Skip to main content

எங்க கோவணத்தையும் உருவப் பார்க்கிறார் மோடி: இளைஞர்களின் ஆண்மைக்கும் ஆபத்து: அய்யாக்கண்ணு பேட்டி 

Published on 02/03/2018 | Edited on 03/03/2018


 

ayyakkannu601.jpg


நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்யக் கோரியும், மார்ச் 1 முதல் 100 நாட்கள் குமரி முதல் சென்னை கோட்டை வரை விவசாயிகள் விழிப்புணர்வு நடைப்பயணத்தை நடத்துகிறார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு.
 

குமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் நடைப்பயணத்தை தொடங்கிய அய்யாக்கண்ணு நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில்,
 

நம் நாட்டின் பலமும், பாதுகாப்பும் ராணுவத்தால் மட்டும் அல்ல, உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதிலும் தான் உள்ளது. விவசாயிகளின் உணவு பொருட்களை அரசே நியாயமான விலைக்கு வாங்கி அவற்றை மக்களுக்கு இனாமாக கூட கொடுக்கலாம். லாபகரமான, நியாயமான விலை கொடுக்காமல் விவசாயிகளை ஏமாற்றி மொட்டை அடித்து மோசடி செய்த தொகை ரூபாய் 400 லட்சம் கோடிகள். விவசாயிகளை விவசாயததை விட்டு வெளியேற்ற செய்யும் கொடுமையை மத்திய அரசு செய்கிறது.
 

கார்ப்பரேட் கம்பெனிகள் கல்உப்பு வேண்டாம் என்று அயோடின் உப்பில் அலுமினியத்தூள்களை சேர்த்து விற்கிறார்கள். இதனால் 10 வயது உள்ளோருக்கு கூட சுகர், இரத்த அழுத்த நோய் தாக்குவதால், ஆண்டுக்கு 10 லட்சம் கோடிக்கு மாத்திரை, மருந்துகளை கார்ப்பரேட் கம்பெனிகள் விற்று லாபம் அடைகிறது.

 

ayyakkannu

நாட்டு பசும்பால், நாட்டு கோழி சாப்பிட்டு 16 வயதில் பருவம் அடைந்த பெண்கள், ஆண்மையுடன் இருந்த ஆண்கள், வெள்ளை பன்றியின் அணுவையும் நாட்டு பசுவின் அணுவையும இணைத்து ஜெர்சி மாட்டு பால், ஊசியின் மூலமாக அணுக்கள் ஏற்றப்பட்ட பிராய்லர் கோழியை சாப்பிட்டு 8 முதல் 10 வயதில் பெண்கள் பருவம் அடைகிறார்கள். 100க்கு 50 இளைஞர்கள் ஆண்மையை இழப்பதற்கும், பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழக்க வாய்ப்பு உள்ளது. பிறகு ரூபாய் 10 லட்சம், 20 லட்சம் கொடுத்து டெஸ்ட் டியூப் குழந்தை பெறும் நிலையும், அதனால் சமுதாயம் அழிய வாய்ப்பு உள்ளது.
 

இந்த கொடுமை நிகழாமல் இருக்கத்தான் நடுரோட்டில் படுத்தோம், கடலிலே இறங்கினோம். மலையில் ஏறி குதிக்க முயன்றோம். பலமுறை சிறை சென்றோம். விவசாய விளை பொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. தனிநபர் பயிர் காப்பீடு, 60 வயது கடந்தவர்களுக்கு ஓய்வூதியம், நதிகளை நீர் வழிச்சாலை மூலமாக இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியாறு, காவிரி வைகை குண்டாறு, காவிரி அய்யாறு, பாலாறு இணைப்பும் நதிகளின் குறுக்கே தடுப்பணைகள், காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டியும் போராட்டம் நடத்தினோம்.

 

ayyakkannu


ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்ய தேவை ஒரு லட்சம் ரூபாய். வாழை அழிந்தால் அரசு கொடுக்கும் நஷ்ட ஈடு ரூபாய் ஆயிரம் மட்டும். கடன் வாங்கி செலவு செய்த பணம் கூட கிடைக்காமல் பிச்சைக்காரர்கள் வருமானத்தைவிட கேவலமாக விவசாயிகள் வாழ்கிறார்கள். இந்தியாவில் உள்ள 70 பெரிய கம்பெனிகளுக்கு மத்திய அரசு வரிச்சலுகை என்ற பெயரில் தள்ளுபடி செய்தது ரூபாய் 30 லட்சம் கோடிகள்.
 

