Skip to main content

மீண்டும் இலங்கை பிரதமரானார் ரணில் விக்ரமசிங்க

Published on 16/12/2018 | Edited on 16/12/2018
r

 

இலங்கையில் திடீரென பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சே நேற்று பதவி விலகியதை அடுத்து இலங்கை புதிய பிரதமராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுக்கொண்டார்.  இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேன பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  

இதையடுத்து, ஜனநாயகத்தை காக்க போராடிய மக்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார் ரணில் விக்கிரமசிங்க.   

 

இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால் ரனில் விக்ரமசிங்கவை  நீக்கிய சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதி புதிய பிரதமராக நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் நிலவியது. மேலும் குழப்பம் அதிகரிப்பதை விரும்பாத ராஜபக்சே, நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ராஜபக்சே பதவி விலகியதை தொடர்ந்து புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கே மீண்டும் பதவியேற்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

"எனக்கு நேரம் கொடுங்கள்"- நாட்டு மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே வேண்டுகோள்!

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

"Give me time" - Ranil Wickremesinghe appeals to the people of the country!

 

இலங்கையின் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்கே, இன்று (16/05/2022) மாலை முதன்முறையாக தொலைக்காட்சி மற்றும் காணொளி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 

 

அவர் கூறியதாவது, "நாட்டைக் காப்பாற்ற மிகப்பெரிய சவாலை ஏற்றுள்ளேன்; எனக்கு நேரம் கொடுங்கள். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது. என்னிடம் கைப்பிடி இல்லை,  என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். அனைத்து எரிபொருள் விற்பனையிலும் அரசுக்கு இழப்பு; ஒரு யூனிட் மின் விநியோகத்திலும் இழப்பு 30 ரூபாய். எரிவாயு இறக்குமதிக்கு தேவைப்படும் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவது கடினமாக உள்ளது. 

 

கடந்த நான்கு மாதங்களாக மருந்து இறக்குமதிக்கான தொகையை அரசு செலுத்தவில்லை. வரும் இரண்டு மாதங்கள் நமது வாழ்வில் மிகவும் கடினமானதாக இருக்கும். எதிர்காலத்தில் சலுகைகள் கொண்ட வரவு செலவு திட்டத்தை அரசு முன் வைக்கும். நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது". இவ்வாறு இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார். 

 

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் பிரதமரின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

 

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசுக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் திடீரென ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Next Story

கோத்தபய ராஜபக்சேவுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிய ரணில்!

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

இலங்கை அதிபர் தேர்தலில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இந்நிலையில் இலங்கையின் எட்டாவது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார்.
 

ranil wickremasinghe

 

 

இலங்கையில் 8வது அதிபர் தேர்தல் 16.11.2019 சனிக்கிழமை அன்று நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அதில் பொதுஜன பெரமுனா கட்சியின் கோத்தபய ராஜபக்சே 6,924,255 வாக்குகள் (52.25%) பெற்று வெற்றி பெற்றதாக, அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான கட்சியான புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 5,564,239 வாக்குகள் (41.99%) பெற்று தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து திங்கட்கிழமை அன்று அனுராதாபுரம் நகரில் புத்த கோவிலுக்கு அருகே நடைபெற்ற நிகழச்சியில் முறைப்படி இலங்கையின் 8வது அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றார். இலங்கை அதிபராக பதிவியேற்றப்பின் உரையாற்றிய கோத்தபய ராஜபக்சே, “இந்த நாட்டில் வாழும் அனைவருக்குமான சலுகைகள், சமாதானம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் தன்னாளான உதவிகள் அனைத்தையும் செய்வேன். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு முன்னேற்றத்திற்கும் முழு மூச்சுடன் இறங்கி செயல்படுவேன். நாட்டிலுள்ள புறாதானமான அனைத்திற்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு மதம், இனம் என்று பாராமல் எல்லா மக்களையும் ஒரேவிதமாக வழிநடத்துவேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கே தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி வைத்தார்.