Skip to main content

பக்தர்களை ஏமாற்றிய அரசாங்கம் – பணக்காரர்களுக்கு சுலபமாக அண்ணாமலையார் தரிசனம்?.

Published on 29/04/2018 | Edited on 30/04/2018
annamaliyar girivalam

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் தென்னிந்தியாவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமியன்றும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரே மலையாக உள்ளார் என 14 கி.மீ விட்டம்வுள்ள மலையை வலம் வருகிறார்கள்.

 

பௌர்ணமி தோறும் வரும் பக்தர்கள் அளவை விட கார்த்திகை மாத பௌர்ணமியன்றும், சித்திரை மாத பௌர்ணமியன்று அதிகளவு பக்தர்கள் வருவார்கள். அதாவது சுமார் 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதற்காக ஒவ்வொரு வருடமும் இந்த இரண்டு பௌர்மணயின் போது மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 2018 சித்திரை மாத பௌர்ணமி ஏப்ரல் 29ந்தேதி காலை 6.35க்கு தொடங்கி ஏப்ரல் 30ந்தேதி காலை 6.30க்கு முடிகிறது.

 

15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் 2 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படுகின்றன. 2 ஆயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகின்றனர், பக்தர்களின் நலனுக்காக நூற்றுக்கும் அதிகமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி.

 

குடிநீர் ஏற்பாடுகள் கிரிவலப்பாதை மற்றும் கோயில் வளாகத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, 9 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்கு குடிநீர், கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது, வெயில் காலம் என்பதால் கிரிலப்பாதையில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை சாலையில் தண்ணீர் ஊற்றப்படும், இதனால் பக்தர்கள் வெயில் சூடுயில்லாமல் நடந்து செல்லலாம், கோயிலுக்குள் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என 28ந்தேதி மாலை 5 மணிக்கு கோயில் வளாகம், தற்காலிக பேருந்து நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

அமைச்சர் குறிப்பிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுயிருந்ததா என கண்காணித்தபோது, சிறப்பு ஏற்பாடுகள் என்பது பெரும்பாலும் எதுவும் செய்யவில்லை என தெரியவந்தது. காலை 11 மணிக்கு மேல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது, இதனால் கிரிவலப்பாதையில் பக்தர்கள் நடக்க முடியாமல் தவித்தனர். கிரிவலப்பாதையில் சுமார் 5 கி.மீ வரையே மரங்கள் அடர்ந்துயிருக்கும் அந்த பகுதியில் கிரிவலம் வரும்போது மட்டும் காலுக்கு சூடு தெரியாது. மற்ற இடங்களில் வெயில் சூடு தெரியும். இதை கவனத்தில் கொண்டு பக்தர்கள் ஓய்வு அறைகளை அமைக்கவில்லை மாவட்ட நிர்வாகம்.

அதோடு ஈசான்யம் மைதானம், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், மார்க்கெட்டிங் கமிட்டி, தண்டராம்பட்டு சாலை போன்ற தற்காலிக பேருந்து நிலையங்களில் 10க்கு 10 அளவில் பேனர்களால் அமைக்கப்பட்ட பயணிகள் ஓய்வு நிலையம் என அமைக்கப்பட்டது. மற்ற மாதங்களில் சரி. கோடை வெயில் தமிழகத்தில் சுட்டெரிக்கும் மாவட்டத்தில் 3வது மாவட்டமாக திருவண்ணாமலையுள்ளது. அப்படிப்பட்ட மாவட்டத்தில் லட்சகணக்கான பக்தர்கள் வரும்யிடத்தில் ஒரு நூறு பேர் அமரும் அளவுக்காவுது இந்த மாதம் ஒய்வு அறை அமைத்துயிருக்கலாம் என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

 

அதேபோல் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கிரிவலப்பாதை முழுவதும் சாலையில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. அதனையும் முறையாக செய்யவில்லை. கடமைக்கு என செய்தனர்.

