Skip to main content

விஜய் மல்லையா, நிரவ் மோடி, அடுத்தது இவர்...

Published on 20/02/2018 | Edited on 22/02/2018

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி ரூபாய் முறைகேடு வைர வியாபாரம் செய்யும் தொழிலதிபர் நிரவ் மோடியால் நடத்தப்பட்டது. இந்தியாவில் தொழிலதிபர்களாக இருக்கும் பல பேர் இவ்வாறுதான் வங்கியிடம் கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்துவருகின்றனர். இவர்கள் வரிசையில் புதிதாக 'ரோடோமாக்' பேனா  தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி சேர்ந்துள்ளார். 
 

vikram kothari


இவர் அப்படி என்ன மோசடி செய்தார்? கார் வாங்குகிறேன் என்று சொல்லி கடன் வாங்கிவிட்டு, கார் வாங்காமல் வேறு செலவு செய்தால் எப்படி இருக்கும்? வாகனக் கடன்களில் பணத்தை மீட்க, வாகனத்தை கைப்பற்றுவார்கள். வாகனமே இல்லையென்றால்? அப்படித்தான் விக்ரம்  கோத்தாரி ஏற்றுமதிக்கென வாங்கிய கடனில் ஏற்றுமதி செய்யாமல், சிங்கபூரைச் சேர்ந்த நிறுவனத்துக்கு பணத்தை அனுப்பி அந்த நிறுவனம் மீண்டும் ரோடோமாக் நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பிவிட்டது.  ஆனால் ஒன்று, நாம் வாகனக் கடன் வாங்கினால், வங்கியே வாகனத்தை வாங்குவதை உறுதி செய்துவிட்டு கார் விற்பனை நிறுவனத்திடம் தான் பணத்தைக் கொடுக்கும். ஆனால், கோத்தாரி போன்றவர்களுக்கு கேட்டவுடன் அள்ளிக் கொடுப்பவர்கள் தான் வாங்கி உயரதிகாரிகள்.     

'ரோடோமாக்' என்னும் இவரது நிறுவனத்தின் பெயரில் ஏழு வங்கிகளிடம் சுமார் 3,695 கோடி கடனை வாங்கியிருக்கிறார். வாங்கிய கடன்களுக்கான தவணையையும் சரியாக கட்டாமல் இருந்துள்ளார். ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வாங்கிய கடனை, இவர் வேறு விதமாக பயன்படுத்தியுள்ளார். இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிபிஐ இவர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இவரது மனைவி மற்றும் மகனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
 

vikram rathore house

                                                          விக்ரம் கோதரியின் பங்களா வீடு 

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல்  'ரோடோமாக்' நிறுவனத்திற்காக வங்கிகள் மொத்தம் 2,919 கோடி ரூபாய்  கொடுத்து இருக்கின்றன. வாங்கிய கடனுக்கு அவர் கொடுக்கவேண்டிய வட்டியையும் அபராதத்தையும்  சேர்த்தால் மொத்தம் 3,695 கோடி வருகிறது. பாங்க் ஆப் இந்தியாவில் 754.77 கோடி, பாங்க் ஆப் பரோடாவில் 456.63 கோடி, ஓவர்சீஸ் பாங்க் ஆப் இந்தியாவில் 771.07 கோடி, யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 458.95 கோடி, அலஹாபாத் வங்கியில் 330.68 கோடி, பாங்க் ஆப் மஹாராஷ்டிராவில் 49.82 கோடி, ஓரியன்டல் பாங்க் ஆப் காமர்ஸில் 97.47 கோடி என  இந்த ரோடோமாக் நிறுவனம் கடன் வாங்கியிருப்பதாக வழக்கை பதிவு செய்த பரோடா வங்கி தெரிவித்துள்ளது. 
 

விக்ரம் கோத்தாரியின் தந்தை தான் இந்தியாவின் புகழ் பெற்ற 'பான்பராக்' பான்மசாலா நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியவர். வழக்கம் போல தந்தையின் மறைவுக்குப் பின் மகன்களின் சண்டையில் சரிவைச் சந்தித்தது நிறுவனம். மேலும் ஒரு சிறப்பு செய்தி, வங்கி முறைகேட்டில் சிக்கிய பெரும் கோடீஸ்வரர்களில், வெளிநாடு செல்வதற்குள் சிக்கியவர் இவராகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் மட்டும் நாம் ஆறுதல் போட்டுக்கொள்ளலாம். வேறு எந்த வகையிலும் இல்லை... 

Next Story

கடன் பெற்று தருவதாக மோசடி; சேலம் நிதி நிறுவன அதிபர் மீது மற்றொரு வழக்கு!

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

Loan fraud; Another case against Salem Financial Institution CEO!

