Skip to main content

14 வயது சிறுமிக்கும் எச்.ஐ.வி ரத்தம் - நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பம்

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

 

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு  எச்.ஐ.வி   ரத்தம் ஏற்றிய அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து சென்னை மாங்காட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கும்  எச்.ஐ.வி   ரத்தம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி அதிர வைத்துள்ள நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச்சேர்ந்த சிறுமிக்கும் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டுள்ள சம்பவம்  பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது.

 

si

 

கடந்த 2009ம் ஆண்டில்  செப்டம்பர் மாதம் மானாமதுரையைச்சேர்ந்த  14வயது சிறுமிக்கு அடிக்கடி மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறியதால் ரத்தம் வருவதை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்  என்று தனியார் கிளினிக்கில் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.  அதன் பின்னர் செப்டம்பர் 25, 26 தேதிகளில் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுமிக்கு இரண்டு யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது.  சிகிச்சைக்கு பின்னர் மூக்கில் ரத்தம் வருவது நிற்காததுடன்,  உடலில் புண்கள் ஏற்பட்டுள்ளன.  இதையடுத்து 2010ம் ஆண்டில் ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் சிறுமிக்கு எச்.ஐ.வி.  தொற்று இருப்பது தெரியவந்து குடும்பத்தினர் அதிர்ந்து போயுள்ளனர்.  

 

எச்.ஐ.வி பாதிப்பின் வலியுடன் கடந்த  8 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் அந்த இளம்பெண். சாத்தூர், மாங்காடு பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் வெளியே வந்ததும் மானாமதுரை இளம்பெண்ணும் இந்த பிரச்சனையை வெளியே சொல்ல முன்வந்துள்ளார்.

 


 எந்த வித தவறும் செய்யாமல் இப்படி ஒரு நிலைமைக்கு ஆளாகி, பலரின் கேலி, கிண்டல்களால் மனம் நொந்து போய் பல சமயங்களில் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.  கதவை உடைத்து ஒவ்வொரு முறையும் காப்பாற்றியிருக்கின்றனர்.  என் மகளை காப்பாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டிருக்கிறோம் என்று  அந்த இளம்பெண்ணின் தந்தை வேதனையுடன் தெரிவிக்கிறார்.

 


இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது.   வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, வாதாடிவருகிறார்.   பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உலகிலேயே ஹெச்.ஐ.வி வைரஸ் குணமான 2வது நபர்... 

Published on 09/03/2019 | Edited on 09/03/2019
the london


எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த ஒருவருக்கு அவரது உடலிலிருந்து முழுமையாக ஹெச்.ஐ.வி வைரஸ் நீக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஹெச்.ஐ.வி வைரஸ் முழுவதுமாக நீக்கப்படுவது இரண்டாவது முறை ஆகும்.
 

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பிரிட்டனை சேர்ந்த இந்நபரை ‘தி லண்டன் பேசண்ட்’ என அழக்கின்றனர். இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. இதனையடுத்து தொடர் சிகிச்சையில் இருந்தவருக்கு 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது ஹெச்.ஐ.வி வைரஸ் முழுவதுமாக நீங்கிவிட்டதாக லண்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எய்ட்ஸ் நோய் அறிகுறி இல்லையென்றாலும் எய்ட்ஸ் முற்றிலுமாக இந்த நபரைவிட்டு நீங்கியதா என்பதை சில காலம் கழித்துத் தான் அறிய முடியும் என்கிறார் பேராசிரியரும் ஆய்வாளருமான ரவீந்திர குப்தா.
 

தற்போதைய மருத்துவ அறிவியல் சூழலில் இவர் உடலில் ஹெச்.ஐ.வி வைரஸ் இல்லை என்பதே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

சென்னை பெண்ணுக்கும் எச்.ஐ.வி. ரத்தம் - அறியாதவராகவா இருக்கிறார் விஜயபாஸ்கர்?

Published on 28/12/2018 | Edited on 28/12/2018

சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைப் போல், சென்னையிலும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் செலுத்தியதன் மூலம் எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. 

 

v

 

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த ஆகஸ்ட் மாதத்தில்,  நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, ரத்தசோகை காரணமாக,  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தியிருக்கின்றனர். பிறகு,  அவர் எட்டு மாத கர்ப்பிணியாக  இருந்தபோது ரத்தப் பரிசோதனை செய்திருக்கின்றனர். அப்போது எச்.ஐ.வி. தொற்று அவருக்கு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் கணவருக்கும் ரத்தம் சோதனை செய்தபோது.  எச்.ஐ.வி. தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டிருக்கிறாது.

 


இதுகுறித்து, அந்தப் பெண் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி டீன் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 2-ஆம் தேதி பதிவுத்தபால் மூலம் புகார் அனுப்பியிருக்கிறார். அரசுத் தரப்பிலோ, அந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனாலும், அரசு மருத்துவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஏ.ஆர்.டி. எனப்படும் கூட்டு மருந்து வழங்கி வருகின்றனர். 
செப்டம்பர் 15-ஆம் தேதி அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தைக்கும் எச்.ஐ.வி. தோற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, தாய்ப்பால் கொடுப்பதற்கு அந்தப் பெண்ணை அனுமதிக்கவில்லை. புட்டிப்பால் மூலம் அந்தப் பெண், தன் குழந்தையை வளர்த்து வருகிறார். 

 


இந்த விவகாரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்..” என்று கூறியிருக்கிறார். நவம்பர் 2-ஆம் தேதியே புகார் அனுப்பப்பட்டு, கடந்த 4 மாதங்களாக அந்தப் பெண்ணுக்கு கூட்டு மருந்து வழங்கி வருவதை அறியாதவராகவா இருக்கிறார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்?

 


.எச்.ஐ.வி. பூதம் இன்னும் எந்தெந்த அரசு மருத்துவமனைகளில் இருந்து கிளம்பியிருக்கிறதோ? அரசு மருத்துவமனைகளில் ரத்தம் ஏற்றியவர்களெல்லாம் பீதியில் உள்ளனர்.