Skip to main content

நம்பிக்கையில்லா தீர்மானம் – வாஜ்பாயும், மோடியும்!

Published on 19/07/2018 | Edited on 20/07/2018

15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்தியில் ஆளுங்கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. 1996ல் நம்பிக்கைத் தீர்மானத்தை நிறைவேற்ற போதுமான ஆதரவு இல்லாததால் வீராவேசமாக உரையாற்றிய வாஜ்பாய் 13 நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். 1999ல் காங்கிரஸும், அதிமுகவும் சேர்ந்து வாஜ்பாய் தலைமையிலான கூட்டணி அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அவர் ஆட்சியை இழந்தார்.

 

vajpayee



அதற்குப்பிறகு மறுபடியும் 2003ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசுக்கு எதிராக காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தன. அந்த மக்களவையில் பாஜக வெறும் 182 இடங்களுடன் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து மொத்தம் 270 உறுப்பினர்களின் ஆதரவுடன் அரசு அமைத்திருந்தது. 114 உறுப்பினர்களை மட்டுமே வைத்திருந்த காங்கிரஸ் கொண்டுவந்த தீர்மானம் 312க்கு 186 என்ற வாக்கு கணக்கில் தோல்வியடைந்தது. மீதமுள்ள உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தனர். அதாவது, வாஜ்பாய் தனது ஆட்சியின் கடைசி ஆண்டில் சந்தித்த நம்பி்க்கையில்லா தீர்மானத்தை, பதவியேற்றபோது இல்லாத அளவுக்கு கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவோடு முறியடித்திருந்தார்.

 

 


15 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக தனிப்பெரும்பான்மை ஆதரவுடன், அதாவது 282 பேர் ஆதரவுடனும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் சேர்த்து 314 பேர் ஆதரவுடன் மோடி தலைமையில் ஆட்சியை அமைத்தது. ஆனால், இப்போது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ளும் மோடி அரசின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொண்டாலே, மோடியின் லட்சணம் தெரிந்துவிடும். ஆம், சொந்தக் கட்சியின் பலம் 282 என்று இருந்ததை கடந்த நான்கு ஆண்டுகளில் சபாநாயகரையும் சேர்த்து 272 ஆக்கியிருக்கிறார். இந்த எண்ணிக்கையிலும் கீர்த்தி ஆசாத் எம்.பி.யை பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது.

 

 

shatrughan sinha



சத்ருகன் சின்ஹா எம்.பி.யோ பாஜகவையும் மோடியையும் தினமும் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் லாலு கட்சியுடன் மிக நெருக்கமாக இருக்கிறார். ஆக, பாஜகவின் இன்றைய ஒரிஜினல் பலம் சபாநாயகரைச் சேர்க்காமல் 269 தான். இவர்களுடன் நியமன உறுப்பினர்கள் 2 பேர் இருக்கிறார்கள். இதுபோக, கூட்டணிக் கட்சிகளில் தெலுங்குதேசம், சிவசேனா, பாமக ஆகியவை வெளியேறிவிட்டன. அதாவது, ஆட்சி ஏற்கும்போது இருந்த பலத்தை சொந்த கட்சியிலும், கூட்டணி ரீதியாகவும் மோடி குறைத்திருக்கிறார்.

 

 


இந்நிலையில்தான், தெலுங்குதேசமும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் மோடி அரசுக்கு எதிராக மக்களவையில் கொண்டுவந்திருக்கிற நம்பிக்கையில்லாத் தீர்மானம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. 2014ல் மோடியை மிகப்பெரிய பிம்பமாக உருவாக்கி பாஜக பெற்ற வெற்றி ஒரு மாயை என்பதும், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறியதால்தான் பாஜக வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டும் பெற்றிருந்தாலும், இவ்வளவு அதிகமான இடங்களைப் பெற முடிந்தது என்பதும் அம்பலமாகி இருக்கிறது.

 

 

narendra modi



இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிச்சயமாக வெற்றிபெறும் என்று சொல்லமுடியாது. ஆனால், மோடியின் ஆளுமைத் திறன் என்ன என்பதை நாட்டு மக்களுக்கு புரியவைக்க உதவும். மோடி ஒரு வெற்றுவேட்டு, வாய்ச்சவடால் பேர்வழி, எதிர்க்கட்சிகளுடனோ, பத்திரிகைகளுடனோ, காட்சி ஊடகங்களுடனோ விவாதிக்கிற அறிவே இல்லாதவர். எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் எதிர்க்கட்சிகளை திட்டுவதையே தனது திறமை என்று நினைப்பவர். மோடியின் இந்த நிஜத் தோற்றத்தை, மக்களவையில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த இந்தத் தீர்மானம் உதவியாக இருக்கும். மோடி தனக்கு எதிராக இப்படி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதிக்கப்படுவதையே விரும்பவில்லை. இருந்தாலும், எப்படியும் வெற்றிபெற்று, இதையும் தனது சாதனையாக காட்டலாம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆம், அதனால்தான் முதல்நாளிலேயே தீர்மானத்தை எடுத்துக்கொள்ள சபாநாயகர் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
 

narasimha rao



அதே சமயம், எதிர்க்கட்சிகளுக்கு இது ஒரு வாய்ப்பு. பாஜகவை எத்தனைக் கட்சிகள் பகிரங்கமாக எதிர்க்க முன்வருகின்றன. எத்தனை கட்சிகள் வாக்களிக்காமல் தவிர்த்து இரட்டை வேடம் போடப் போகின்றன என்பதையெல்லாம் அறிந்துகொள்ள முடியும். எப்படியோ இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இருப்பவர்களில் எத்தனை கட்சிகள் 2019 தேர்தலில் அமையப்போகிற மெகா கூட்டணியில் இணைந்து போட்டியிட தயாராக இருக்கின்றன என்பதை அறியமுடியும். அந்த வகையில் நாளைய நம்பிக்கையில்லா தீர்மானத்தை நல்லதொரு வாய்ப்பாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.





 

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 மற்றும் 26ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.