கிரிவலப்பாதையில் உள்ள தண்ணீர் டேங்க்களில் பக்தர்கள் குடிக்க நிரப்பப்படும் தண்ணீர் 2 அல்லது 3 மணி நேரத்தில் காலியாகிவிடுகின்றன. இதனால் பக்தர்கள் குடிதண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தொடர்ச்சியாக தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கார்த்திகை மாத தீபத்திருவிழாவின் போதும், சித்திரை மாத பௌர்ணமியின் போது பக்தி அமைப்புகள் பக்தர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றனர், மாவட்ட நிர்வாகமாகட்டும், ஆய்வுக்கு வரும் அமைச்சர்களாகட்டும் இந்தமுறை அந்த பிரச்சனை இருக்காது என ஒவ்வொரு முறை வாக்குறுதி தருகின்றனர். அந்த வாக்குறுதிகள் காற்றோடு போய்விடுகின்றன. இந்த முறையும் அதேதான் நடந்தது.

 

திருவண்ணாமலை மாவட்ட திமுக உட்பட சமய அமைப்புகள், தொண்டு அமைப்புகள் பலயிடங்களில் பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர், மோர் வழங்கினார்கள். அதுவே பக்தர்களின் தாகத்தை தீர்த்தது. கோயில் நிர்வாகம் சார்பில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தண்ணீர், மோர் தரப்படும் என அமைச்சர் அறிவித்தார். இலவச தரிசனம் செய்ய சென்றவர்களுக்கு தண்ணீர் சுலபமாக கிடைத்தது. 50 ரூபாய் டிக்கட்டில் சென்ற பக்தர்களுக்கு தண்ணீர் வசதியே செய்யப்படவில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.

 

அதோடு, கோயிலுக்குள் சிறப்பு தரிசனம் இல்லை என்றார் அமைச்சர். ஆனால் விவிஐபிகளுக்காக சிறப்பு வழி ஏற்படுத்தப்பட்டு அந்த வழியாக கோயிலுக்குள் சென்று சுலபமாக தரிசனம் செய்துவிட்டு வந்தனர். கோயிலுக்குள் உள்ள புரோக்கர்களும், சில சிவாச்சாரியர்களும் தங்கள் பங்குக்கு பணம் வாங்கிக்கொண்டு அதே வழியில் பணம் தரும் பக்தர்களை அழைத்து சென்று அண்ணாமலையார், உண்ணாமலையம்மனை தரிசிக்கவைத்தனர். முறையாக கோயில் நிர்வாகத்தில் வழங்கப்படும் தரிசனத்துக்கான அனுமதி டிக்கட் வாங்கிக்கொண்டும், அதை வாங்க முடியாதவர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நின்று தரிசனம் செய்பவர்கள் பல மணி நேரம் காத்திருந்தே தரிசனம் இந்தமுறையும் செய்தனர்.

 

கிரிவலத்துக்காக வரும் வாகனங்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த ஆன்லைன் புக்கிங் வசதியை மாவட்ட எஸ்.பி பொன்னி துவக்கிவைத்தார். 29ந்தேதி இந்த சேவை துவங்கும் என்றார். 28ந்தேதி காலையே புக்கிங் முடிந்தது என்றது அந்த வெப்சைட். அதுமட்டும்மல்ல முறையாக காவல்துறை வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யாதது, சரியான சாலை வசதிகள் இல்லாததால் ஒவ்வொரு சாலையிலும் 5 கிலோ தூரத்துக்கு வாகனங்கள் சாலையின் இருபுறமும் நின்றதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளது.

 

கோடை விடுமுறை, வாரவிடுமுறை போன்றவற்றால் 28ந்தேதி மாலையே பக்தர்கள் கிரிவலம் துவங்கிவிட்டார்கள், லட்சகணக்கான பக்தர்கள் தற்போது கிரிவலம் வருகிறார்கள். பக்தர்களுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து தருவோம் என அரசுத்துறைகள் அறிவித்தன. ஆனால் இந்தமுறையும் மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் பக்தர்களை நன்றாக ஏமாற்றியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

 girivalam

 

girivalam 1

 

girivalam 2

 

girivalam 3

 

girivalam 4girivalam 5girivalam 6

 

girivalam 7girivalam 8girivalam 9girivalam 10girivalam 11girivalam 12girivalam 13girivalam 14

 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.