Skip to main content

அரியலூர் மாவட்டத்தில் எந்தெந்த கடைகள் திறக்க அனுமதி... தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எவை? கலெக்டர் அறிவிப்பு

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
ariyalur



அரியலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கலெக்டர் அறிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பாதுகாப்பு பகுதி தவிர இதர பகுதிகளில் கடைகள் மற்றும் அதன் தொடர்பான பணி நேரங்கள் பின்வருமாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது. 


தனிக்கடைகளாக செயல்படும் கட்டுமான ஹார்டுவேர் கடைகள், சிமெண்ட் கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், சானிடரிவேர் கடைகள், மின்சாதன பொருட்கள் நகர்புறங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், கிராமபுறங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கம் செய்யும் கடைகள், கணிப்பொறி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள், மோட்டார்கள், கண்கண்ணாடி விற்பனை கடைகள் நகர்புறங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும், கிராமபுறங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.

 

 


அரியலூர் மாவட்டத்தில் அயன்ஆத்தூர், இடையத்தாங்குடி கல்லக்குடி, காவனூர், உல்லியக்குடி, சொக்கநாதபுரம், வஞ்சினாபுரம் ஆகிய கிராமங்களில் ½ கிலோமீட்டர் இடைப்பட்ட பகுதியும், காவனூர் அம்பாபூர், காத்தான்குடிகாடு, நாகமங்லம் - காஞ்சலிக்கொட்டாய், கொலையனூர் - நத்தவெளி,  நத்தக்குழி - நல்லான்காலனி, பெரியாக்குறிச்சி - பெரியாக்குறிச்சி காலனி, சிறுகளத்தூர் - பொன்பரப்பி, அங்கராயநல்லூர் - சிலால், நமங்குணம் - பாலையூர், பாலையூர் - என்.குடிகாடு, பழமைநாதபுரம் ஆகிய கிராமங்களில் ½ கிலோமீட்டர் இடைப்பட்ட பகுதியும், நக்கம்பாடி, பெருமாண்டி ஆகிய கிராமங்களில் 2 கிலோ மீட்டர் உட்பட்ட பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டப்பட்ட பகுதிகளாகும்.

 

 

ar



அரியலூர் நகரம் (வார்டு எண்-11) செட்டி ஏரி , சந்தைபேட்டை, வண்ணாங்குட்டை, பெரியஏரி தெரு, எம்.ஜி.ஆர்.நகர், கவரைத்தெரு, மார்க்கெட் தெரு, ராமலிங்க முதலியார் தெரு, சிங்காரத்தெரு, சிந்தாமணித்தெரு, கோர்ட் தெரு, பவுண்டுத்தெரு. சடையப்பர் தெரு ஆகியபகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகும்.   நகர்பகுதிகளில் கட்டுமானப் பணிகள் பணியிடத்திலேயே பணியாளர்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்படும். பணியாளர்களை ஒரு முறை மட்டும் வேறு இடத்திலிருந்து அழைத்துவர அனுமதிக்கப்படும். அதற்கான வாகன அனுமதியினை பெறவேண்டும்.

அரியலூர் மாவட்டம் முழுவதும் சலூன் கடைகள், அழகு நிலையங்கள், மால்கள், ஷாப்பிங் காம்பளக்ஸ் (வணிக வளாகங்கள்) ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், இருசக்கர நான்கு சக்கர வாகன ஷோரூம்கள், நகை அடகுக்கடைகள் செயல்பட அனுமதி கிடையாது.


அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டும் வீட்டிலிருந்து வெளியில் வரவேண்டும். இருசக்கர வாகனம் எனில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். நான்கு சக்கர வாகனம் எனில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். உரிய வாகன அனுமதி அல்லது அரசு பணியாளர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். அவசர மருத்துவம், இறப்பு போன்ற தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் செல்பவர்கள் உரிய வாகன அனுமதி பெற்று பயணிக்க வேண்டும்.

 

 


தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்து பணியிடத்திற்கு செல்வதற்கு தொழிற்சாலை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் மட்டுமே பயணிக்க வேண்டும். இவர்கள் இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்ல அனுமதி கிடையாது. பிளம்பர், எலெக்ட்ரிசன், ஏ.சி. மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் பணிபுரிய இணையதளம் மூலம் உரிய வாகன அனுமதி பெற வேண்டும். தங்கும் வசதியுடன் கூடிய ஓட்டல்கள் செயல்பட அனுமதி இல்லை. மற்ற உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. (பார்சல் மட்டும்) உணவகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. 

 

 

ariyalur collector office




சைக்கிள் ரிக் ஷா, டாக்ஸி, ஆட்டோ, திரையரங்கம், விளையாட்டு பொருட்கள் விற்பனை கடைகள், நீச்சல் குளம், பொழுதுபோக்கு  பூங்காக்கள், பார்கள், லாட்ஜ் , உடற்பயிற்சி நிலையங்கள், மத வழிப்பாட்டு நிகழ்ச்சிகள், மதவழிப்பாட்டு தளங்கள், பேருந்துகள், ரயில், பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை. 

அனைத்து கடைகளுக்கும் முன்னர் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி நிற்பதற்காக 1 மீட்டர் இடைவெளியில் வெள்ளை கோடுகள் பெயிண்டினால் வரையப்பட்டிருக்க வேண்டும். விதி முறைகளை மீறி செயல்படும் கடைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும்.  அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சோப்பு சானிடைசர் கொண்டு கைகளை அவ்வப்போது கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். 


