Skip to main content

கமலும் சிம்புவும் சொன்னது ஒன்று... ஆனால், ரஜினி சொன்னது வேறு!

Published on 15/04/2018 | Edited on 15/04/2018

"நீங்கள் கத்தியை எடுத்திருந்தால், நாங்கள் துப்பாக்கியை எடுத்திருப்போம். நீங்கள் துப்பாக்கியை எடுத்திருந்தால், நாங்கள் அதைவிட பெரிய ஆயுதத்தை எடுத்திருப்போம். ஆனால் நீங்கள் ஆயுதமாக எடுத்தது அகிம்சையை அதைவிட பெரிய ஆயுதம் எதுவுமில்லை" என ஆங்கிலேயர்கள் சுதந்திர போராட்ட தருணத்தின்போது கூறியதாக கூறுவார்கள். ஆம் அகிம்சையைவிட பெரிய ஆயுதம் எதுவுமில்லை.

 

rajini kamal simbu



சமீபத்தில் சிம்பு அளித்த ஒரு பேட்டியில், "கர்நாடக மக்கள் யாரும் தண்ணீர் தரமாட்டோம் என கூறவில்லை. அங்கிருக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் ஆதாயத்தை தேடுபவர்கள் மட்டுமே இதை செய்கிறார்கள். நான் நேரடியாக என் கர்நாடகதாய்மார்களிடம் கேட்கிறேன். நீங்கள் கூறுங்கள், நீர் இல்லையென்று" என ஒரு பெரிய பேட்டி கொடுத்திருந்தார். அதற்கு ஒரு பெரிய பதிலும் கிடைத்திருந்தது. அவர் குறிப்பிட்ட நேரம் நெருங்கும் வரையிலும்கூட யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர் குறித்த நேரம் தொடங்கியவுடன் ஒவ்வொரு வீடியோவாக வெளிவரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து புகைப்படங்கள், பதிவுகள் என ஆதரவு பெருகிக்கொண்டே இருந்தது. ஒரு கன்னட அமைப்பு பேருந்து ஓட்டுனருக்கு தண்ணீர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் பேச்சு அங்கிருக்கும் பலரின் மனதில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது உண்மையே.

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்ற போது  அதன் தலைவர் கமல்ஹாசன், "நாம அகிம்சையா கேப்போம், ஒத்துழையாமை இயக்கம் மாதிரி ஒரு போராட்டத்தை நடத்துவோம். வெள்ளையனே வெளியேறுனு சொன்னா போதும். 'டேய் வெள்ளைக்காரா வெளியே போ' அப்படினு சொல்லவேண்டிய அவசியம் இல்ல" என்று கூறினார். இந்த இரண்டிற்குமே மக்களிடமிருந்து பெரிய வரவேற்பு கிடைத்தது. இவ்விரண்டினால் மட்டும் காவிரி நீர் கிடைத்துவிடுமா என்றால் அது கண்டிப்பாக இல்லை. ஆனால் வெகுஜன மக்கள் வன்முறையை விரும்புவதைவிட அகிம்சையையே விரும்புகிறார்கள் என்பது இந்த பேச்சுகளுக்குக் கிடைத்த ஆதரவில் தெரிய வந்தது. 

 

ipl protest



அதே நேரம் களத்தில் இறங்காமல் எதுவும் நடக்காது. களத்தில் அகிம்சையாக நடக்கிறோமா இல்லையா என்பதுதான் விஷயம். அதெல்லாம் இல்லை, காந்தி காலத்து முறை இப்போது எப்படி சரியாக வரும் என்று கேட்பவர்கள் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நாம் ஜல்லிக்கட்டை திரும்ப பெற்றது அகிம்சையால்தான். நம் நாட்டின்  சுதந்திரத்திற்கு ஆயுதம் ஏந்தியவர்களின் பங்கு அளப்பரியதுதான் என்றாலும், நாம் அதை அகிம்சையால்தான் வென்றோம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும் போது IPL தேவையா என்று கேட்டு சென்னையில் நடந்த IPL போட்டியை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்பொழுது சிலர் போட்டியை காண வந்த ரசிகர்களை சிலர் தாக்கினர். போராட்டக்காரர்களை காவலர்கள் தாக்கியதும் ஒரு இடத்தில் காவலர் ஒருவரை சிலர் தாக்கியதும் நடந்தது. இவை கண்டிக்கப்பட வேண்டியது. 

 

rajini tweet



காவிரி பிரச்சனையில் பெரிதாகக் கருத்து சொல்லாமலிருந்த ரஜினி, காவலர் தாக்கப்பட்டதை எதிர்த்து காட்டமாக ட்வீட் செய்தார். பலருக்கு ஆச்சரியமாக இருந்தது, சிலர் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். எதற்காக திடீரென்று கருத்து சொன்னாரென்று தெரியவில்லை. ஆனால், ரஜினி பேசும் அகிம்சையும் கமல், சிம்பு சொன்ன அகிம்சையும் வேறு வேறு என்பது தெரிகிறது.       

 

     

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார் முதல்வர்'-கமல்ஹாசன் பேச்சு 

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Chief Minister has gone to jail and struggled against dictatorship' - Kamal Haasan speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவை ஆதரித்து நங்கநல்லூர் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டார். அவர் பேசுகையில், 'சர்வாதிகாரத்தை எதிர்க்க வேண்டும் என்பது இப்போதல்ல அவருடைய இளமையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜெயிலுக்கெல்லாம் போய் கஷ்டப்பட்டிருக்கிறார். எதற்காக அப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்துதான். இப்பொழுதும் சர்வாதிகாரத்தை எதிர்த்து தான். கட்சிகள் எல்லாம் அப்புறம் மக்களுக்கு சர்வாதிகாரம் பிடிக்காது. நல்ல தலைவனுக்கும் அது பிடிக்காது. ஆயிரம் அன்னசத்திரம் வைத்தாலும் ஒருத்தனுக்கு படிப்பு கற்றுக் கொடுத்து விட்டால் அது அதற்கு சமம் என்று சொல்வார்கள். ஆனால் முதல்வர் முதலில் நீங்கள் சாப்பிடுங்க அப்புறம் படி என இரண்டையும் செய்கிறார். அது ரொம்ப முக்கியம். அவருடைய மகன் உலகத்தரத்தில் நம்முடைய தமிழர்கள் ஸ்போர்ட்ஸில் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக உலக தரத்தில் பல ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்.

பணக்கார வீட்டு பிள்ளைங்க, வசதியாக இருப்பவர்கள் டைம் இருக்கும் பொழுது விளையாட்டு பழகக் கூடியவர்கள் மட்டும்தான் செய்ய முடியும் என்பதில்லாமல் இந்த வீதியிலிருந்து நாளை ஆசிய சாம்பியன் வரலாம், இந்த வீதியில் இருந்து வரலாம், சாதி, மதம், வசதி பற்றி எதுவும் இல்லை. உங்கள் திறமை தான் அதை முடிவு செய்யும். ஆண் பெண் என்ற பேதம் கூட கிடையாது. நல்ல திறமை இருந்தால் அகில உலகில் பதக்கம் வெல்லும் போட்டியின் வெற்றியாளர்களாக ஆக முடியும்'' என்றார்.