Skip to main content

மதிமுகவின் ஒரே வேட்பாளர் எப்படிப்பட்டவர்?  

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

கடந்த வாரத்தில் திமுக கூட்டணியின் தேர்தல் பங்கீடு குறித்த அறிவிப்பு வெளிவந்தது. மதிமுகவுடன் 2,3 சுற்று பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் வாய்ப்பும் வழங்கப்படும் என்று திமுக தலைமையால் அறிவிக்கப்பட்டது.
 

ganeshamoorthy



அறிவிப்புக்கு முன்பு வரை, மதிமுக தொண்டர்கள், அரசியல் பார்வையாளர்கள் என அனைத்து தரப்பிலிருந்தும் பல கணிப்புகள் வந்தன. விருதுநகர், திருச்சி, ஈரோடு, காஞ்சிபுரம் தொகுதிகள் கேட்கப்பட்டிருப்பதாகவும், இரண்டு உறுதி என்பதாகவும் இருந்தன அந்த கணிப்புகள். இறுதியில் மக்களவை தேர்தலில் ஒரு தொகுதி என்று அறிவிக்கப்பட்டது. கணிப்புகளிலும் சரி, கட்சியிலும் சரி, 'இவர் தேர்தலில் போட்டியிட வேண்டும்' என்று அனைவராலும் வைகோவுக்கு அடுத்ததாக எதிர்பார்க்கப்பட்ட பெயர் கணேசமூர்த்தி. ஆம், ஈரோட்டின் திராவிட அரசியலில் நெடுநாளாக அங்கம் வகிக்கும் முகம்.        
 

கணேசமூர்த்தி மதிமுகவின் வேட்பாளராக ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தேர்தலில் மதிமுகவின் ஒரே வேட்பாளர். இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றுள்ள இவர் ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர். இளங்கலை பொருளியல் படிப்பை முடித்துவிட்ட சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். 1984ல் திமுகவின் ஈரோடு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது.
 

பின் 1994ல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருடன் வெளியே வந்தார். பின் மதிமுக உதயமானதும், மதிமுகவின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவரானார். 1994ம் ஆண்டிலிருந்து மதிமுகவின் ஈரோடு மாவட்டச் செயலாளராக இருந்தார். அதன்பின் அக்கட்சியின் மாநில பொருளாளராக தேர்வானார். தற்போதும் அவர் அவ்வாறே தொடர்கிறார்.
 

கணேசமூர்த்தியின் தேர்தல் பயணம் 1998ம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. அந்தாண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் பழனி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு ஈரோடு மக்களவைத் தொகுதியில் நின்று வெற்றிபெற்றார். அந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற ஒரேயொரு மதிமுக வேட்பாளர் இவர்தான். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மீண்டும் ஈரோடு தொகுதியில் நின்றார். ஆனால் இந்தமுறை அவர் வெற்றி பெறவில்லை. தற்போது மீண்டும் ஈரோடு தொகுதியில் போட்டியிடுகிறார். 
 

எந்த நேரமும் யாரும் சந்திக்கக் கூடிய எளிமையும் தொகுதி நிதியை முழுதாகப் பயன்படுத்தினார் என்ற பெயரும் நாடாளுமன்றத்தில் திறன்பட செயல்பட்டார் என்ற நன்மதிப்பும் கணேசமூர்த்திக்கு சாதகமாக இருப்பவை. திமுக கூட்டணியின் ஈரோடு தொகுதி வேட்பாளர், மதிமுகவின் ஒரே வேட்பாளர் வென்று மீண்டும் நாடாளுமன்றம் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

 

 

 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்