Skip to main content

வெளியாகி 2 மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸில் காலா வெளயீடு! - பேஸ்புக் லைவ்!

Published on 07/06/2018 | Edited on 07/06/2018
kala


நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள காலா திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்பட்டு 2 மணி நேரத்தில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேச அறிவுப்புக்கு பின் பெரும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் காலா திரைப்படம் இன்று வெளியானது. தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கே ரசிகர் காட்சிகள் திரையிடப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்கள் காட்சி திரையிடப்பட்டு முடிவடைவதற்குள்ளே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் காலா திரைப்படம் வெளியானது. திரைப்படம் வெளியாகி இரண்டு மணி நேரத்திற்குள் இணையதளத்தில் படம் வெளியான சம்பவம் தயாரிப்பாளர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

kaala


முன்னதாக நேற்று, காலா முழு திரைப்படத்தையும், ரசிகர் ஒருவர் வெளிநாட்டில் இருந்து பேஸ்புக்கில் நேரலை செய்தார். இதைக்கண்டு பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனைக்கண்டித்து பலரும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் கண்டனங்களை பதிவு செய்ய, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் பேஸ்புக்கில் நேரலை செய்த அந்த இளைஞர் கைது செய்யப்பட்டதாக டிவிட்டரில் தெரிவித்தார்.

இப்படி பேஸ்புக் நேரலை, தமிழ்ராக்கர்ஸ் இணைதள வெளியீடு என தகவல் தொழில்நுட்ப குற்றங்களால் காலாவின் எதிர்ப்பார்ப்புகள் காலாவதியாகிவிட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.