Skip to main content

இரும்பு தாது சுரங்க ஒதுக்கீட்டில் 6 லட்சம் கோடி ஊழல் புகார்... மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்...

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

இரும்பு தாது எடுக்க சுரங்கத்திற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டதில் 6 லட்சம் கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு, ஒரிசா, கர்நாடகா, ஜார்க்கண்ட் மாநில அரசுகள் மற்றும் சிபிஐ ஆகியோருக்கு இது குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

6 lakh crore rupees corruption in iron ore mine allocation

 

 

நாடு முழுவதும் பல மாநிலங்களில் இரும்பு தாது எடுப்பதற்காக சுரங்க ஒதுக்கீட்டில் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான பெஞ்ச் இது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசு உட்பட பலருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்