Skip to main content

ஓட்டுக்கு நோட்டு! மகளிர் படை ரெடி! இலையை சமாளிக்குமா சூரியன்?

Published on 06/03/2021 | Edited on 06/03/2021
ddd

 

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்றபடி தி.மு.க. தலைவர் வலம் வர, "வெற்றிநடை போடும் தமிழகமே' என எடப்பாடி சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

 

மக்களின் பிரச்சினைகளைக் கையாள்வது, அதனைத் தீர்த்து வைக்குமளவு மக்களிடம் நம்பிக்கையை வரவழைப்பது ஸ்டாலினுக்கான வியூகங்களை ஐபேக் வகுக்க, அ.தி.மு.க. அரசு நிறைவேற் றிய திட்டங்களை டிஜிட்டல் வீடியோவாக்கி, அதனை மேடையிலுள்ள மெகா ஸ்கிரீனில் ஓடவிட்டு எடப்பாடி பழனிச்சாமிக் கான ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது சுனிலின் நிறுவனம்.

 

சங்கரன்கோவிலில் நடந்த எடப்பாடியின் தேர்தல் பரப்புரை மகளிர் கூட்டக் கலந்துரையாடலில் ஐ.டி. அணி, வந்திருந்த ஆண்கள் -பெண்களிடம் மைக்கைக் கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் சாதனைகளைச் சொல்ல வைத்தபோது, எதிர்பாராத வகையில், பேசிய வேப்பங்குளம் மஞ்சுளாவும், புளியம்பட்டியின் வேல்சாமியும், ""கிராமங்களில் எங்க புள்ளைக ரொம்பப் பேரு படிச்சிட்டு வேலையில்லாம தவிக்கிறாங்க. டி.என். பி.எஸ்.சி. பரீட்சை எழுதி என்னைக்கி எங்க புள்ளைக வேலைக்கிப் போவ. அதனால அதுமாதிரி பரீட்சை வைக்காம, படிச்சி முடிச்ச சீனியாரிட்டிப்படி வேலை கொடுங்க'' என்று பேசியது கண்டு அரண்டுபோனது. அடுத்து மக்களிடம் மைக் கொடுத்தால் வேறு மாதிரி ஆகிவிடும் என்பதால் நாசூக்காக நிறுத்திக்கொண்டது.

ddd

எடப்பாடியின் தேர்தல் பரப்புரை வருகைக்குப் பின்னர் இலைக் கட்சியினரிடமிருந்தே அவர்களின் தேர்தல் நேர வியூகங்கள் தொகுதிகளில் கசியத் தொடங்கியுள்ளன.

 

""தொகுதியின் ஒவ்வொரு வார்டிலுமுள்ள அ.தி.மு.க. கிளைக் கழக செயலாளர்கள், வார்டு பிரதிநிதிகள் என இருவர் இருப்பர். அவர்கள் இரண்டு பேருக்கும் தேர்தல் நேரத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை வேட்பாளரால் சன்மானமாகத் தரப்படும். அவர்கள் சார்ந்த வார்டுகளில் கட்சியைச் சேர்ந்த பெண்கள், அவர்களுக்குப் பரிட்சயமானவர்கள் என 25 பேர் திரட்டப்பட்டுள்ளனர். அவர்களின் மொபைல் நம்பர்கள், முகவரிகள் அத்தனையும் கலெக்ட் செய்யப் பட்டுள்ளதாம். இந்த 25 பெண்களுக் கும் வார்டிலுள்ள வாக்காளர்களை, தலைக்கு இத்தனை பேர் என பங்கீடும் செய்யப்பட்டுள்ளது.

 

இதில் அந்த 25 பெண்களுக்கும் கூலியாகத் தலா ஒரு தொகை தனியாகத் தரப்படும். வாக்காளர்களுக்குத் தரப்படும் பணத்தில் அவர்கள் கைவைக்கக்கூடாது. அந்த 25 பெண்களும் தங்களுக்கு ஒதுக்கப் பட்ட வாக்காளர்களிடம் வோட்டுக்கு இவ்வளவு என்று வேட்பாளர் தரும் தொகையை அப்படியே கொண்டுபோய் சேர்த்துவிட வேண்டும். அதன்பின் அவர்கள் பணப்பட்டுவாடா செய்த வாக் காளர்களின் பெயர்கள், அவர்களின் அத்தனை மொபைல் நம்பர்களையும், வேட்பாளர் தரப்பிடம் சேர்த்து விடவேண்டும். பணம், வாக்காளர் களுக்கு முறையாகப் போய்ச் சேர்ந்துவிட்டதா என்பதை வாக்காளர்களிடமே செக்கப் செய்து கொண்டுவிடுமாம் அமைக்கப்பட்ட கண்காணிப்புக்குழு. இப்படிப்பட்ட பக்காவான ஏற்பாடுகள் செய்யப் பட்ட இந்தப் பெண்களின் டீம், தேர்தல் நேரத்தில் ஓவர் நைட்டில் சிந்தாமல் சிதறாமல் ஓசையின்றிக் காதும் காதும் வைத்தது போன்று பணப்பட்டுவாடாவை முடித்து விடும். இதுதான் வாக்காளர் ஆபரேஷனுக்காகக் கட்சித் தலைமை வைத்திருக்கிற மகளிர் வியூகம்'' என்கிறார்கள் இலைத்தரப்பு நிர்வாகிகள்.

