Skip to main content

பூட்டிய வீட்டில் துணியால் கண் வாய் கட்டப்பட்ட நிலையில் 11 பேர் சடலம் !! திட்டமிட்ட கொலையா என போலீசார் விசாரணை !!

Published on 01/07/2018 | Edited on 01/07/2018

 

 

MURDER

 

 

 

டெல்லியில் பூட்டியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கியபடி 7 பெண்கள் உட்பட 11 பேர்  சடலங்கள் மீட்பு. 

 

டெல்லியில் புகாரியில் ஒரு உள்ள குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் கதவு பலமணிநேரம் பூட்டியிருந்தது. அக்கம் பக்கத்தினர் பலமுறை கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

அந்த தவகவலை அடுத்து அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கு 7 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் உட்பட 11 பேரின் சடலம் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.

 

மேலும் இறந்த அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கண்டறிந்துள்ளனர். தூக்கில் தொங்கிய அந்த 11 பேரின் கண்களும் வாயும் துணியால் கட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்தது   எனவே போலீசாருக்கு இது  திட்டமிட்ட கொலையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த சம்பவம் திட்டமிட்ட கொலையா? அல்லது உண்மையிலேயே தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் போலீசார் கைப்பற்றிய சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். 

சார்ந்த செய்திகள்