Published on 20/11/2018 | Edited on 20/11/2018

பபாசி நடத்திவரும் புத்தக திருவிழா ஒவ்வொரு ஊர்களிலும் வருடா, வருடம் நடைபெறும். சென்னை புத்தக திருவிழா நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள், இலட்சக்கணக்கான புத்தகங்கள் என பிரம்மாண்டமாக நடைபெறும். 2019ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் சென்னை புத்தக திருவிழா ஜனவரி 4 முதல் 20ம் தேதிவரை நடைபெற இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த முறை 14 நாட்கள் நடைபெறவிருக்கிறது. உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சிகளுல் ஒன்றான ஷார்ஜா புத்தக கண்காட்சியில் முதன்முதலாக தமிழ் அரங்குகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டன. இதில் பபாசி கலந்துகொண்டது. அதன்பின் நடைபெறவிருக்கும் முதல் சென்னை புத்தக திருவிழா இது, என்பது குறிப்பிடத்தக்கது.