Skip to main content

'பங்கு' குமார் முதல் பவாரியா கும்பல் வரை...விடைபெற்றார் மீசைகார நண்பர்..!

Published on 31/07/2019 | Edited on 01/08/2019


'என்கவுண்டர் மனிதன்' என்ற புகழுக்கு சொந்தகாரரான ஐ.ஜி ஜாங்கிட் இன்றுடன் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான ஜாங்கிட், ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 1985ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி ஆக தன்னுடைய காவல் பணியை தொடங்கினார். நேர்மையான அதிகாரி என்ற பெயரை உடைய ஜாங்கிட் அதனை கடைசி வரை காப்பாற்றினார் என்றுதான் கூற வேண்டும்.

தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் 90களில் அதிகளவில் ஜாதிக்கலவரங்கள் வெடித்தன. ஓய்வு பெற்ற நீதிபதி கோமதிநாயகம் தலைமையிலான கமிஷன், துாத்துக்குடி எஸ்.பி ஆக ஜாங்கிட்டை பணியமர்த்த வேண்டும் என பரிந்துரை செய்தது. இதையடுத்து, அங்கு காவல்துறை கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்ட அவர், அதிரடி நடவடிக்கையின் மூலம் ஜாதிக்கலவரத்தை ஒடுக்கினார். இவர் மதுரை, நெல்லை, நீலகிரி மாவட்ட போலீஸ் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.

2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த வட மாநிலத்தை சேர்ந்த பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்தார். சென்னை கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோது, ரவுடிகள், பங்க் குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுண்டர் செய்தார். இந்திய கலை மற்றும் கலாசாரம், இந்திய பொருளாதாரம் என, 10 புத்தகங்களை எழுதி உள்ளார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் பயிற்சி மையங்கள் துவங்கி, ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளிகக உள்ளதாக அவர் தற்போது தெரிவித்துள்ளார். பவாரியா கொள்ளை கும்பலை மையமாக வைத்து இளம் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டது.

இந்த படத்தின் ஹீரோ கார்த்தி ஆக இருந்தாலும், இந்த கதையின் ரியல் ஹீரோ ஜாங்கிட் தான். இநி்நிலையில், அவர் இன்றுடன் பணிஓய்வு பெறுகிறார். இந்த 34 வருட காவல்துறை வாழ்க்கைக்கு அவர் அளித்த முக்கியத்துவம் மிக அதிகம். குறிப்பாக தன் மகனை கல்லூரியில் சேர்பதற்கு கூட பணி சுழ்நிலைகள் இடம் கொடுக்காத காரணத்தால் ஒரு போலிகாரரை அனுப்பி தன் மகனை கல்லூரியில் சேர்த்தார். அதுவே காவல்துறை பணியை அவர் எந்த அளவிற்கு நேசித்தார் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் ஆகும். அவர் காவல்துறைக்கு ஆற்றிய பணியை பாராட்டி 2 முறை குடியரசுத்தலைவர் பதக்கமும், ஒரு முறை பிரதமர் பதக்கமும், மெச்சத் தகுந்த பணிக்காக 2 முறை தமிழக முதல்வரின் பதக்கத்தையும் அவர் பெற்றுள்ளார். 'மீசைக்கார நண்பா உனக்கு நேர்மை அதிகம் டா' என்ற பாடல் வரிகள் தான், அவரின் காவல்துறை வாழ்க்கையை  விவரிக்கும் சரியாக சொற்றொடராக  இருக்கும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.