மேற்படி அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி கொண்டு தினமும் இருவேளைகள் சுத்தம் செய்ய வேண்டும். பணியாளர்கள், கடைக்கு வரும் பொதுமக்கள் கை கழுவ சோப்பு, தண்ணீர் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். கடையின் முன்பும், கடையின் உள்ளேயும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும். 

அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 35 பேர் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தனர். இன்று ஒரே நாளில் மருத்துவ பரிசோதனை அறிக்கையில் 188 பேர்களுக்கு புதிதாக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்டம் விட்டு மாவட்டம் தாவும் சிறுத்தை; இரவு பகலாகத் தேடும் வனத்துறை - மிரட்சியில் மக்கள்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People are afraid because of movement of leopards in Ariyalur

கடந்த சில நாட்களாக மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த செய்தியால் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும் அச்சமும் ஏற்பட்டது. இதனையடுத்து, தற்போது அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதை பொதுமக்கள் நேரில் பார்த்துள்ளனர். இதனால் செந்துரையைச் சுற்றிலும் உள்ள கிராம மக்கள் பயத்திலும் அதிர்ச்சியிலும் தூக்கம் இன்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம்(11.4.2024) இரவு செந்துறை அரசு மருத்துவமனை பகுதியில் சிறுத்தை புகுந்ததை பூங்கோதை என்ற பெண்மணி உட்பட சிலர் நேரில் பார்த்துள்ளனர். பயந்து மிரண்டு போன அவர்கள் உடனடியாக செந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். உடனடியாக காவல்துறை தீயணைப்புத்துறை பொதுமக்களும் அங்கு திரண்டனர். காவல்துறையினர் மருத்துவமனை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மருத்துவமனை சாலையில் குறுக்கே சிறுத்தை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் இணைந்து சிறுத்தையைத் தேட தொடங்கினர்.

People are afraid because of movement of leopards in Ariyalur

அப்போது ஒரு வெல்டிங் பட்டறை அருகே சிறுத்தை பதுங்கி இருந்ததை இளைஞர்கள் கண்டனர். அவர்கள் சிறுத்தையை விரட்ட சிறுத்தை அங்கிருந்து ஏந்தல் என்ற ஏரிக்குள் பாய்ந்து சென்று மறைந்துள்ளது. பின்னர் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். ஆனால் விடிய விடிய தேடியும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், அந்தச் சிறுத்தை செந்துறை அருகில் உள்ள உஞ்சினி, பொன்பரப்பி, சிதலவாடி, பகுதிகளில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான முந்திரி காடுகளுக்குள் புகுந்து பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் கோவை மாவட்டம் வால்பாறை மலை காடுகளில் இருந்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினரை செந்துறை வரவழைத்தனர். அவர்கள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிவதில் நிபுணர்கள் என்று கூறப்படுகிறது.

People are afraid because of movement of leopards in Ariyalur

இதையடுத்து அரியலூர் மாவட்ட வன அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனத்துறையினர் ட்ரோன் கேமரா மூலமும் அப்பகுதியில் உள்ள ஓடை பகுதியில்  கண்காணித்ததோடு, சில இடங்களில் கூண்டு வைத்து அந்தக் கூண்டுக்குள் ஆடுகளை விட்டு சிறுத்தையை வரவழைத்து பிடிப்பதற்கு கடும் முயற்சி செய்து வருகின்றனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது செந்துறைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகியுள்ளது. நின்னையூர், பகுதியில் சிறுத்தையின் காலடித்தடம் பதிந்துள்ளது.

மேலும் செந்துறை பகுதியில் கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதியாகி உள்ளது. மயிலாடுதுறை பகுதியில் நடமாடிய சிறுத்தை அங்கிருந்து காடுகள் அதை ஒட்டி உள்ள ஓடை பகுதிகள் வழியாக செந்துறை பகுதிக்கு வந்திருக்கலாம் என்றும், மேலும் அது அங்கிருந்து காடுகள் மற்றும் ஓடை வழியாக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சை மலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உண்டு. அந்தச் சிறுத்தை இதுவரை விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளையோ நாய்களையோ அடித்து உணவாக சாப்பிட்டதாக தகவல் இல்லை. அதன் வழிப்போக்கில் கிடைக்கின்ற உணவை சாப்பிட்டு சென்று கொண்டிருக்கிறது.

சிறுத்தையை பிடிக்கும் பணியில் தஞ்சாவூர் ,கடலூர், பெரம்பலூர், அரியலூர், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட வன அலுவலர்கள் கால்நடை மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தச் சிறுத்தை நடமாட்ட அச்சத்தினால் செந்துறைப்பதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

People are afraid because of movement of leopards in Ariyalur

சிறுத்தை பிடிபடுமா? தப்பி செல்லுமா? என்று மக்கள் பதைபதைப்புடன் கிராமப்புறங்களில் பேசிக் கொள்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அரியலூர் மாவட்ட கிராமங்களில் மக்கள் நடமாட்டம் இரவு நேரங்களில் குறைந்து காணப்படுகிறது. பாராளுமன்றத் தேர்தல் பரபரப்பு ஒரு பக்கம், சிறுத்தை நடமாட்டத்தினால் ஏற்பட்ட பரபரப்பு மறுபக்கம் என மக்கள் மிரண்டு போய் கிடக்கிறார்கள்.

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.