Skip to main content

வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக வலுக்கும் போராட்டம்! 3 நாட்களாகப் பெருகும் ஆதரவு!

Published on 07/06/2020 | Edited on 08/06/2020

 

THAMIMUN ANSARI


தாயகம் திரும்பத் தவிக்கும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி ஜூன் 5, 6 மற்றும் 7 ஆகிய மூன்று தினங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி, வலைத்தளங்களில் பதிவிடும் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று 3ஆவது நாளாக நடந்தது. 
 


நாகை மாவட்டம் திருப்பூண்டியில் நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்த, ம.ஜ.க. பொதுச் செயலாளரும், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கூறியதாவது,

வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பலர் கரோனா நெருக்கடியால் வருமானம் இழந்து தாயகம் திரும்பத் துடிக்கிறார்கள். அங்குள்ள இந்தியத் தூதரகங்கள் உரிய முறையில் உதவவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வருகிறது.

பிரதமர் மோடி அவர்கள், கரோனா தொடர்பில் அறிவித்துள்ள 20 லட்சம் கோடியில் 1,000 கோடியை ஒதுக்க வேண்டும். தமிழ் நாட்டுக்கு திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும், கப்பல்களை இயக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவர்களின் விமானம் மற்றும் கப்பல் செலவை மத்திய அரசு ஏற்க வலியுறுத்த தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும். தேசிய பேரிடர் நிவாரண நிதி, பிரதமர் நல நிதி (PM CARE FUND) ஆகியவற்றிலிருந்து மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்க முடியும். நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில், அவர்கள் ஈட்டிய அன்னிய வருவாய் பெரும் பங்காற்றியுள்ளது. இதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
 

 

 

mjk


அமெரிக்கா - ஈராக் இடையே முதல் வளைகுடா போர் நடந்தபோது ஒரே மாதத்தில் அன்றைய பிரதமர் சந்திரசேகர் அவர்கள் 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை திரட்டி வந்தார். ஒரு பலஹீனமான அரசியல் சூழலில் இருந்த அன்றைய ஜனதா தள பிரதமர் சந்திரசேகர் செய்ததை, இன்றைய பிரதமரால் செய்ய முடியாதா? 

ஆசிய நாடுகளில் வேலை செய்யும் தமிழர்களில் 1 லட்சம் பேர் ஊர் வர விரும்பினால், ஒரு நபருக்கு 15 ஆயிரம் மட்டுமே டிக்கேட் செலவாகும். இதற்கு 150 கோடி செலவாகும். ஐரோப்பாவிருந்து 10 ஆயிரம் பேர் ஊர் திரும்ப விரும்பினால், ஒருவருக்கு 30 ஆயிரம் எனில், 30 கோடி செலவாகும். அமெரிக்க, ஆஸ்திரேலியா கண்டங்களிலிருந்து 10 ஆயிரம் பேர் ஊர் திரும்ப விரும்பினால், ஒருவருக்கு 75 ஆயிரம் செலவாகும். இதற்கு 75 கோடி செலவாகும். இதற்கு மொத்தமே 255 கோடி ரூபாய் தான் செலவாகும். 
 

mjk


மத்திய அரசு இதைத் தர மறுத்தால், தமிழக அரசு அந்த செலவை ஈடுகட்ட வேண்டும். டாஸ்மாக் மூலம் ஒரு நாளைக்கு 85 கோடி வருமானம் உள்ள நிலையில், இதை ஒப்பிடும் போது மூன்று நாள் டாஸ்மாக் வருமானமே போதுமானது. இவ்வாறு பேட்டியளித்தார்.

இப்போராட்டத்தின்போது பெண்கள் தங்கள் வீட்டு வாசலில் நின்றவாறு பதாகை ஏந்தி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். கரோனா உச்சத்தில் இருக்கும் ஊரடங்கு நிலையிலும் இக்கோரிக்கைக்காக பொதுமக்கள் வீதிகளிலும், வீட்டு வாசல்களிலும் திரள்வது கவனிக்கதக்கது. உலகம் எங்கும் வாழும் தமிழக மக்கள் ம.ஜ.க.-வின் இக்கோரிக்கையை தமிழகத்திலும், உலகின் பல நாடுகளிலும் ஆதரித்து குரல் எழுப்பி வருகின்றனர்.
 

http://onelink.to/nknapp


பல்வேறு சமுதாய மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களையும் தாண்டி, ஊடகங்களிலும் இது விவாதமாகி வருகிறது. மூன்றாம் நாளான இன்று தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நகரங்கள், கிராமங்கள் தோறும் போராட்டங்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நடைப்பெற்று வருகிறது எனத் தெரிவித்தனர் ம.ஜ.க.வினர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.