Skip to main content

கின்னஸ் சாதனைக்கு வறுமையே தடையா இருக்கு கிராஃபைட் லைட் குச்சியில் 1330 திருக்குறளை எழுதிய இளைஞன் பேட்டி:

Published on 03/07/2018 | Edited on 04/07/2018

பென்சிலில் எழுதப்படும் கிராஃபைட் லைட் குச்சிகளை கொண்டு 1330 திருக்குறளை எழுதி அதனை கொண்டு திருவள்ளுவர் உறுவத்தை உறுவாக்கி அசத்தியிருக்கிறார் இளைஞர் அரவிந்தன். ஏற்கனவே ஜாக்பீஸ் துண்டுகளை கொண்டு அ என்கிற எழுத்தை  செதுக்கி திருவள்ளுவர் உறுவத்தை உருவாக்கி சாதனையை நோக்கி நகர்ந்து வரும் அந்த இளைஞனுக்கு வறுமையின் பிடி அவனது வளர்ச்சியை கட்டிப் போட்டிருக்கிறது.

 

 

 

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ளது சட்ட நாதபுரம். அங்கு கவரிங் நகை செய்யும் கூலித் தொழிலாளியின் இரண்டாவது மகன் அரவிந்தன். மயிலாடுதுறை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த அரவிந்தனை குடும்பத்தின் வறுமை மேல் படிப்பு படிக்க விடவில்லை. அரவிந்தனுக்கு சிறு வயதில் இருந்தே ஓவியம் வரையும் பழக்கம் இருந்துள்ளது. அதன் மீது அளவில்லாத ஆர்வமும் கொண்டு பல ஓவியங்களை வரைந்து அசத்தியிருக்கிறார்.
 

இந்த நிலையில் பென்சிலில் எழுதப்படும் கிராஃபைட் லைட் 1330க் கொண்டு 1330 திருக்குறளை ஊசிமுனைக் கொண்டு எழுதி அந்த கிராப் பைட் லைட்டுகளை கொண்டு திருவள்ளுவர் உறுவத்தை அமைத்துள்ளார். 

 

 

 

அரவிந்தன் தனது சாதனை குறித்து நம்மிடம் பேசினார், " சின்ன வயசுல இருந்தே ஒவியத்தின் மீது ஆசை. அதில் பெரிய அளவில் சாதிக்கணும் என பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். ஆனால் வறுமை எனக்கு முன்னால் வேளியாக நிற்கிறது. பென்சிலை கொண்டு 700க்கும் அதிகமான ஓவியங்களை வரைந்துள்ளேன். அதே போல பெயின்டிங்கில் 700க்கும் அதிகமான ஓவியம் வரைந்துள்ளேன். 13. மி.மீட்டர் மரக்கட்டைகளை கொன்டு திருவள்ளுவர், சிவன், விநாயகர் உள்ளிட்ட உருவங்களை செய்துள்ளேன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணத்தால் ஜாக்பீஸ் துண்டுகளில் 1330 அ எழுத்துக்களை செதுக்கி அதை கொண்டு திருவள்ளுவர் உருவத்தை  உருவாக்கியுள்ளேன். 
 

ஏற்கனவே போஸ்ட் கார்டில் 2500 கண்கள் வரைந்திருப்பதே கின்னஸ் சாதனையாக இருந்தது. அதை உடைக்கும் வகையில் 3,111 கண்களை வரைந்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் பென்சிலில் உள்ளே உள்ள  கிராஃபைட் லைட்களில் 1330 திருக்குறளை எழுதி வள்ளுவர் உறுவத்தை உருவாக்கினேன். 4 செ.மீ நீளம், 3. மின் தடிமன் கொண்ட பென்சிலின் உள்ளே இருக்கும் லைட்களில் 1 திருக்குறள் வீதம் 1330 லைட்களில் எழுதியுள்ளேன். 1 மணி நேரத்திற்கு 6 திருக்குறள் வீதம் ஒரு நாளைக்கி 5 மணி நேரம் எழுதினேன். அதை எழுதி உருவமாக்க சரியா 2 ம் தேதியோடு ஐம்பது நாட்கள் ஆனது." என்றவர்.
 

