Skip to main content

மூன்று பேரை காதலிக்கிறாரா கவின்? - ரகசியத்தை உடைத்த பாத்திமா பாபு!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு முதல் போட்டியாளராக சென்றவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு. அதே போன்று அந்த நிகழ்ச்சியில் இருந்து முதலில் வெளியேற்றப்பட்ட நபரும் அவர்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பல விடைதெரியாத கேள்விக்கு அவரிடம் விடை கிடைக்கிறதா என்று பார்ப்போம்.

 

fathima babu



பிக் பாஸ் நிகழச்சியில் உங்களை தினமும் தொலைக்காட்சியில் பார்த்து தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க அம்மா மாதிரி மாறிபோய்விட்டீர்கள். ஆனால், உங்களிடம் எங்களுக்கு கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கிறது. உங்களை நாமினேட் செய்த ஆட்களில் மோகன் வைத்தியா முக்கியமானவர். ஆனா, நீங்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியே போனபோது அதிகம் கண்ணீர்விட்டவர் அவர்தான். எப்படி அந்த முரண், புரியவில்லையே?

ஒருவர் தொடர்ந்து கோபமாகவே இருக்க வேண்டும் என்று, எந்த அவசியமும் இல்லையே. நாங்க இருவரும் பகையாளிகள் இல்லை. ஜெர்மன் நாட்டில் இரண்டு நாடுகளுக்கு இடையே இருந்த சுவரையே உடைத்துள்ளார்கள். ஆகையால், அந்த நேரத்தில் என்மேல் அவர் கோபமா இருந்திருப்பார், வெளியே வரும் போது வருத்தப்பட்டுள்ளார், அவ்வளவுதான். இது வாழ்க்கையில் எல்லா மனதர்களுக்குள்ளும் சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுதான்.

நீங்கள் வெளியே வந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறீர்களா? 

இதுவரை மூன்று எபிஸோடுகளை பார்த்துள்ளேன். இப்பதானே வந்துள்ளேன், இனிதான் தொடர்ந்து எல்லா நாட்களையும் பார்க்க வேண்டும். 


நீங்க மூன்று நாட்கள் பார்த்து இருக்கீங்க, உள்ளே நடப்பதற்கும் டிவி-யில் வருவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். 24 மணி நேரமும் நீங்கள் உள்ளே இருப்பீங்க. ஆனால், நிகழ்ச்சியை ஒரு மணி நேரம் மட்டுமே காட்டுவாங்க, இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரே நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நம்மால் இருக்க முடியும், எல்லா இடங்களிலும் யார் என்ன பேசுகிறார்கள் என்று நமக்கு தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியை கிரிக்கெட் போல, டிவி-யில் பார்க்கும்போது தான் நல்லா இருக்கும். எல்லாருடைய பக்கத்தையும் நம்மால் பார்க்க முடியும். எதுவும் நமக்கு தெரியாமல் போகாது. பிக் பாஸ் பார்க்க டிவி தான் பெஸ்ட் ஆப்ஷன்.

பிக் பாஸ் 3 ஆரம்பித்த முதல் நாளிலேயே உங்கல் குரல் ஒரு எதிர் குரலா இருந்தது. மீட்டர் பொருத்தியதை அனைவரும் கைத்தட்டி வரவேற்றாலும், நீங்கள் மட்டும் தான் அதை அவல நிலை என்று கூறினீர்கள். படிப்படியா அந்த குரல் குறைந்ததாக தெரிகிறதே?

என்னை பற்றி ஏதாவது சொல்லியிருந்தால் நான் பேசலாம். அப்படி யாரும் எதுவும் சொல்லவில்லை. எல்லாரும் என்னிடம் ஒரு மரியாதையை கடைப்பிடித்தார்கள். அதுவும் இல்லாமல், அடுத்தவர்களை யாராவது மட்டம்தட்டி பேசினால் அவர்களுடைய பேச்சுக்களை நான் கேட்பதில்லை. அதனால் எனக்கு பிரச்சனைகள் அதிகம் வருவதில்லை. கேட்க காது இருந்தால் தான், அடுத்தவர்களின் வாய் பேசும். அதனால் தான் தேவையில்லாவர்களின் பேச்சுக்களை நான் கேட்பதில்லை.

முதலில் பிக் பாஸ் வீட்டுக்கு போனதும் நீங்கதான், வீட்டில் இருந்து வெளியே வந்ததும் நீங்க தான், அந்த மனநிலை எப்படி இருக்கு?

பிக் பாஸ் வீட்டுக்கு போகும் போது குடும்பத்தை எல்லாம் விட்டுட்டு போனதால ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒவ்வொரு கேமரா முன்னாடியும் நின்று வீட்டில் உள்ளவர்களிடம் மன்னிப்பு கேட்டேன். அது எல்லாம் டெலிகாஸ்ட் ஆகலை. வீட்டை விட்டு வெளியே வரும் போது என் குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் மனநிறைவா அந்த அரங்கத்தில் இருந்து என்ன வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆக மொத்தம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் போது கஷ்டமா இருந்தது, பிக் பாஸில் இருந்து வரும் போது சந்தோஷமா இருந்தது.

கவின் மூன்று பேரை லவ் பண்றதா ஒரு பேச்சு அதிகம் பேசப்படுகிறது. அது உண்மையா, நீங்க பிக் பாஸ் வீட்டில் இருந்ததால் நேரில் பார்த்து இருப்பீர்களே?

அவன் யாரையும் காதலிக்கவில்லை, மூன்று பேரை லவ் பண்ணினா மூன்று பேருமே அவனை செருப்பால் அடிப்பாங்க. எல்லோரிடமும் அவன் நல்லா பேசிகிட்டுதான் இருந்தான். கடைசியா சாக்ஷிகிட்ட ஒதுங்கிட்டான். எல்லா விஷயத்தையும்தான் பிக் பாஸ் அவனிடம் கேட்டுவிட்டாரே.

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிப்பதற்காக தனியா ஒரு ரூம் இருக்கு, பல பிரச்சனை அங்குதான் ஆரம்பித்துள்ளது, சில பிரச்சனை அங்கேயே முடிந்து விடுகிறது, யாரெல்லாம் அங்கு செல்கிறார்கள்? 

60 கேமரா இருக்கிற பிக் பாஸ் வீட்டில் அங்கே யார் போகிறார்கள் என்று கண்டுப்பிடிக்க முடியாதா? பிக் பாஸ் சொல்லாத போது அதைபற்றி நான் சொல்லக் கூடாது.

வனிதா அவர்கள் யாரையும் பேச விடவில்லை, யார் சொல்வதையும் கேட்கவும் மாட்டேங்கிறார், அவருக்கு போட்டியா இப்போது இருப்பவர்களில் யாராவது வருவார்களா?

ஒயில்டு கார்டு ரவுண்டில் நிச்சயம் யாராவது வருவார்கள். சேரன் வனிதாவை எதிர்த்து கேட்கலாம், ஆனால் அவர் அமைதியா இருக்கார். ஏன் இப்படி அவர் இருக்கார் என்று இதுவரையில் தெரியவில்லை. சூட்டிங் ஸ்பாட்டில் அவர் இப்படி இருக்கமாட்டாரே. ஆனால், பிக் பாஸ்ஸில் இப்படி இருக்க வேண்டிய அவசியம் என்ன? அவர் வனிதைவை எதிர்த்து குரல் கொடுக்கலாம்.