Skip to main content

"ஹெச். ராஜா நீதிமன்றத்தைப் பற்றி பேசாத பேச்சையா நான் பேசிவிட்டேன்" - தமிழன் பிரசன்னா கேள்வி!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 46 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2,000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 82,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் வழக்கமான பரபரப்புகளுடனே இருந்து வருகின்றது. பிரதமர் மோடி குறித்து தி.மு.க.வின் தமிழன் பிரசன்னா சில கருத்துகளை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்தற்கு பா.ஜ.க.-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா எதிர்வினையாற்றி உள்ளார். தமிழன் பிரசன்னாவைக் கண்டிப்பாகக் கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக தமிழன் பிரசன்னாவிடம், கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
 


இந்த கரோனா நேரத்தில் நீட் தேர்வுக்கான தேதியை அறிவிக்கிறார்கள், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதியைச் சொல்லியிருக்கிறார்கள். மின்சார திருத்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளார்கள். காவிரி ஆணையத்தை மத்திய நீர்வளத்துறையோடு இணைத்துள்ளார்கள், இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது அனைத்துமே மாநில அரசின் முதுகெலும்பு இல்லாத காரணத்தால் மட்டுமே நடக்கின்றது. மத்திய அரசைப் பார்த்து, பக்கத்தில் இருக்கின்ற சந்திர சேகர் ராவ் சொல்கிறார் 'ஒன்று நீ செய், இல்லை என்னை செய்யவிடு' என்று. இந்த மாதிரி கேட்க நம் மாநிலத்தை ஆள்பவருக்குப் போதிய துணிச்சல் இல்லை. காவிரி ஆணையத்தில் மீண்டும் நமக்குத் துரோகம் செய்துள்ளார்கள். இது சம்பந்தமாக இதுவரை இவர்கள் என்ன அறிக்கை விட்டுள்ளார்கள். மத்திய அரசின் அணுகு முறையை எதிர்த்து இவர்கள் ஏதேனும் கேள்வி கேட்டார்களா? அவர்களின் அடிமைகளாக இருக்கும் இவர்கள் அவர்களை எதிர்த்து எப்படிக் கேள்வி கேட்பார்கள். இப்போது நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். 10 ஆம் வகுப்பு தேர்வு தேதியை அறிவித்துள்ளார்கள், நீட் தேர்வை அறிவித்துள்ளார்கள். இப்போது லாக் டவுன் முடியுமா அல்லது முடியாதா என்று கெள்வி எழுகின்றது. தேர்வுக்கு மாணவர்கள் எப்படிப் போவார்கள். பலர் ஹாஸ்டலில் படிக்கிறார்கள். அவர்கள் எப்படி அங்கு போவார்கள். பேருந்து வசதி இருக்கிறதா? அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்குமா என்ற ஆயிரம் கேள்வி இருக்கின்றபோது எதற்கு அவசர அவசரமாகத் தேர்வு தேதியை அறிவிக்க வேண்டும். 
 

 


இந்தியப் பிரதமரைத் தொடர்ந்து அவமரியாதையாகப் பேசுவதாக கூறி உங்கள் மீது பாஜக தலைவர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். இதற்காக உங்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு உங்களின் பதில் என்ன? 

வானொலி மூலம் பல மணி நேரம் பேசும் பிரதமர், பத்தரிகையாளர்களின் ஒரு கேள்விக்குக் கூட பதிலளிக்க மறுத்துவிடுகிறார். 56 இன்ச் மார்பளவு உடையவர் என்று சொல்லிக்கொள்ளும் யாரும் இத்தகைய செயல்களைச் செய்ய மாட்டார்கள். மேலும் அணிந்திருக்கும் உடையை வைத்தே யார் கலவரக்காரர்கள் என்று என்னால் அடையாளப்படுத்த முடியும் என்று தன் சொந்த நாட்டு மக்களையே பிரிக்கும் போதும், தன்னை எதிர்க்கும் மாநிலங்களுக்கு ஒரு பைசா கூட நிதியினை ஒதுக்க மாட்டேன் என்று சொல்வதாகட்டும், இப்படி மாநில உரிமைகளுக்கு எதிராகச் செய்ல்படும் ஒருவரை எப்படி எங்களின் பிரதமராக நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். பிரதமர் எனக்கு முதலாளி அல்ல, இந்தியக் குடிமகனாகிய நான்தான் அவருக்கு முதலாளி.
 

http://onelink.to/nknapp


நீங்கள் பேசக்கூடிய வெறுப்பரசியல்தான் எங்களைப் பேச செய்கிறது. ஒருமுறை அவ்வாறு பேசியதற்கே என்னைக் கைது செய்ய வேண்டும், தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று சொல்கிறீர்களே எங்களின் தலைவர்களின் குடும்பத்தைக் நீங்கள் கொச்சைப்படுத்தி பேசவில்லையா, நாங்கள் அதற்குக் கூட பதிலுக்குப் பதில் பேசவில்லை, அப்படிப் பேசினால் அவர்களால் இருக்க முடியாது. நீதிமன்றம் குறித்து ஹெச்.ராஜா பேசாத பேச்சுக்களாா, பத்திரிகை துறை பெண்களைப் பற்றி எஸ்.வி சேகர் என்ன கூறினார், இதெல்லாம் சரியா? அவர்கள் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லாதவர்கள் என்பதே என்னுடைய கருத்து.

 


 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.