மேலும்,  குடும்பத்தின் வறுமை அடுத்தக் கட்டத்திற்கு போக முடியாத நிலையாகிடுச்சி, கிடைக்கிற வேலைகளை செய்கிறேன், சிமென்டால் சிலை வடித்து கொடுக்கிறேன், கல்யாணம், பிறந்த நாள் வாழ்த்துகளுக்கு சோப்பு மெழுகுவர்த்தி, கார்டுகள் மூலம் வரைந்து கொடுத்து கிடைக்கிற காசில் பிழைக்கிறோம், அரசாங்கம் எனக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்தால் நிச்சயம் சாதனை புரிவேன்" என்கிறார்.

 

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக வேன்! நண்பனின் ஆசையை நிறைவேற்றிய இளைஞர் மன்றம்!

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் இளைஞர் மன்றம் ஆண்டுக்கு ஒரு முறை விளையாட்டு விழா மட்டும் நடத்திவிட்டு ஓய்ந்துவிடாமல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று முனைப்புடன் அப்பகுதி பள்ளிகளுக்கு ஏராளமான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததுடன் சில ஆசிரியர்களை நியமித்து சம்பளமும் வழங்கி வருகின்றனர்.

இந்த இளைஞர் மன்றத்தில் உள்ள சிற்றரசு என்ற இளைஞர் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதியாக தன் சொந்தச் செலவில் வேன் வாங்கி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு வேனும் வாங்கினார். வேன் வாங்கி கொஞ்ச நாட்களிலேயே துரதிஷ்டவசமாக சிற்றரசு ஒரு விபத்தில் உயிரிழந்தார். அந்த வேன் சில வருடங்களாக அவரது வீட்டிலேயே நின்றது.

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இந்த நிலையில்தான் நண்பன் சிற்றரசின் அரசுப் பள்ளி ஆசையை நிறைவேற்ற நினைத்த இளைஞர் மன்ற நண்பர்கள் சிற்றரசின் குடும்பத்தினர் அனுமதியுடன் அந்த வேனை எடுத்து வந்து பழுது நீக்கி சிற்றரசு நினைவு பள்ளி வாகனம் என்று இயக்கத் தொடங்கியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மேற்கு திருவள்ளுவர் மன்றம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் 67 மாணவர்களையும் அவர்களின் வீடுகளில் காலையில் ஏற்றி மாலையில் கொண்டு போய்விட ஆலோசித்தனர். பலர் பெட்ரோல் செலவுகளை ஏற்றுக் கொண்டனர். இளைஞர் மன்றத்தில் உள்ள ஓட்டுநர்கள் வேன் ஓட்டத் தயாரானார்கள்.

வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பள்ளிக்கான வேன் இயக்கும் தொடக்க விழா பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன் தலைமையில் இளைஞர் மன்றத்தினர், பெற்றோர் ஆசிரியர் கழகம், எஸ்எம்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் முன்னிலையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் வேன் வசதியை தொடங்கி வைத்தார். மாணவர்களுடன் வேன் செல்லும் போது பெற்றோர்களும் மாணவர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் ஏறிச் சென்றனர். 

 youth council bought a van for government school students who fulfilled their friend's wish

இது குறித்து இளைஞர்கள் கூறும் போது, “அரசுப் பள்ளியை வளமாக்க வேண்டும், அதனால் தனியார் பள்ளியைவிட தரம் உயர்த்த வேண்டும் என்று பள்ளியின் தேவையறிந்து செய்து வருகிறோம். அந்த வகையில் சிற்றறரசு வாங்கிய வேனை அவரது நினைவாக பள்ளிக்கு இயக்குகிறோம். இளைஞர் மன்றத்தினரே ஓட்டுநர்களாக உள்ளனர். இளைஞர் மன்றம் மூலமே பெட்ரோல் செலவுகளும் செய்து கொள்கிறோம். தொடர்ச்சியாக இந்த வேன் இயக்கப்படும் போது கூடுதல் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.