Skip to main content

பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்று சொல்லவிட்டு வீடு போய் சேர முடியுமா?; குஜராத் மக்களுக்கு ஆழந்த அனுதாபங்கள்.." - காந்தராஜ் பேட்டி

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

பரக

 

குஜராத், இமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் குஜராத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள பாஜக, இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாகக் காங்கிரஸ் இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் குஜராத் மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் வரலாற்று வெற்றியை பாஜக பெற்றுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

தேர்தலுக்கு முன்னாடியே ரிசல்ட் குஜராத்தில் இப்படித்தான் வரும் என்று எதிர்பார்த்தது தானே, இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. பாஜகவுக்கு எதிராக வாக்கு அளிக்க நினைத்தால் கூட முடியாது, அதான் தேர்தலுக்குப் பிறகு பாஜக கண்டிப்பாக வெற்றிபெறும் என்று சொன்னார்களே, அதுமாதிரி தான் நடந்திருக்கு. குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக யாராவது நினைத்தாலும் வாக்களிக்க முடியுமா? நான் பாஜகவுக்கு எதிராக வாக்களித்துள்ளேன் என்று வெளியே வந்து கூறினால் அவரால் வீட்டிற்குச் செல்ல முடியுமா? தங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று தெரிந்த எவரையும் ஓட்டுப்போடவே விடமாட்டார்கள். இதுதான் அங்கு நடந்திருக்கும். ஆனால் பத்திரிகைகளில் அதெல்லாம் வந்திருக்காது. அவங்க கையில்தான் எல்லாமே இருக்கிறதே.

 

இதற்குச் சின்ன உதாரணம் சொல்கிறேன், பெஸ்ட் பேக்கரி சம்பவத்தில் பலரை உயிரோடு கொளுத்தினார்கள். அப்போது அந்த சம்பவத்தில் உயிர் பிழைத்த பெண் நடந்த சம்பவத்தை முதலில் நீதிமன்றத்தில் கூறினார், ஆனால் அதன் பிறகு அவரே நீதிமன்றத்தில் அந்த மாதிரியான ஒரு சம்பவத்தை நான் பார்க்கவே இல்லை என்று மாற்றிக் கூறினார். அந்த மாதிரி அனைத்தையும் மாற்றும் வல்லமை அவர்களுக்கு உண்டு. குஜராத் என்பது ஆர்எஸ்எஸ் தாயகம். எனவே அவர்கள் என்ன நினைத்தாலும் செய்வார்கள்.அதை யாராலும் மாற்ற முடியாது. அவர்கள் நினைத்ததை எல்லாம் செயல்படுத்துவார்கள். 

 

மாநில தேர்தல் ஆணையமும் அவர்களுடையது; இந்தியத் தேர்தல் ஆணையமும் அவர்களுடையது என்ற நிலையில் முடிவு அவர்களுக்குச் சார்பாகத்தான் வரும். வாக்கு வித்தியாசத்தை பாருங்க, எப்படி ஜோதி பாசு அவர்களை எதுவுமே செய்ய முடியால் இருந்ததை போல் இவர்கள் இருக்கிறார்கள். எப்படி அங்கு மம்தா பானர்ஜி என்ற ஒருவர் வந்து அவர்களைக் காலி செய்தாரோ அதைப்போல இங்கும் ஒருவர் வருவார்; அதுவரை பொறுத்திருங்கள். அதுவரை குஜராத் மக்கள் காத்திருக்க வேண்டியதுதான். அந்த நாள் வரும் வரை குஜராத் மக்களுக்கு நம்முடைய அனுதாபங்கள். தொடர்ந்து யாருமே கஷ்டத்தில் இருக்கமாட்டார்கள்; எனவே அவர்களுக்கும் கூடிய சீக்கிரம் விடிவு காலம் வரும். 

 

நான் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பே கூறியிருந்தேன். தேர்தல் முடிவுகள் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதானே, எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்த 25, 30 இடங்களில் வந்திருப்பார்களா? இதுவே பெரிய ஆச்சரியம். இந்த அளவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு எப்படி விட்டுக்கொடுத்தது என்றால், நாங்களும் தேர்தலை ஒழுங்கா நடத்தினோம் என்ற பேருக்காக இத்தனை இடங்களை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள் போல, தெளிவாக ஒன்றைச் சொல்கிறேன் மக்கள் வாக்களிப்பது வேறு, தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்கிறது வேறு. இந்த தேர்தலில் முன் எப்போதும் இல்லாத வகையில் பிரதமர் மோடி நடைப்பயணம் எல்லாம் போய் இருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் என்பதைக் காட்டிக்கொள்ளும் பொருட்டு இதைச் செய்துள்ளார்.

 

இந்த முடிவு பெரும்பாலும் அரசியல் அறிந்த யாருக்கும் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்காது. இந்த தேர்தல் முடிவில் எனக்குச் சிறிய அதிர்ச்சி என்றால் வழக்கமாக குஜராத் தேர்தல் முடிவுகள் என்பது ஆரம்பத்தில் எதிர்க்கட்சிகள் அதிகமாக வெற்றிபெறுவதைப் போல் காட்டி மதியம் இருவரும் சமம் என்பதைக் கொண்டு வந்து முடிவில் பாஜக வெற்றிபெற்றது என்று சொல்லுவார்கள். ஆனால் தற்போது எடுத்த எடுப்பிலேயே பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று கூறிவிட்டார்கள். இதுதான் இந்த முறை நடைபெற்ற புதிய ஆச்சரியமான விஷயம். மற்றபடி இந்த வெற்றி என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். குஜராத் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

 

 

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.