Skip to main content

பாஜக தலைவருடன் சந்திப்பு! பதவியை பறிகொடுத்த வி.பி.துரைசாமி 

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

திமுகவின் துணைப்பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார் வி.பி.துரைசாமி. இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நீக்கப்பட்ட துரைசாமி, விரைவில் பாஜகவில் இணைவார் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

திமுக தலைமை மீது கடந்த சில வருடங்களாகவே அதிர்ப்தியில் இருந்தார் வி.பி.துரைசாமி. குறிப்பாக, ராஜ்யசபா சீட் அவர் கேட்டும் அவருக்கு தரப்படாததில் ஏக வருத்தத்தில் இருந்தார். மேலும், துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் மாற்றப்படலாம் என்கிற தகவல் கிடைத்ததும் அவரது அதிர்ப்தி கூடுதலாக விரிவடைந்திருந்தது.

 

Meeting with BJP leader VP Duraisamy

 

இந்த நிலையில், சமீபத்தில் பாஜகவின் தலைமையகமான கமலாலயத்திற்கு சென்று பாஜக தலைவர் முருகனை சந்தித்து கிட்டத்தட்ட 1 மணி நேரம் அரசியல் ரீதியாக விவாதித்தனர். இருவரும் அருந்ததியர் சமூகம் என்பதால் பல விசயங்களை மனம் விட்டுப் பேசிக்கொண்டனர் ( இவர்களது சந்திப்பின் ரகசியங்கள் குறித்து நேற்று வெளியான நமது நக்கீரன் ராங்கால் பகுதியில் பதிவு செய்துள்ளோம்).

இந்த சூழலில், பாஜக தலைவர் முருகனை சந்தித்து அவர் பேசியதை அறிந்து திமுக தலைமை கோபம் கொண்டது. அவரிடம் ஸ்டாலின் தரப்பில் பேசிய போதும், முறையான பதிலை அவர் தெரிவிக்கவில்லை. மேலும் தனது அதிர்ப்தியை திமுகவின் முன்னணி தலைவர்கள் பலரிடமும் வெளிப்படுத்தியிருக்கிறார் வி.பி.துரைசாமி. இப்படிப்பட்ட சூழலில், பாஜகவில் அவர் இணைய விருப்பதை திமுக தலைமை உறுதிப்படுத்திக்கொண்ட நிலையில் , துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைப்பொது செயலாளர் பதவியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பியை நியமித்திருக்கிறது அறிவாலயம்.

 

Meeting with BJP leader VP Duraisamy


கட்சி பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வி.பி.துரைசாமி, விரைவில் பாஜகவில் சேர விருக்கிறார். அவருக்கு தேசிய தாழ்ப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றன தமிழக பாஜக வட்டாரம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.