Skip to main content

இந்தியர்களுக்கு பிற நாடுகள் குடியுரிமை மறுத்தால் அவர்களுக்கு மத்திய அரசு சம்பளம் கொடுக்குமா..? - சீமான் கேள்வி!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019


குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தில்லியில் உள்ள அலிகர் மற்றும் ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள். இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இந்த விவகாரம் இந்திய அளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிமைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த மதோதா மற்றும் அதை தொடர்ந்து இப்போது கொண்டுவரப்பட்டுள்ள என்ஆர்சி ஆகிய இரண்டும் இந்திய மக்களுக்கு எதிரானவை. இந்திய இறையாண்மைக்கு எதிரானவை. மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்துக்கு எதிரானது. தனமனித சுதந்திரத்துக்கு வேட்டுவைப்பது. நாம் தமிழர் கட்சி இதை கடுமையாக கண்டிக்கிறது. ஒருபோதும் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த பூமியில் வசிக்கின்றவனுக்கு இந்த நாட்டில் வாழ உரிமையில்லை என்று கூறுவதை நீதி, நேர்மை ஆகியவற்றோடு யோசிப்பவன் ஒவ்வொருவனும் உணரமுடியும் இதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று. உயிர்களை கொள்வதே பாவம் என்று சொன்ன புத்தர் பிறந்த பூமி இது. புல், பூண்டை கூட தேசப்படுத்த கூடாது என்று வாழ்ந்த மகாவீரர் அவதரித்த புண்ணிய பூமி இது. அகிம்சையை போதித்த காந்தி பிறந்த இந்த மண்ணில் இந்த செயலை செய்வது என்பது மிக இழிவாக இருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளை சேர்ந்த இந்துக்கள் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுப்பு தெரிவிக்கிறீர்கள். உலகம் முழுவதும்  பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில்  இந்தியர்கள் வசிக்கிறார்கள். 

 

k



நல்ல நிலையில், நல்ல பணியில் வாழ்ந்து வருகிறார்கள். உங்களை போன்று அவர்களும் இவ்வாறு ஒரு சட்டத்தை போட்டு குடியுரிமை இல்லை என்று கூறினால் அவர்களுக்கு, நீங்கள் அங்கு வாங்கும் சம்பளத்துடன் கூடிய பணியை வழங்குவீர்களா? இது தேவையில்லாத விளைவுகளை உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்களுக்கு ஏற்படுத்தும். இது எந்த மாதிரியான அணுகுமுறை என்றே தெரியவில்லை. வேண்டாத விளைவுகளை ஏற்படுத்த வழி ஏற்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேர்தலில் வாக்களிப்பதற்கு ரேஷன் கார்டை பயன்படுத்தினோம். டி.என் சேஷன் தேர்தல் ஆணையராக வந்த பிறகு வாக்காளர் அடையாள அட்டை திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்போதெல்லாம் யார் வாக்களிக்க வேண்டும் என்பது அவர்களின் கைகளுக்கு சென்றுவிட்டது. இப்படிதான் கன்னியாகுமரியில் உள்ள கிருஸ்துவ மீனவர்கள் 40,000 பேரின் வாக்குகளை இல்லாது ஆக்கிவிட்டார்கள். அதை போலத்தான் இந்த சட்டம் மூலம் நாம் இங்கே பிறக்கவில்லை, இந்த நாட்டின் குடியுரிமையை வழங்கமாட்டோம் என்று சொல்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கின்றது. நீங்களே நிரூபியுங்கள் என்றால், நம்மை கணக்கெடுக்க வரும் அதிகாரி நினைத்தால் எதையும் செய்ய முடியுமே? அதில் நாம் என்ன செய்ய முடியும். 

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் குளுகோஸ் ஏற்ற ஒரு ஸ்டாண்ட் இல்லாமல் ஒரு தாய் மூன்று மணி நேரம் கையில் பிடித்துக்கொண்டு நிற்கிறார். இந்த அவலத்தை போக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டின் பொருளாதார சூழ்நிலை முன் எப்போதையும் விட பாதாளத்தில் இருக்கின்றது. அண்டை நாடுகளை விட பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை மீட்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வங்கியில் இருந்து பெரிய அளவிலான பணத்தை கடன் வாங்குகிறீர்கள். ஏன் என்று இதுவரை காரணம் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். பேனா, பென்சில் வாங்குவதற்கு கூட ஜிஎஸ்டி போடுகிறீர்கள். அந்த பணத்தை எல்லாம் என்ன செய்கின்றீர்கள் என மக்களுக்கு சொல்லவில்லை. அவை எல்லாம் எந்த வழியில் மக்களுக்கு போய் சேர்கிறது என்றும் தெளிவுப்படுத்தவில்லை. குடிமக்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் முதலில் நாட்டில் உள்ள மாணவர் சமூகம்தான் களத்துக்கு வருவார்கள். அவர்கள்தான் போராட்டத்தை முன் எடுப்பார்கள். அவர்களை அடித்து மிரட்டி பணிய வைக்கலாம், அல்லது துப்பாக்கிச்சூடு செய்யலாம் என்று நினைப்பது எல்லாம் அராஜகத்தின் உச்சமாக இருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்