 

சேலத்தில், வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுத்தருவதாக கூறி, லட்சக்கணக்கில் வாரிச்சுருட்டிய நிதி நிறுவன அதிபர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


சேலம் நாகியம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவருக்கு கன்னங்குறிச்சியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் திருநாவுக்கரசு என்பவர் 5 கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாக கூறினார். மேலும், இதற்கான ஆவண செலவுகள், புரோக்கர் கமிஷனாக 5.70 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அதை நம்பிய செந்தில்குமார், அவர் கேட்ட தொகையை அவரிடம் கொடுத்துள்ளார். 


ஆனால் திருநாவுக்கரசு சொன்னபடி, கடன் பெற்றுத் தரவில்லை. இதையடுத்து திருநாவுக்கரசு தன்னை ஏமாற்றி விட்டதாகவும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் செந்தில்குமார் புகார் அளித்துள்ளார். திருநாவுக்கரசுவின் கூட்டாளிகள் சிவா, சரவணன், வைத்தீஸ்வரன், ரங்கநாதன், மோகன்குமார் ஆகியோரும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். 


திருநாவுக்கரசு மீது அடுத்தடுத்த நாளில் இரண்டு புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து தலைமறைவாக உள்ள அவரையும், அவருடைய கூட்டாளிகளையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருநாவுக்கரசு மேலும் பலரிடம் இதேபோன்ற மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

 

Next Story

'2 லட்சம் கடனுக்கு 7 லட்சம் வட்டி...' கந்து வட்டிக் கொடுமையால் தீக்குளிக்க முயன்ற பெண்கள்

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் தொழில் விருத்திக்காக 2 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கிய நிலையில் 7 லட்சம் வட்டி கட்டிய நிலையில் மேலும் வட்டி கேட்டு கொடுமைப் படுத்தியதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ குளித்த முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம், களக்காடு காவல்நிலையத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

 7 lakh interest on 2 lakh loan... defeat incident in nellai

 

நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பராபுரத்தைச் சேர்ந்தவர் முருகன், இவரது சகோதரர் புகழ்சேட். இவர்கள் இருவரும் அந்த பகுதியில் சோடா கம்பெனி நடத்தி உள்ளனர். இந்த தொழில் வளர்ச்சிக்கு  அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா மற்றும் ஜானகி ஆகியோரிடம் இருவரும் 2 லட்சத்து 20  ஆயிரம் கடன் வாங்கியுள்ளர் . கடன் வாங்கி சில ஆண்டுகள் ஆன நிலையில் தொழிலில் நஷ்டமான நிலையில் இருவரும் சோடா கம்பெனியை விட்டுவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டனர்.

 

 7 lakh interest on 2 lakh loan... defeat incident in nellai


ஆனால் இதுவரை வாங்கிய கடனிற்காக இதுவரை வார வட்டியாக 7 லட்சம் ரூபாய் கட்டியுள்ளனர் . மேலும் அவர்களிடம் வட்டிகேட்டு கடன் கேட்டவர்கள் தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து களக்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, பின்னர் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனிடையே கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததைத் தொடர்ந்து முருகன் மனைவி கிருஷ்ணவேணி , புகழ்சேட் மனைவி  பாமா ஆகிய இருவரும் இன்று மனுநீதிநாள் முகாமான நேற்று ஆட்சியர் அலுவலகத்தின் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஆட்சியர் அலுவலக போர்டிகோவில் இருவரும் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளிக்க முயற்சித்தனர். அப்போது அங்கு இருந்து போலீசார் அவர்களை மீட்டனர்.

 

 7 lakh interest on 2 lakh loan... defeat incident in nellai


பின்னர் ஆட்சியர் தீ குளிக்க முயற்சித்தவர்களிடம் நேரடியாக வந்து விசாரணைக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். மேலும் கடந்த 2017-ம் அக்டோபர் 27-ந் தேதி கந்துவட்டி கொடுமை காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் தாய் தந்தை குழந்தைகள் என 4 பேர் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் 9 வாயில்களில் 7 வாயில்கள் அடைக்கப்பட்டு, மனு நீதி நாள் முகாமின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டும் தீ குளிக்க முயற்சிக்கும் சம்பவங்கள் மாதம் தோறும் நடந்து வருகிறது. என்பது குறிப்பிடத்தக்கது.

 

 7 lakh interest on 2 lakh loan... defeat incident in nellai


மீண்டும் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் தீ குளிப்பு சம்பவத்தை அடுத்து வழக்கம்போல் காவல்துறை துரிதமாகி ஆட்சியர் அலுவலகத்திற்கு  வருபவர்களை பாதுகாப்பு என்ற பெயரில் அச்சுறுத்தி வருகின்றனர்.

அடுத்த ஒரு சம்பவமாக ஆலங்குளத்தை சேர்ந்த சித்ரா என்ற பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தபோது அங்குள்ள மரத்தில் உள்ள அரளி விதையை அரைத்துக் குடித்து மயக்கம் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.