Skip to main content

பாஜக வெல்ல முடியாத கட்சியா? அந்தக் கட்சி இழந்ததும் பெற்றதும்!

Published on 19/03/2018 | Edited on 19/03/2018

பாஜக சந்தித்த இடைத்தேர்தல்களின் முடிவுகளையும், மாநில சட்டமன்ற தேர்தல்களில் அந்தக் கட்சி கையாண்ட தந்திரங்களையும் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

 

Narendra modi

 

மோடி பதவியேற்ற 100 நாட்கள் முடிந்த நிலையிலேயே 10 மாநிலங்களில் 33 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உ.பி., குஜராத், தெலங்கானா மாநிலங்ளைச் சேர்ந்த 3 மக்களவை தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. 33 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜகவுக்கு சொந்தமான 24 தொகுதிகள் இருந்தன. இவற்றில் 13 தொகுதிகளை அது இழந்தது. உத்தரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் ராஜினாமா செய்த மக்களவைத் தொகுதியில் அவருடைய உறவினரே வெற்றி பெற்றார். தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்த தொகுதியில் அவருடைய கட்சியும், குஜராத்தில் மோடி ராஜினாமா செய்த வதோதரா தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றன. குஜராத்தில் பாஜகவுக்கு சொந்தமான 3 தொகுதிகளையும், ராஜஸ்தானில் பாஜகவுக்கு சொந்தமான 3 தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது.

 

2015 ஆம் ஆண்டு தெலங்கானா, ம.பி.யில் இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், டிஆர்எஸ்சும், காங்கிரஸும் தலா ஒரு தொகுதியை கைப்பற்றின. இதில் ம.பி.யில் பாஜகவிடமிருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.

 

2016ல் மேற்குவங்கம், அசாம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிங்களில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸும், ம.பி., அசாமில் தலா ஒரு தொகுதியை பாஜகவும் தக்கவைத்துக் கொண்டன.

 

amit shah

 

2016ல் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா, புதுவை, அசாம், ஆகிய 5 மாநிலத் தேர்தல்களில் அசாமில் மட்டுமே பாஜகவின் கூட்டணி தந்திரம் வெற்றிபெற்றது. தேர்தலுக்கு முன், காங்கிரஸில் நீண்டகாலம் இருந்த தலைவர்கள் பலரை பதவி ஆசைகாட்டி பாஜக தன்பக்கம் இழுத்திருந்தது. இருந்தாலும் தனது தலைமையிலான கூட்டணி அரசு என்று அது சொல்லிக் கொண்டது. மற்ற நான்கு மாநிலங்களில் பாஜகவின் ஜம்பம் பலிக்கவில்லை.

 

அதன்பிறகு 2017ல் கோவா, குஜராத், ஹிமாச்சலபிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

 

இந்த மாநில தேர்தல்களில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி புது எழுச்சி பெற்றது. சொந்த மாநிலத்திலேயே பலவிதமான நாடகங்களை அரங்கேற்ற வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டார். முந்தைய தேர்தலில் பெற்றிருந்த 115 இடங்களில் 99 இடங்களை மட்டுமே பெற முடிந்தது.

 

இமாச்சலப்பிரதேசம், உ.பி., உத்தரகாண்ட் மாநிலங்களில் தனியாக ஆட்சி அமைத்த பாஜக, கோவா, மணிப்பூர், மாநிலங்களை ஆளுநர் உதவியோடு விலைக்கு வாங்கியது. இந்த களேபரத்தில், பஞ்சாபில் காங்கிரஸ் பெற்ற முக்கியமான வெற்றி மறைக்கப்பட்டது.

 

2017ல் பஞ்சாபில் குருதாஸ்பூர், ராஜஸ்தானில் ஆல்வர், ஆஜ்மீர், ஆகிய மூன்று மக்களவை தொகுதிகளிலும் பாஜகவை காங்கிரஸ் தோற்கடித்தது. மேற்கு வங்கத்தில் உலுபேரியா மக்களவை தொகுதியில் திரிணாமுல் வெற்றிபெற்றது.

 

இப்படிப்பட்ட நிலையில்தான், 2018ல் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 25 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கையில் இருந்த திரிபுராவில் ஆளுங்கட்சிக்கு எதிரான முதலாளிகள், மற்றும் பழங்குடியினரின் எதிர்ப்புணர்வை கார்பரேட்டுகளின் உதவியோடு பணத்தை வாரியிறைத்து பாஜக அறுவடை செய்தது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியையும், அதன் 38 சதவீத வாக்குகளையும் மொத்தமாக பாஜக விலைக்கு வாங்கியிருந்தது.

 

மேகாலயாவில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற பாஜக, 21 இடங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, ஆளுநர் உதவியோடு மாநிலக்கட்சி ஆட்சி அமைக்க உதவியது. அதோடு அந்த அரசில் இடம்பெற்று பாஜக கூட்டணி அரசு என்று சொல்லிக்கொண்டது. நாகாலாந்திலும் இதே டெக்னிக்கை பயன்படுத்தியது.

 

இந்நிலையில்தான், உ.பி., பிகாரில் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இவற்றில் கோரக்பூர், புல்பூர் தொகுதிகள் முதல்வர் யோகி, துணை முதல்வர் மவுரியா ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதிகள் ஆகும். பிகாரில் அராரியா தொகுதியில் லாலுவின் ஆர்.ஜே.டி. வெற்றிபெற்றதன் மூலம் பாஜகவுடன் நிதிஷ்குமார் அமைத்த கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

 

2019 தேர்தலில் மீண்டும் மோடிதான் ஜெயிப்பார் என்று பாஜக கூறிவரும் நிலையில், இந்தத் தோல்விகள் அந்தக் கட்சியை இடிபோல தாக்கியிருக்கிறது. அதாவது, தற்போதைய நிலையில் மக்களவையில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடத்தைக் காட்டிலும் ஒரு இடம் குறைவாகவே வைத்திருக்கிறது.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.