Skip to main content

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள்... பாஜக, பாமக தொகுதிகள் திமுகவுக்குத்தான்” - நாஞ்சில் சம்பத் சவால்!

Published on 11/03/2021 | Edited on 11/03/2021

 

fgh

 

தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாட்டை அரசியல் கட்சிகள் தீவிரமாக செய்து வருகின்றன. ஆளும் அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு தற்போது தொகுதிகளை ஒதுக்கி வருகிறார்கள். அதிமுக தரப்பில் பாஜகவுக்கு 20 தொகுதிகளும், பாமகவுக்கு 23 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நடப்பு அரசியல் தொடர்பாக பல்வேறு கேள்விகளை திராவிட ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

திமுக கூட்டணிக்காக மாநிலம் முழுவதும் நீங்கள் பிரச்சாரம் செய்து வருகிறீர்கள். அவர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது. மக்களின் மனநிலைகள் நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கிறீர்களா?

திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த அதிமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற சத்திய ஆவேசம் இந்த மக்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது. எல்லா தரப்பு மக்களுக்கும் எதிரான ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெற்று வந்துகொண்டிருக்கிறது. இந்த அடாவடி ஆட்சியைக் குழித்தோண்டி புதைக்க வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.  

 

நீங்கள் தற்போது திமுகவில் உறுப்பினராக இல்லை, இருப்பினும் உங்களைப் போன்று பலரும் திமுக ஆட்சி வர வேண்டும் என்று நினைப்பதற்கு என்ன காரணம்? 


ஒரு கலாச்சார பாசிசம் தமிழகத்தில் காலூன்றத் துடிக்கிறது. என்னுடைய மொழிக்கும், பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் பேராபத்தை உருவாக்க மதவாதிகள் காத்துக்கிடக்கிறார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள். நான் பேசுகின்ற மொழி என்ன என்பதையும் அவர்கள் தீர்மானிப்பார்கள். இப்படி நாம் உண்ணும் உணவில், நாம் உடுத்தும் ஆடையில், நாம் பேசும் மொழியைத் தீர்மானிக்க சதிகாரர்கள் நம்மை காவு கேட்கிறார்கள். அவர்கள் இங்கே காலூன்றக் கூடாது என்பதற்காக எங்களைப் போன்றவர்கள் தீர்க்க தரிசனமாக யோசித்து செயலாற்றி வருகிறோம். அவர்களுக்கு எடுபிடியாக இந்த எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். எனவே அந்த கொடுமுடியையும், இந்த எடப்பாடி பழனிசாமியையும் அகற்றும் தேர்தலாக வரப்போகின்ற தேர்தலை நாங்கள் பார்க்கிறோம். 

 

கடந்த வாரம் அமித்ஷா குமரி வந்தபோது, வருகின்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றார். மேலும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், காமராஜரை காங்கிரஸ் கட்சி மறந்துவிட்டது என்று கூறினார். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? 


காமராஜர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியில்லாதவர்கள் இவர்கள். அவரை கொலை செய்ய கடுமையாக முயற்சி செய்தவர்கள். இதை யாரும் மறக்க மாட்டார்கள். தலைவர் காமராஜர் டெல்லியில் தங்கியிருந்தபோது, அவர் குடியிருந்த வீட்டை ஆர்எஸ்எஸ் அடிவருடிகள் தீயிட்டுக் கொளுத்தினார்கள். அவரை கொல்ல வேண்டும் என்ற ஒன்றை நோக்கத்திற்காக இவ்வாறு செய்தார்கள். இன்றைக்கு அவர்கள் நல்லவர்கள் போல் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள். அவரின் செயலை யாரும் மறக்கமாட்டார்கள். அவர்களின் ஏமாற்று வேலைகள் செல்லுபடியாகாது. வெள்ளாட்டின் தலையைக் காட்டி ஓநாயின் கறியை விற்பனை செய்யும் கயமைத்தனத்திற்கும் இவர்களின் செயலுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. 

 

அதிமுக கூட்டணியில் தாங்கள் பெற்றுள்ள 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணியைத் தோற்கடிப்போம் என்று பாஜக தலைவர் முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்களே? 


அதிமுக, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலேயே அந்த 20 தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கிய அடுத்த நிமிடமே அந்தத் தொகுதிகள் திமுக வசம் வந்துவிட்டன. தேர்தலை சந்திக்காமல் 43 தொகுதிகள் திமுகவின் மடியில் இருக்கிறது. இந்த 43 தொகுதிகளிலும் அவர்கள் தோற்பார்கள், நாங்கள் தோற்கடிப்போம். ஏனென்றால் அதிமுக மீது மேலாதிக்கம் செலுத்தி தமிழகத்தில் ஊடுருவலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது, நாங்கள் அதனை ஒருபோதும் நடக்க விடமாட்டோம். 

 

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.