Skip to main content

"பலம் நீயப்பா தமிழர் பலம்  நீயப்பா" - சீமானைப் பாடிய மன்சூர்!  

Published on 19/02/2018 | Edited on 19/02/2018

நாம் தமிழர் கட்சியின்  'வீரத்தமிழர் முன்னணி'  நடத்திய திருமுருகப்பெருவிழா திருச்செந்தூரில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. எப்பொழுதும் நாம் தமிழர் கட்சியின் கூட்டமென்றாலே சீமானின் பேச்சு தான் அனல் பறக்கும். ஆனால் திருச்செந்தூர் திருமுருகப்பெருவிழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு களைகட்டியது. இவர் மேடையேறியதும் மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.
 

Mansur Ali Khan Singing about Seeman


மேடையேறி சிறிது நேரம் பேசியவர் திடீரென பாடத்துவங்கிவிட்டார். அவர் முருகன் பாடலை பாடியுதும் மக்கள் கூட்டம் கைதட்டல்களை அள்ளிவீசியது. "ஞானப்பழத்தைப் பிழிந்து என்று தொடங்கி அதுவரை முருகனின் புகழ் பாடும் வரிகள் முடிந்ததும், "பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா" என்பதை மாற்றி "பலம் நீயப்பா தமிழர் பலம்  நீயப்பா"  தமிழரின் பலம் நீயப்பா" என்று சீமானை புகழ்ந்து படத்தொடங்கிவிட்டார். அவர் பாடிய புகழ் கீதம் இது.

பலம் நீயப்பா தமிழனின் பலம் நீயப்பா 
என் தமிழன் சீமான் அப்பா 
பலம் நீயப்பா பலம் நீயப்பா தமிழ்நாட்டின் தல நீயப்பா 
பலம் நீயப்பா பழம் நீயப்பா 
பைந்தமிழர் படை  நீயப்பா 
சபைதன்னில் திருச்சபைதன்னில்
உருவாகி புலவோருக்குப்  பொருள் கூறும் 
படை நீயப்பா செந்தமிழரின் படை நீயப்பா
தமிழ்நாட்டின் தலை நீயப்பா 
உலகெங்கும் தமிழை உயர்த்த வந்த தமிழ் நீயப்பா 
பழம் நீயப்பா தமிழ் பழம் நீயப்பா
இன்றும்  நீ வணங்காமுடியப்பா 
கண்ணொன்றில் கனலாய்  வந்தாய்   
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் 
தமிழை எதிர்ப்போர்க்கு நெருப்பாய் வந்தாய் 
கார்த்திகைப் பெண்பால் உண்டாய் 
ஔவை பாட்டியின் தமிழ்பால் உண்டாய் 
தமிழ் வளத்தை நம் நிலத்தை நாசமாக்கும் 
நீசர்களை விரட்ட வந்த வேல் முருகனப்பா 
வெகுடெழுந்த சீமானின் முறுக்கேறும் நரம்புகளில்
துடித்தெழும் வீரம் உண்டு 
தாயுண்டு கோடி தம்பிகள் உண்டு 
போராடும் களப்பணிக்கு கோடான கோடி தமிழர் உண்டு 
உன் தத்துவம் சரி என்று ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு 
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத அறிஞனா நீ 
மாறுவது மனம் சேருவது இனம் அறியாத முருகனா நீ 
அறுபடை வீடு அடங்காத நாடு 
மீத்தேன் ஒழிக்க அணுஉலை சாகர் மாலாவை ஒழிக்க 
ஏறு மலை ஏறு மக்களிடம் நாடு 
ஏறு மலை ஏறு மயில் மீது ஏறு 
மக்களிடம் நாடு அரியணை ஏற வா நீ 
ஏற்றுக்கொள்வான் கூட்டிச்செல்வீர் 
அரியணை ஏற  வா நீ

 என்று பாடலை முடித்த அவர், "உரக்கச் சொல்லுங்கள்  நாம் தமிழர் என்று,ஓங்கிச்சொல்லுங்கள் நாம் தமிழர்" என்று தன் இசை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டார். கரகோஷம் கடலில் கலந்து மூழ்க சற்று நேரமானது. இந்தப் பாடலை பாடிய கே.பி.சுந்தராம்பாளும், பாடலுக்கு இசை அமைத்த கே.வி. மகாதேவனும் , பாடலை எழுதிய கவியரசு கண்ணதாசன் ஆகியோர் இதை கேட்பதற்கு  இல்லையே என்ற வருத்தம் வருகிறது.

 

 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்