குநருமான எஸ்.கிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாகத் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருந்தார். அதே சமயம் இவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் இருக்கும் நிலையில் ராஜினாமா செய்திருந்தது  நிதியாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 

இந்நிலையில் காலியாக உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பணியிடத்தை நிரப்ப அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த பதவிக்கு தகுதியுள்ளவர்கள் www.tmbnet.in./tmbcareers என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.