Skip to main content

6,096 பாதிப்பு... 2,194 டிஸ்சார்ஜ் - ஆந்திரா அப்டேட்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

m



உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவியது. ஆரம்பத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த ஆந்திராவில் தற்போது கரோனா மீண்டும் வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.

 

கடந்த 24 மணி நேரத்தில் 6,096 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 9,48,548 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 7,373 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 2,194 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 20 பேர் இன்று மட்டும் இந்த நோய்த் தாக்குதலால் பலியாகியுள்ளனர். 9,05,508 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்பு படிப்படியாக குறைந்து வருவது அம்மாநில மக்களுக்கு ஒரு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது. 
 

 

சார்ந்த செய்திகள்