Skip to main content

தொண்டு நிறுவனத்தில் நடந்தது என்ன?- முழு விவரம்

Published on 26/02/2018 | Edited on 26/02/2018

ம்புலன்சிலிருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு, அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஓடிவந்தார்கள். வாகனத்தை மடக்கினர். கதவைத் திறந்தால் காய்கறி மூட்டைகளுடன் வயதான இரண்டுபேர் உயிர் பயத்துடன் அலறிக்கொண்டிருந்தனர். காரணம், அவர்கள் பக்கத்திலேயே ஒரு முதியவரின் பிணம் இருந்ததுதான்.

இந்தக் காட்சியைக் கண்டு அதிர்ச்சியான ஊர்க்காரர்கள், டிரைவரை தேடினார்கள். ஆள் எஸ்கேப். உயிர்பயத்தில் இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த 72 வயது செல்வராஜையும், திருவள்ளூரைச் சேர்ந்த 74 வயது அன்னம்மாளையும் கீழே இறக்கிவிட்டு, ஆம்புலன்ஸை அடித்து நொறுக்கினர். போலீசுக்கும் புகார் தெரிவிக்கப்படவே, அவர்கள் வந்து விசாரித்ததில், இறந்து போயிருந்தவர் பெயர் விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவருக்கு வயது 75.

oldagehome

எல்லோருமே முதியவர்கள். எல்லோருமே செயின்ட் ஜோசப் கருணை இல்லத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் கிராமத்தின் மலையடிவாரத்தில் இந்தத் தனியார் தொண்டு நிறுவனம் 16 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது. முதியவர்கள் உரிய உணவின்றி பட்டினி போட்டுக் கொல்லப்படுவதாகவும், தப்பித்துப் போக நினைப்பவர்களை மடக்கிப் பிடித்து மீண்டும் காப்பகத்தில் திணிப்பதாகவும், இறந்தவர்களின் எலும்புகளை எடுத்து மருந்து தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுப்புவதாகவும் காப்பகத்தின் மீது புகார்கள் குவிந்துள்ளன. இதுபற்றி 2013-ஆம் ஆண்டிலேயே நக்கீரனில் எழுதியுள்ளோம். இந்நிலையில்தான், கடந்த 20-ந் தேதி இறந்த உடலுடனும் காய்கறி மூட்டைகளுடனும் உயிர் பயத்தில் அலறிய இரண்டு முதியவர்களை ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

oldagehomeoldagehomeoldage-home

உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் நம்மிடம், ""என்னோட வீட்ல இருந்து அரை கிலோமீட்டர்லதான் கருணை இல்லம் இருக்கு. 2013-ல் சில புகார் வந்துச்சு. அப்போ நான் எம்.எல்.ஏ. கிடையாது. அப்போதைய மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கல. கருணை இல்லத்துல இருக்கிற மர்ம அறையில ஏன் அந்த பிணங்கள அடைக்கிறாங்கனு தெரியல. இனியாவது முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும்'' என்றார். "மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை என்ன?' என்ற நம் கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் கலெக்டர் பொன்னையன்.

மாவட்ட சமூகநல அலுவலர் சங்கீதா, ""பிணத்தை ஏற்றிக்கொண்டு, அதில் காய்கறியுடன் இரண்டு முதியவர்களை அடைத்து அழைத்து வந்தது குற்றம். அதற்கான அறிக்கையை ஆர்.டி.ஓ மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விசாரணையை தற்போது மத்தியக்குழு நடத்தி வருகிறது'' என்றார்.
fater
காப்பகத்தை நடத்திவரும் பாதர் தாமஸ் நம்மிடம் விளக்கமளித்தார். ""மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் முதியவர்களுக்கு ஆதரவளிக்கும் இல்லம் இது. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். இங்கே வேலை செய்ய வரும் ஆட்களின் எண்ணிக்கை குறைவு. சம்பவத்தன்று, மற்ற இரண்டு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் லீவ் என்பதால், இருந்த ஒரு டிரைவர் மட்டும் தாம்பரம் இரும்புலியூரில் உள்ள எங்கள் கிளையில் இறந்துபோன பிணத்துடன், காய்கறி மூட்டைகளுடன் இரண்டு முதியவர்களை அழைத்து வந்துள்ளார். இது எனக்கே தெரியாமல் நடந்தது. மற்றபடி, முதியவர்களிடம் உடலுறுப்புகள் திருடப்படுவதாகவும், அவர்களை சாகவிட்டு, உடலிலிருந்து எலும்புகளை எடுத்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதாகச் சொல்வதும் முற்றிலும் தவறானது'' என்றார்.