விஜய் மல்லையா ரூபாய் 10 ஆயிரம் கோடி, நிரவ் மோடி ரூபாய் 11,500 கோடி, கோத்ரேஜ் ரூபாய் 5 ஆயிரம் கோடி, அக்ரோ நிறுவனம் ரூபாய் 2,730 கோடி மற்ற கம்பெனிகள் ரூபாய் ஒரு லட்சம் கோடி ஏமாற்றி ஒடிவிட்டார்கள். விவசாயிகளுக்கு நியாயமான விலை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றிய பணம் ரூபாய் 400 லட்கம் கோடிகள். அந்த பணம்தான் அனைத்து வங்கிகளிலும் உள்ளது. அதை கடனாக விவசாயிகள் கேட்டால், வங்கி மேலாளர் உங்க அப்பன் வீட்டு பணமா கடன் தருவதற்கு என்று கேட்கிறார்.
 

தமிழகத்தில் இருந்து பெட்ரோல், டீசல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுத்தால் வருடம் ரூபாய் 10 லட்சம் கோடி மோடி அரசுக்கு வருமானம் கிடைக்கும். தமிழகத்திற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் விட உத்தரவிட்டும், முல்லை பெரியாற்றில் நீர்மட்டத்தை உயர்த்த ஆணையிட்டும் மத்திய அரசு கேட்காமல் தமிழகத்தை பாலைவனமாக மாற்ற பார்க்கிறது.
 

தமிழக விவசாயிகளுக்கு நியாயமான விலை, தண்ணீர் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டால் தமிழக விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு நிலங்களை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்றுவிட்டு ஓடிவிடுவார்கள். பிறகு பிளாஸ்டிக்கினால் ஆன அரிசி, சர்க்கரை மற்ற உணவு பொருள்களையும் மரபணு மாற்றப்பட்ட உணவு பொருள்களையும் கமிசன் பெற்றுக்கொண்டு இறக்குமதி செய்து கொடுத்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்களை சாப்பிட சொல்லி இவர்களை ஆண்மை இழக்க, மூளை செயலிழக்க செய்துவிட்டு அடிமைகளாக மாற்றாமல் இருக்கத்தான் டெல்லியில் போராடினோம். ஆனால் மத்திய அரசு விவசாயிகளை பார்க்காமல் மதம், ஜி.எஸ்.டி, பணம் பற்றியே பேசுகிறார்கள்.
 

இப்போது குமரியில் இருந்து சென்னை வரை 100 நாள் நடைப்பயணம் செய்து போராட்டம் நடத்துகிறோம். ஏற்கனவே மோடி எங்களுக்கு பட்டையை போட்டுவிட்டார். சட்டையை உருவி விட்டார். அடுத்து எங்களது வேட்டியையும், கோவணத்தையும் உருவுவதற்கு முயற்சி செய்கிறார். பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த போராட்டம் வருங்கால சந்ததிகளை காப்பாற்றுவதற்கான போராட்டம். இவ்வாறு கூறினார்.
 

Next Story

அய்யாக்கண்ணு தலைமையில் சென்ற தமிழக விவசாயிகளை தடுத்து நிறுத்திய டெல்லி காவல்துறை

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

ayyakannu

 

அய்யாகண்ணு தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகளை ரயில் நிலையத்தில் வைத்தே டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

 

நெல் மற்றும் கரும்பிற்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகளுடன் திரளாகச் சென்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திருச்சியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர். இந்தப் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், திரளாக வந்த விவசாயிகளை ரயில் நிலையத்தில் வைத்தே டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவர்கள் ரயில் நிலையத்திலேயே போராட்டத்தை தொடங்கியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

 

 

Next Story

“யாரு வேணாலும் எதுனாலும் பேசலாம்... எல்லாமே அரசியல்தான்” - அய்யாக்கண்ணு பேட்டி!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

"Anyone can talk about anything ... everything is political" -Ayyakkannu interview

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.11.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஆட்சிக்கு வந்ததுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் என தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் 2014ஆம் ஆண்டுமுதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். நாட்டின் விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாக உள்ளனர். விவசாயிகளின் வேதனைகளை அறிந்தவன் என்பதால்தான் அவர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திவருகிறேன்.

