Skip to main content

இதற்குத்தான் இத்தனை உயிர்களை பறித்தாரா மோடி? 

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
modi


 

2016 நவம்பர் மாதம்  8 ஆம் தேதி நள்ளிரவோடு இந்திய மக்கள் சிறுகச் சிறுக சேமித்து வைத்திருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார்.
 

 

 

அடுத்தநாள் முதல் லட்சக்கணக்கில் பணம் போட்டவர்கள்கூட வெறும் 2 ஆயிரம் ரூபாய்க்காக வங்கிகளின் வாசலிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்ட வரிசையில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்த கொடுமையைக் காணநேர்ந்தது.
 

வேலைக்கே போகமால் பணம் எடுப்பதும் பணத்தை மாற்றுவதுமே வேலையாகிப் போனது. அதிர்ச்சியிலும், வெயிலிலும் பலர் உயிரிழந்தனர். 6 மாதங்களில் கருப்புப்பணம் மீண்டுவிடும். அப்படி மீட்காவிட்டால் என்னை நடுரோட்டில் தீ வைத்து கொளுத்துங்கள் என்று மோடி சவால் விட்டார்.
 

மக்கள் படும் அவஸ்தைகளைப் பேசினால், எல்லையில் ராணுவ வீரர்கள் செய்யும் தியாகத்தை பாஜகவினர் பேசினார்கள். வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கிய கருப்புப்பணத்தை கைப்பற்றி இந்தியர்களின் கணக்கில் நபர் ஒருவருக்கு 15 லட்சம் ரூபாய் வங்கிக்கணக்கில் ஏற்றுவேன் என்ற மோடி, உள்நாட்டு மக்களின் சேமிப்புகளை நாசம் செய்தார். சிறு தொழில்கள் செய்தவர்கள் முடங்கினார்கள். புதிய ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடுவதற்கு முன்னரே கோடீஸ்வரர்களின் வீடுகளுக்கு கட்டுக்கட்டாக அனுப்பி வைத்தார்கள்.

 

 


ஏராளமான திருமணங்கள் பணமின்றி நடத்த முடியாமல் தடைப்பட்டன. வர்த்தகம் நாசமானது. சொந்தப் பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்க முடியாமல் மக்கள் அல்லாடினார்கள்.


வளர்ச்சிக்காக இந்தக் கஷ்டங்களைத் தாங்கும்படி மோடி கேட்டார். ஆனால், கருப்புப்பணம் பிடிபட்டதா என்றால் திரும்பிய பணத்தை கணக்கிட்டபிறகுதான் சொல்ல முடியும் என்றார்கள்.


இதோ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி மோடியின் உருப்படாத முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. மோடி செல்லாது என்று அறிவித்த நாளின் கணக்குப்படி புழக்கத்திலிருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 15 ஆயிரத்து 417.93 லட்சம் கோடி ரூபாய் திருப்பி வந்த நோட்டுகளின் மதிப்பு 15 ஆயிரத்து 310.73 லட்சம் கோடி ரூபாய்.  ஆக, வங்கிகளுக்கு திரும்ப வராதது 9 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டும்தான். பணமதிப்பிழப்பு மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணம் ஒழியும் என்ற மோடி இப்போது என்ன பதில் சொல்லப் போகிறார்?


அவர் என்றைக்கு பதில் சொன்னார்? எதையாவது அள்ளிவிட்டுவிட்டு போயிருவாரு. அவர் செய்ற ஒவ்வொரு வேலையும் அம்பானிகளுக்கும் அதானிகளுக்கும்தான் லாபம் தரும். மக்களுக்கு கஷ்டத்தை மட்டுமே கொடுக்கும் என்பதே இதுவரை நிஜமாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் வளர்ச்சியை நோக்கி என்ற ஒற்றைக் கோஷத்தை நாலேகால் ஆண்டுகளாக முழக்கி வருகிறார்கள்.

 

 


விரைவில் ஜிஎஸ்டி விதிப்பால் பலனடைந்தோர் யார் என்பதும், நாட்டுக்கு எவ்வளவு இழப்பு என்பதும் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறார்கள் மக்கள்...
 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.