Skip to main content

"தனித்துப் போட்டிங்கிறது தற்கொலைக்குச் சமம்' எனக் கூட்டணிக்கு மல்லுக் கட்டுகிறார் சுதீஷ்

Published on 28/02/2019 | Edited on 04/03/2019

"திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை' என்பதை வலியுறுத்தி வந்த பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த நிலையில், பிப்ரவரி 25 அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி, "2011-ல் நாங்கள் அப்படிச் சொன்னபோது இருந்த அரசியல் சூழல் வேறு; இப்போது அரசியல் சூழல் மாறிவிட்டது. தமிழகத்தில் இனி தனியாகப் போட்டியிட்டு யாரும் வெல்லமுடியாது. கூட்டணி வைத்தாலும் தமிழகத்தின் நலன்களை முன்னிறுத்தி நடத்தும் போராட்டங்களிலிருந்து பின்வாங்கமாட்டோம். மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருப்பவர்களோடு கூட்டணி சேர்ந் தால்தான் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதற்காகத்தான் கூட்டணியை தேர்ந்தெடுத்தோம்'’ என விளக்கமளித் திருக்கிறார்.

7pmkseats

அன்புமணியின் இந்த விளக்கம் பா.ம.க.வினரிடமும் கூட எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இது பற்றி பா.ம.க. தரப்பில் விசாரித்தபோது, ‘""அ.தி.மு.க.வுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்தானதை அடுத்து ஜி.கே.மணி, அன்புமணி உள்ளிட்ட கட்சியின் முன்னணி தலைவர்களிடம் ஆலோசித்தார் டாக்டர் ராமதாஸ். அப்போது, "திராவிட கட்சிகளைப்பற்றி நாம் வைத்த விமர்சனங்கள் நமக்கு எதிராக பெரிதுபடுத்தப்படலாம். தேர்தல் களத்தில் அ.தி.மு.க. - பா.ம.க. தொண்டர் களிடையே இணக்கமில்லாச் சூழலை இது உருவாக்கும். அதனால் அ.தி.மு.க. தலைவர் களுக்கு விருந்து வைப்பதன் மூலம் இரு கட்சிகளின் தொண்டர்களிடையே நெருக்கம் உருவாகும்' என விவாதிக்கப்பட்டது.

அ.தி.மு.க. தலைவர்களிடம் ராமதாஸும் அன்புமணியும் பேச, அவர்கள் சம்மதித்தனர். இதனையடுத்து திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் அ.தி.மு.க. தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் தடபுடல் விருந்து கொடுத்தார் ராமதாஸ். மதுரை வந்திருந்த அமித்ஷா, ஓ.பி.எஸ்.சையும் தங்கமணியையும் மதுரைக்கு அழைத்ததால் மதிய விருந்து இரவு நேர விருந்தாக மாற்றப்பட்டது..

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பா.ம.க. மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து பேச்சு எழுந்தபோது, எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் "தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கத் துடிக்கும் கட்சி தலைவர்கள், கடந்த தேர்தலில் தி.மு.க.வை தாக்கிப் பேசிய பேச்சுக்களை நாம் தொகுத்து வைக்கலாம். அவர்களுக்கு பதிலடியாக தேர்தல் களத்தில் பயன்படுத்துவோம். கூட்டணி வேறு; கொள்கைகள் வேறு' என சொல்லியிருக்கிறார்கள்.

இருப்பினும், "பா.ம.க. ஏன் கூட்டணி வைத்தது என்பதை தெளிவுபடுத்திடலாம்' என அவர்களிடம் ராமதாஸ் சொன்னதுடன், மீடியாக்களிடமும் தெளிவுபடுத்துமாறு அன்புமணியிடமும் சொன்னார்'' என்று பின்னணிகளை விவரித்தனர் பா.ம.க.வினர்.

தங்கள் தொகுதி பா.ம.கவிடம் பறிபோகுமோ என்ற பதற்றம் வட தமிழகத்திலுள்ள அ.தி.மு.க. எம்.பி.க்களிடம் உள்ளது. பா.ம.க.வினருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் எடப்பாடியிடம் கேட்டு வருகிறார்கள். அவரோ, "தே.மு.தி.க.வின் முடிவைப் பொறுத்து சில பல விசயங்கள் மாறக்கூடும்' என சொல்லியபடி இருக்கிறார்.

பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதி கள் குறித்து அ.தி.மு.க. மேலிட தொடர்பாளர் களிடம் நாம் பேசிய போது, ‘""மத்திய சென்னை, ஸ்ரீபெரும் புதூர், அரக்கோணம், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அ.தி.மு.க. கூட்டணிக்குள் தே.மு.தி.க. வராதபட்சத்தில், மத்திய சென்னைக்குப் பதிலாக மயிலாடுதுறையும், திண்டுக்கல்லுக்குப் பதிலாக கள்ளக்குறிச்சியும் மாற்றி தருவதாக எழுதப்படாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமும் எடப்பாடி மற்றும் ராமதாஸுக்கிடையே போட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறது''’ என சுட்டிக்காட்டுகிறார்கள்.

anbumani


மேலும், தே.மு.தி.க.வின் வருகை குறித்து அவர்களிடம் விசாரித்தபோது, ""மூன்று சீட்டுதான் அதிகபட்சமாக தரமுடியும்னு அ.தி.மு.க. சொல்லி விட்டது. பா.ஜ.க. கொடுத்த தொடர் வலியுறுத்தலில் தொடர்ந்த பேச்சு வார்த்தையால், மெடிக்கல் கல்லூரிக்கு ஒப்புதல், பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் , தேர்தல் செலவுத் தொகை என டிமாண்டுகள் தொடர்ந்தன. ராஜ்யசபா சீட்டுக்கு எடப்பாடி கடும் மறுப்பு தெரிவித்தார். அந்தக் கோபத்தில்தான் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வைபவத்தை துவக்கினார் பிரேமலதா. இந்த நிலையில், "யாரிடமும் கெஞ்ச வேண்டாம். நாம் தனித்துப் போட்டியிடுவோம். நாம் வாங்கும் ஓட்டு இரண்டு கட்சி களையும் காலி செய்துவிடும்' என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆவேசம் காட்டி வருகிறார். "தனித்துப் போட்டிங்கிறது தற்கொலைக்குச் சமம்' எனக் கூட்டணிக்கு மல்லுக் கட்டுகிறார் சுதீஷ். என்ன முடிவெடுப்பதென தெரியாமல் தடுமாறுகிறார் பிரேமலதா'' என்று விவரிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

இதற்கிடையே, "கடந்த 2016 தேர்தலில் ம.ந.கூ. கட்சிகளுடன் இணைந்து நின்றே 2.4 சதவீத வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது தே.மு.தி.க. அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அ.தி.மு.க.வுக்கு பலனில்லை. அதனால் அவர்களை அழைக்க வேண்டாம்' என அ.தி.மு.க. தலைமைக்கு யோசனை தெரிவித்திருக்கிறதாம் பா.ம.க.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.