Skip to main content

வாலேஸ் தேனீ; இரு நுற்றாண்டுகளுக்குப் பின் உயிருடன் இருப்பது கண்டுபிடிப்பு...!

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

மனித கையின் கட்டைவிரல் அளவிற்கு இருக்கும் பெரியதொரு ராட்சத பெண் தேனீ, இந்தோனேசிய தீவுகளில் உள்ள வடமோலுகாஸ் எனும் தீவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அறிவியல் உலகில் இதுவரை அழிந்துவிட்டதாக கருதப்பட்டுவந்த இந்த வகைத் தேனீ தற்போது கண்டறியப்பட்டிருப்பது, பூச்சியியல் அறிஞர்கள் மத்தியில் பெரும் புத்துணர்ச்சியை தந்துள்ளது. இந்த வாலேஸ் தேனீயை கண்டுபிடித்ததன் மூலம் உலகிலேயே அரிதான, அதிகமாக தேடப்படும் பூச்சிகளும் இந்த தீவில் நிறைந்திருக்கலாம் என்ற நம்பிக்கையும் பூச்சியியல் அறிஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. 

 

giant bee

 

6 செ.மீ அளவிற்கு வளரும் வாலேஸ் தேனீ பற்றிய விளக்கமளித்த பிரிட்டிஷ் இயற்கை மற்றும் ஆய்வாளர் ஆப்ஃபிரெட் ரசுல் வாலஸின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. 1858-ம் ஆண்டு வாலேஸ் தேனீ பற்றிய விளக்கத்தை இவர் அளித்து இருக்கிறார்.
 

அதுவரை வாலேஸ் தேனீ பற்றிய தெளிவான விளக்கத்தை வேறு அறிஞர்கள் அளித்து இருக்கிறார்களா என்பது பற்றிய சரியான தகவலும் கிடைக்கவில்லை என்பதாலும் இவரின் பெயர் அந்த தேனீக்கு சூட்டப்பட்டுள்ளது என்றும் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த தேனீ தொடர்பாக பலபேர், பல ஆண்டுகளாக தேடுதல் நடத்தியும் 2019-ம் ஆண்டு ஜனவரி இறுதி வரை யாருக்கும் இந்த வாலேஸ் தேனீ உயிருடன் இருப்பது தொடர்பான சரியான ஆதாரம் கிடைக்காமல் இருந்தது.
 

ஆனால் ஜனவரி மாதம் தொடக்கத்தில் இயற்கை வரலாறு புகைப்படக்கலைஞர் கிளே போல்ட் தன் குழுவுடன் வடமோலுகாஸ் தீவில் தீவிரமான தேடலில் ஈடுப்பட்டுள்ளார். இவர்கள் குழு முதலில் ஒரு மர இடுக்கில் இந்த தேனீ கூட்டை கண்டுள்ளனர். அதன் பின் அதனை தொடர்ச்சியாக கண்காணிக்க வளர்ந்த வாலேஸ் பெண் தேனீ ஒன்றை கண்டுள்ளனர்.
 

இதைப் பற்றி இயற்கை வரலாறு புகைப்படக்கலைஞர் கிளே போல்ட் கூறும்போது, “இதற்கு முன்னால் உயிரிரோடு இருந்ததாக உறுதியாக சொல்ல முடியாமல் இருந்த வாலேஸ் தேனீ எங்கள் முன்னால் தலைக்கு மேலே பறந்து செல்வதை காட்டில் நேரில் பார்த்தபோது, பெரும் ஆச்சரியமடைந்தோம். மேலும் எனது தலைக்கு மேலே அதனுடைய ராட்சத இறக்கைகளை அடித்து பறந்து செல்லும்போது உருவான ஒலியை கேட்டதும் உண்மையிலேயே பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்” என்றார்.  

 

 

 

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

Next Story

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனம் ஊழல்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Adani company issue in coal import

 

நிலக்கரி இறக்குமதி செய்ததில் அதானி நிறுவனம் ஊழல் செய்தது அம்பலமாகியுள்ளது.

 

இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு நிலக்கரி இறக்குமதி செய்ததில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த ஊழல் குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் பைனான்ஸ் டைம்ஸ் என்ற இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை நிலக்கரி இறக்குமதி ஊழலில் அதானி நிறுவனம் ஈடுபட்டு வருவதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.

 

அதாவது இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையை இரு மடங்கு அதிகமாகக் காட்டி அதானி நிறுவனம் மோசடி செய்துள்ளதாக பைனான்ஸ் டைம்ஸ் இதழ் புகார் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் இருந்து அதானி நிறுவனம் இறக்குமதி செய்யும் நிலக்கரி நேரடியாக இந்தியாவிற்கு வந்து சேரும் நிலையில், துபாய், சிங்கப்பூர் மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள 4 நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக ரசீதுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தோனேசியாவில் 130 டாலருக்கு வாங்கப்படும் ஒரு டன் நிலக்கரி இந்தியாவிற்கு வந்து சேரும் போது இடைத்தரகர்கள் மூலம் 169 டாலராக விலை உயர்த்தப்படுகிறது என அந்த இதழ் தெரிவித்துள்ளது.