Skip to main content

வனத்துறை அமைச்சர் உள்ளே... வனத்துறை நோட்டீஸ் வெளியே... களைகட்டிய மகா சிவராத்திரி

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

கோவை வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் நேற்று 25-வது மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா இன்று காலை 6 மணிக்கு முடிவுற்றது. இதில் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கலந்துகொண்டனர். 

 

isha

 

நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில் நடிகைகள் தமனா, காஜல் அகர்வால், நிஷா அகர்வால், சுஹாசினி மற்றும் அதித்தி ராய் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் பாகுபலி நடிகர் ராணாவும் இருந்தார். மேலும் பாடகர்கள் கார்த்திக், ஹரிஹரன் மற்றும் அமித் திரிவேதி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

 

isha

 

இதில் பக்தி பாடல்கள், சொற்பொழிவுகள் ஆகியவையும் நடந்தது. ஒரு கட்டத்தில் பாடகர் கார்த்திக் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ‘அதோ அந்த பறவை போல் வாழ வேண்டும்’ எனும் பாடலை பாடினார். இதற்கு காஜல், நிஷா காஜல், தமனா ஆகியோர்கள் நடனமாடினர்.
 

அரசியல் தலைவர்களில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த விழாவை தொடக்கிவைத்தார். இவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இருந்தார். மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயல் இருந்தார். தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் அ.தி.மு.க.வின் எஸ்.பி.வேலுமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
 


கிட்டத்தட்ட 12 மணிநேரமாக நடந்த இந்த விழாவில், நள்ளிரவு 12 மணி அளவில் ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதி யோகி சிலை திடீரென டிஜிட்டல் மயமாக மாறியது. நள்ளிரவு 12 மணி அளவில் அங்கு இருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டது. அதன் பின் ஆதி யோகி சிலையில் டிஜிட்டல் விளக்குகளால் பல்வேறு வண்ணங்களில் ஜொலித்தது. முதலில் ஆதியோகியின் தலைமேல் இருக்கும் பிறை தோன்றியது, அதன்பின் அந்த சிலையின் தொண்டைப் பகுதி நீல நிறத்தில் மாறியது. அதன் பின் இறுதியாக அந்த சிலையினுள் சிவன் தாண்டவம் ஆடியதுபோல் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.  

 

isha


காடுகளின் வழிகாட்டி எனப்படும் யானைகளின் பாதையை மறித்து, ஆக்கிரமித்து ஈஷா யோக மையம் கட்டப்பட்டு இருக்கிறது என தொடர்ந்து புகார்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பக்தி, பாடல், ஆட்டம் என ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டி கொண்டாட்டங்கள் நடக்கின்றது. ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவில் வன உயிரினங்களால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பில்லை உள்பட பல கண்டிப்பான நிபந்தனைகள் கொண்ட கடிதத்தை ஈஷா யோக மையத்திற்கு நேற்று வனத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விழாவில் இருக்கும்போது வனத்துறையின் கடிதத்தைப் பற்றி யாருக்குக் கவலை?

 

 

 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

யோகா மாஸ்டர் அடித்து கொலை; விசாரணையில் பகீர்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

கராத்தே மாஸ்டர் காணாமல் போன சம்பவத்தில், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டது  சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியிலுள்ள கானத்தூர் ரெட்டி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே மாஸ்டராகவும், யோகா மாஸ்டராகவும் பணியாற்றி வந்தார். இவரிடம் பல்வேறு குழந்தைகள் கராத்தே மற்றும் யோகா பயிற்சிகள் எடுத்து வந்த நிலையில் கராத்தே மாஸ்டர் லோகநாதனை கடந்த 13ஆம் தேதியிலிருந்து காணவில்லை என அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்ததோடு காணாமல்போன லோகநாதன் தேடி வந்தனர். லோகநாதன் வைத்திருந்த செல்போனில் அவருடன் இறுதியாக பேசியது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் ஓஎம்ஆர் சாலையில் உள்ள நாவலூர் காரனை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் -கஸ்தூரி தம்பதியிடம் செல்போனில் பேசியது தெரியவந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு பேரையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்த விசாரித்தபோது யோகா மாஸ்டர் லோகநாதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட பகீர் தகவல் வெளிவந்தது. செம்மஞ்சேரி பூங்காவில் வைத்து லோகநாதன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கராத்தே, யோகா பயிற்சிகளை  கொடுத்து வந்த நிலையில் சுரேஷ்-கஸ்தூரி தம்பதியின் 11 வயது மகன் லோகநாதனிடம் பயிற்சிக்காக சேர்க்கப்பட்டு பயிற்சி எடுத்து வந்தான். அதே நேரம் கஸ்தூரியும் அவரிடம் யோகா பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

Transgressive yoga master beaten to ; Body recovery in a ruined well

இந்நிலையில் கஸ்தூரியிடம் லோகநாதன் பாலியல் ரீதியாக தொல்லையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் லோகநாதனின் பயிற்சி வகுப்புக்கு செல்வதை கஸ்தூரி தவிர்த்து வந்துள்ளார். ஆனால் இருப்பினும் மொபைல் மூலம் கஸ்தூரியை தொடர்பு கொண்ட லோகநாதன் யோகா வகுப்புக்கு வரும்படி தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி இதுகுறித்து கணவரிடம் தெரிவிக்க இருவரும் சேர்ந்து கராத்தே மாஸ்டர் லோகநாதன் கொலை செய்ய திட்டமிட்டனர்.

அவரை மொபைல் மூலம் தொடர்புகொண்டு காரனை பகுதிக்கு வரவழைத்து அடித்து கொலை செய்ததோடு அங்குள்ள பாழடைந்த கிணற்றில் உடலை வீசிவிட்டுச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் இருந்த லோகநாதனின் உடலை கயிறு மூலம் கட்டி வெளியே கொண்டு வந்தனர். யோகா மாஸ்டர் அடித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.