 

மேலும் ""நகர மற்றும் ஒன்றியச் செயலாளர்களுக்கு வெயிட்டான தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கு. தவிர, தற்போது தமிழகம் முழு வதும், புதிய குடிநீர் பைப்லைன்கள் போடப்பட்டு வருவதால் அதற்காகத் தோண்டப்படும் சாலைகளில் புதிதாக தார்ச்சாலைகள் தமிழகம் முழுக்க போடப்பட்டு வருகின்றன. அப்படி தார்ச்சாலைகள் போடப்படுகிற இடத்தை ஒட்டியுள்ள இரண்டு பக்கத்திலுமுள்ள இரண்டு வார்டு களைச் சேர்ந்த அ.தி.மு.க.வின் இரண்டு கிளைச் செயலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட காண்ட்ராக்டர் கணிசமான தொகையைக் கமிசனாகக் கொடுத்துவிடவேண்டும் என்பது வாய்மொழி ஆணையாம். இப்படி வரப்போகும் தேர்தலில் இலைக் கட்சியின் நிர்வாகிகளின் காட்டில் பண அடைமழைதானாம்.

ddd

வழக்கம்போல் பிரச்சாரம் ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், இலைத்தரப்பு கரன்சியையே இந்தத் தேர்தலின் பிரம்மாஸ்திரமாகவும் நாகாஸ்திரமாகவும் பயன்படுத்தும் திட்டம் வைத்திருக்கிறது'' என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.

 

"தி.மு.க.வில் ஆட்சியமைந்த 100 நாட்களில் மக்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்போம்' என்று வாக்குறுதியாகவே தரப்படுவதால் தொகுதிக்கு இருபத்தைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்பிக்கையில் மனுக்கள் அளிக்கிறார்கள். மனுக்கள் கொடுப்பதோடு நின்றுவிடக்கூடாது. நாம் வாக்களித்தால்தானே அவர்களால் ஆட்சியமைக்க முடியும். நம் குறைதீரும் என்ற எண்ணத்தில் மக்கள் எந்தச் சூழ்நிலையிலும் நமக்கு வாக்களிப்பார்கள். நமது வாக்கு வங்கி பெருகி வெல்வோம் என்பது சூரியத் தரப்பின் நம்பிக்கையாக உள்ளது.

 

வைட்டமின் ப இல்லாமலா... அதற்கு சூரியத் தரப்பு என்ன வியூகங்கள் வகுத்திருக்கிறது என்பதில் இருக்கிறது கழகங்களின் வெற்றி வாய்ப்புகள்!

 

 


 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

“எதிரணி வேட்பாளர் போல் எங்கிருந்தோ வந்தவன் அல்ல நான்” - அ.தி.மு.க. வேட்பாளர் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
AIADMK candidate Karuppaiya campaign in Trichy

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா திருவரங்கம்  ரெங்கநாதர் கோவில் ரெங்கா ரெங்கா கோபுரம் முன் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி தனது பிரச்சாரத்தை நேற்று மாலை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி தலைமை தாங்கிப் பேசினார்.

அப்போது பரஞ்ஜோதி பேசுகையில், திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் எடப்பாடியாரின் ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர் கருப்பையாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும். அவர் வெற்றி பெற்றால் திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்களின் குரலாக நிச்சயம் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பார். மக்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு பாடுபடுவார் என்றார்.

திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ப.குமார் பேசியபோது, ஸ்ரீரங்கம் மண் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்லாமல் உலகத்தில் இருப்பவர்கள் யார் இங்கு வந்தாலும் அவரை உயரே தூக்கி விடுகின்ற மண். எனவே நிச்சயம் கருப்பையாவையும் உயரே கொண்டு வரும். அவர் மக்கள் பணி சிறப்பாக செய்வார். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த வெற்றிடத்தை நிரப்புகின்ற தகுதி அதிமுகவிற்கு மட்டும்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் நிரூபிப்பார்கள். கருப்பையா திருச்சியிலிருந்து மக்கள் பணி ஆற்றுவார் என உறுதியளிக்கின்றோம் என்றார்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில், திருச்சி நாடாளுமன்ற தொகுதி எதை எதிர்பார்க்கிறதோ எதை ஆழமாக வேண்டும் என்று நினைக்கின்றதோ நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என நம்புகிறார்களோ அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக உங்களுடைய உணர்வுகளுக்கு பாத்திரமாக உழைக்கக் கூடியவர் இளைஞர் கருப்பையா. உங்களை தாங்கியும் பிடிப்பார். உங்களுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கியும் குரல் கொடுப்பார் என்றார்.

ரெங்கா ரெங்கா கோபுரத்திற்கு முன்பாக வேட்பாளர் கருப்பையா பேசுகையில், எதிர் அணியில் நிற்கும் வேட்பாளரை போல் எங்கிருந்தோ வந்து தேவைக்காக ரெங்க நாதரையும் மக்களையும் சந்திக்கக் கூடியவர் நான் அல்ல. இந்த மண்ணின் மைந்தன் ஆகிய நான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். மக்களின் உரிமைகளை நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்ய வேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறேன் என்றார்.

பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மனோகரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி, சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவர் அணி பேரூர் கண்ணதாசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் தேவா, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் வி.என்.ஆர்.செல்வம், தமிழரசன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், கோப்பு நடராஜ், பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.