Skip to main content

’’சித்தராமையாவிடம் பேசி பிரச்னையை தீர்க்க ஸ்டாலின் முயலலாம்’’- விஜயகாந்த் பேச்சு

Published on 06/04/2018 | Edited on 06/04/2018

 

dmdk


      காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில்   தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில்   கண்டன ஆர்ப்பாட்ட பொதுக்கூட்டம் நடந்தது.

 

     போராட்டத்தில்  விஜயகாந்தின்  மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனரும், துணை பொதுச்செயலாளருமான சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


 
போராட்டத்தில் பேசிய  பிரேமலதா ,’’ தமிழக மக்கள் அனைவருக்கும் சோறு போடும் விவசாயிகளே முதலாளிகள். எத்தனை கோடிகள் பணம் இருந்தாலும், தட்டில் சோறு இருந்தால் தான் உண்ணமுடியும். தேமுதிக ஆட்சிக்கு வந்தால் விவசாய மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

 

dmdk1

 

நமது நாடு எவ்வளவு முன்னேறியது என்பதை, நமது நாட்டு விவசாயிகளின் முன்னேற்றத்தின் மூலமே அறியலாம். எனவே விவசாயிகளின் பாதுகாவலான, உற்ற நண்பனாக தேமுதிக விளங்கும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் கொடுத்த கெடுவை மத்திய அரசு  புறக்கணித்துவிட்டது. கர்நாடக தேர்தலை முன்னிட்டு காலம் தாழ்த்தும் மத்திய அரசின் செயலை தேமுதிக கண்டிக்கிறது. ஸ்கீம் என்ற வார்த்தையால் விவசாயிகளின் வாழ்க்கையை ஸ்கிப் செய்து விட்டது மத்திய அரசு.

 

       750 கிமீ தூரத்திற்கு மேல் காவிரி செல்கிறது. அந்த நதியை நம்பியே விவசாயம், குடிநீர், பல்வேறு தொழில்கள்  உள்ளது. சம்பா, குறுவை, தாளடி என பயிரிடப்பட்ட டெல்டா பகுதி தற்போது வறண்ட பாலைவனமாக மாறுவதற்கு திமுகவும், அதிமுகவுமே தான்  காரணம். 

 

      1 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர்.  விவசாயத்தையும், நெசவு தொழிலையும் சீர்படுத்தினால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். அதேபோல் விவசாயிகள் பயனடையும் வகையில் 100 நாள் வேலையை மாற்றி அமைக்க வேண்டும். யானை கட்டி போரடித்த டெல்டா பகுதி, யானைக்கு சோறிட முடியாமல் தவிக்கிறது. நதிகள் இணைப்பு மூலம் தமிழகத்தை வளப்படுத்தலாம். ரூ.10 ஆயிரம் கோடி இருந்தால் நதிகள் இணைப்பு சாத்தியம். வளமான தமிழகம் அமைய காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘’  என்றார். 

 

ஆர்ப்பாட்ட கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், ‘’ விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். எல்லா கட்சிகளும் ஏமாற்றுகின்றன என்பதனை மக்கள் உணர வேண்டும். காவிரி பிரச்னையில் திமுக போராட்டம் நடத்துகிறது. அவர்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் ஆட்சிதானே கர்நாடகாவில் நடக்கிறது. கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம் பேசி பிரச்னையை தீர்க்க முயலலாமே.  காவிரி விவகாரத்தில் அனைவரும் கபடநாடகம் ஆடுகின்றனர். விவசாயிகள் பிரச்னை தீர காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீர வேண்டும்’’  என்றார் கரகரத்தக்குரலில்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“கொட்டும் முரசு சின்னம் தேமுதிகவுக்கு மட்டுமே  சொந்தம்” - சீமான் பேச்சுக்கு விஜயகாந்த் மகன் பதிலடி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Vijayakanth son of Seaman said that Murasu symbol belongs only to dmdk

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு ஒன்றிய பகுதிகளில் தேமுதிக நிறுவனத் தலைவர் மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் வருகை தந்தார். அப்போது வத்தலகுண்டு காளியம்மன் கோவில், புதுப்பட்டி, விராலிப்பட்டி, குன்னூத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் தேமுதிக கொடியை ஏற்றி வைத்த விஜய பிரபாகரன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தேமுதிக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்று மேடையில் பேசிய விஜய பிரபாகரன் சீமானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசும்போது, “திமுக - அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் பெற்ற மூன்றாவது கட்சி தேமுதிக மட்டுமே. பத்தாண்டுகள் தோல்விகளை சந்தித்து இருந்தாலும் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவின் சொத்தாக உள்ளது. அண்ணன் சீமான் கொட்டு முரசு சின்னம் தேமுதிகவுக்கு இல்லை என்றது போல் தவறான பரப்புரைகளில் ஈடுபட்டு, தேமுதிக தொண்டர்களையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடாது.

மேலும் ஹீரோக்களை நம்பி வாக்களிப்பது, ஜாதியை பார்த்து வாக்களிப்பது என்பது இருந்துவிடக் கூடாது. தமிழ் மக்களின் நலன் காப்பவர்கள் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். இந்த விழாவில் நகரம், ஒன்றியம், மாவட்ட பொறுப்பாளர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Next Story

சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் விஜயகாந்த் பெயரில் விருது!

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Award in the name of Vijayakanth at the International Norway Tamil Film Festival!

15 வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘வீரத்தின் மகன்’ திரைப்பட திரையிடல் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

நார்வே தமிழ்த் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் பேசுகையில், “ஆஸ்கார் உள்ளிட்ட வெளிநாட்டு விருதுகள் மற்றும் திரைப்பட விழாக்களின் பின்னால் நம் மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என்று தனியான திரைப்பட விழாக்கள் இல்லை. சுமார் 222 நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவர்களது படைப்புகளுக்கும் தனி அங்கீகாரம்  கிடைக்க வேண்டும், அதற்காக தமிழர்களுக்கான திரைப்பட விழா ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நான் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நினைத்து வந்தேன். பிறகு 20210 ஆம் ஆண்டு அதற்கான முதல் அஸ்த்திவாரத்தை அமைத்து, சிறுக சிறுக என்று இன்று மிகப்பெரிய விழாவாக நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் ஆரம்பிக்கும் போது எனக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. நார்வே நாட்டில் 15 ஆயிரம் மக்கள் தான் இருப்பார்கள், ஏதோ ஒரு திரைப்பட விழா என்று தான் நினைப்பார்கள். ஆனால், இன்று சுமார் இரண்டரை கோடிக்கு மேல் நான் விதைத்திருக்கிறேன். நம் படைப்புகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சி தான் இந்த திரைப்பட விழா. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட 25 கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது வழங்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், அவர்களை அங்கே அழைத்து செல்வது என்பது மிகப்பெரிய பொருட்செலவு. அதனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், விருது அறிவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று கெளரவிக்க வேண்டும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு முதல்,  ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த எங்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக அறிவிக்கிறோம். நாங்கள் தொடர்ந்து இந்த விழாவை நடத்திக் கொண்டிருப்போம். எனக்கு பிறகு என் இடத்தில் இருந்து நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்துவார்கள். நிச்சயம் ஒரு நாள் ஆஸ்கார் விருதுக்கு சமமான விருதாக சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விருது இருக்கும், என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.