அவரே மேலும், ""யாராலும் கவனிக்கப்படாமல் கைவிடப்பட்ட முதியவர்கள் இறக்கும் நிலையில் உள்ளபோது, போலீசாரால் இங்கு கொண்டுவந்து விடப்படுகிறார்கள். கடந்த ஏழு ஆண்டில் 1590 பேரை அடக்கம் செய்துள்ளோம் அவர்களின் விவரம் போட்டோவுடன் இங்குள்ள பதிவேட்டில் உள்ளது. ஆகவே அவர்களைப் புதைத்தால் சுற்றுப்புற நிலத்தடி மாசு ஏற்படும் என்பதால், நிறைய அறைகளைக் கொண்ட நவீன கல்லறையைக் கட்டியுள்ளோம். இது இந்தியாவில் முதன்முறை என்பதால் இதைப்பற்றி அறியாதவர்களும் வேறு எதிர்பார்ப்பு உள்ளவர்களும் மக்களைத் தூண்டிவிடுகிறார்கள்'' என்றார்.

oldageசமூக ஆர்வலர் தீனன், ""இந்தக் காப்பகத்தின் நவீன கல்லறை என்பது, நிலத்தடிநீர் மாசு அடையாதபடி "டிப்லான்' தொழில் நுட்பத்தில் 90 சிறு அறைகள் கொண்டதாகும். அதில் இறந்தவர்களின் உடல் சேமிக்கப்பட்டு பின்னர், சில ஆண்டுகள் கழித்து எலும்பு உள்ளிட்ட ஒரு சில பகுதிகளே மிஞ்சியுள்ள நிலையில் தகனம் செய்வார்கள். இது போன்ற முறை ஐரோப்பிய நாடுகளில் உள்ளன''’என்று விளக்கினார்.

இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும், இறந்த உடலுடன் உயிருடன் போராடியவர்களையும் காய்கறிகளையும் ஏற்றிச் சென்றதே மக்களின் சந்தேகத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் தரவேண்டிய காப்பகங்களில் நிலவும் பலவித விதிமீறல்கள், ஆள் பற்றாக்குறை, அலட்சியம், அரசு அதிகாரிகள் கேட்கும் லஞ்சம், லோக்கல் அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு ஆகியவை சேவை மனப்பான்மையை மீறிய செயல்பாடுகளுக்குக் காரணமாகின்றன. சொந்த பந்தங்களெல்லாம் கைவிட்ட நிலையில், மனதளவில் குற்றுயிரான முதியவர்களுக்கு மரணப்படுக்கையாகின்ற கருணை இல்லங்கள், கருணைக் கொலை இல்லங்களாக மாறுகின்றன.

Next Story

“பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.

Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திருமணத்திற்குச் சென்று திரும்பிய நகைக்கடை அதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
The jewelry store owner who returned from the wedding was shocked

காஞ்சிபுரம் மாநகர எல்லைக்கு உட்பட்ட விளக்கடி கோயில் தெருவில் நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் கீழ்த் தளத்தில் நகைக்கடையும், மேல் தளத்தில் வீடும் உள்ளது. இவர் 150 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைத் தனது வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகக் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் சென்னை சென்றுள்ளார்.

இதனைத் தெரிந்துகொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டிலிருந்த 150 சவரன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் மகாவீர் சந்த் இன்று சென்னையிலிருந்து காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார். அப்போது தனது வீட்டிலிருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் இது குறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் மகாவீர் சந்த் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். வீட்டைப் பூட்டிவிட்டுத் திருமண விழாவுக்கு சென்றிருந்த நிலையில், மர்ம நபர்கள் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.