 

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சரியான விதைகள், உரம், பயிர் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்களை ஆதரித்த விவசாய சங்கங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். வேளாண் சட்டங்களின் நலனை ஒருதரப்பு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம். டெல்லி எல்லையில் கூடியுள்ள விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட வேண்டும்.

 

"Anyone can talk about anything ... everything is political" -Ayyakkannu interview

 

வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதேபோல் ‘வரப்போகின்ற பஞ்சாப், உ.பி. சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு, அந்த அச்சத்தால் எடுக்கப்பட்ட முடிவு இது’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். 

 

வேளாண் சட்டம் வாபஸ் குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு நக்கீரன் இணையத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, “உண்மையாகவே சந்தோஷம்தான். பலபேர் பல சொல்லலாம், வாபஸ் வாங்கனது எலெக்‌சனுக்காகன்னு சொல்லலாம். ஆனால் எங்களுக்கு இது மனவலிதான். காரணம், வேளாண் சட்டங்கள் இருந்துச்சுன்னா இளைஞர்கள் எல்லாம் ஆண்மை இழந்துவிடுவார்கள். பெண்கள் எல்லாம் கருத்தறிக்க மாட்டார்கள். நான் இப்ப ஐம்பது நாளாக வீட்டுக் காவலில் இருக்கன்.

 

"Anyone can talk about anything ... everything is political" -Ayyakkannu interview

 

வீட்ட சுற்றி போலீஸ் போட்டுருக்காங்க. முதல்ல அது இல்லாம போயிரும். இதுனால விவசாயிகளுக்கு ஃபிரீடம் கிடைக்குது. முப்பத்து ஒன்பது நாள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறோம். இளைஞர் சமுதாயம் அழியாமல் காக்கப்படும் வேளாண் சட்டம் வாபஸ் வாங்குனதுனால. வருங்கால சந்ததிகள் அழிஞ்சிறக் கூடாது,. அதற்காக நாங்கள் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலுக்காக அறிவிச்சிருக்காங்கன்னு யாரு வேணாலும் எதுனாலும் பேசலாம் அது பற்றிய கவலை எங்களுக்கு இல்லை, எல்லாமே அரசியல்தான். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் இது சேஃப்கார்ட். எங்களுக்கு இந்த வேளாண் சட்டங்கள் இருந்தா எம்எஸ்பி கிடைக்காது.

 

தற்போது சட்டத்தை வாபஸ் வாங்கியதால் அது எங்களுக்கு கிடைக்கும். மேலும் மோடியிடம், கோதவரி மற்றும் காவரி ஆகியவற்றை இணைக்க பணம் ஒதுக்கச் சொல்ல வேண்டும் எனும் கோரிக்கை எனக்குள்ளது. இந்த வாபஸை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பார்ப்பார்கள். எங்களுக்கு இது வருங்கால சந்ததிகளைக் காப்பாற்ற உதவியுள்ளது. நான் இதற்காக 39 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தேன். 50 நாளா வீட்டுக் காவலில் இருக்கன். இன்னைக்கு 3 சட்டங்களும் நூற்றுக்கு நூறு சதவீதம் திரும்பப் பெறப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

 

இந்தக் காலகட்டத்தில் இது திரும்பப் பெறப்பட்டதே பெரிய விஷயம்தான். நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்துபோனார்கள். சிலரை கார் ஏற்றிக் கொன்றார்கள். மேலும், விவசாயிகளைக் கொல்லாமல் விவசாயிகளையும் காப்பாற்றியிருப்பது போதும். இந்த வெற்றிக்குக் காரணமே ஊடகங்கள்தான். அதே மாதிரி யாருமே எங்களைக் கண்டுக்காமல் இருந்தபோது நக்கீரன் மட்டும்தான் எங்கள் போராட்டங்களைப் பற்றி செய்திகளை வெளியிட்டது” என தெரிவித்தார்.