Skip to main content

குளத்தை தூர்வாருவது நாங்கள் பணத்தை ஆட்டைய போடுவது அதிகாரிகளா? கோபத்தில் மக்கள்

Published on 02/07/2018 | Edited on 03/07/2018

திருச்சி புதுக்கோட்டை பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள பெரிய குளத்தில் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் இணைந்து கடந்த ஆண்டு ஒரு மாதம் வரை தூர்வாரப்பட்ட குளத்தில் ஊராட்சி சார்பில் ரூ.19 லட்சத்தில் தூர்வாரப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதற்கு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 
 

திருச்சி அடுத்த திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூரில் 376 ஏக்கரில் பெரியகுளம் உள்ளது. இதன் மூலம் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாசனம் நடைபெறுகிறது. குண்டூரில் உள்ள பெரியகுளம் ஆழம் குறைந்து மேடுகள் நிரம்பியுள்ளன. பெரிய குளத்தை உரிய காலத்தில் தூர்வாருதல், மேடுகளை அகற்றிக் குளத்தை ஆழப்படுத்துதல், நான்கு பக்கங்களிலும் கரைகளை வலிமைப்படுத்துதல் மூலம் நம் பகுதிக்கான நீர் ஆதாரங்களைச் சேமிக்கமுடியும். பெரிய குளத்தைச் சீர்படுத்தினால் நம் பகுதி வேளாண்மையில் முப்போகம் விளைச்சல் பெறலாம். நிலத்தடி நீர் வளம் பெருகும். கால்நடைகளின் வளமும் வளர்ச்சியும் பெருகும். என இந்த குளத்தை தூர்வாருவதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளாதால் திருச்சி குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு பங்களிப்புடன் சுமார் ரூ.8 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் குளம் தூர்வாரும் பணி 1 மாதமாக நடந்தது. அப்போது மழை தொடங்கியதால் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் தூர்வாரும் பணி நடைபெறவில்லை. அதன் பிறகு தற்போது வரை எந்த முன்னேற்றமும் தூர்வாறும் பணியும் நடைபெறவில்லை.

 

இந்நிலையில் குளத்தின் கரையில் சில நாட்களுக்கு முன் குண்டூர் ஊராட்சி சார்பில் ஒரு விளம்பர கல் வைக்கப்பட்டுள்ளது. அதில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.19 லட்சம் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் இக்குளம் தூர் வாரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்பார்த்த விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 
 

இது குறித்து விவசாய சங்க தலைவர் திரிசங்கு பேசுகையில், குண்டூர் பெரியகுளத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ‘காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு சார்பில் கொட்டை செடி அகற்றப்பட்டு குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. அதன்பிறகு நேற்று வரை குளத்தில் இருந்து ஒருபிடி மண்கூட அள்ளப்படவில்லை.

ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி ரூ. 19 லட்சம் செலவில் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடைந்த நிலையில் மீதி ரூ. 5 ஆயிரம் இருப்பதாக கூறுவது அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது. தொடர்புடைய அதிகாரிகள் இது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என்றார்.

 

பொதுமக்கள் தன்னார்வலர்கள் இணைந்து தூர்வாரிய வைத்து கணக்கு காண்பித்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சேர்ந்து பணத்தை ஆட்டைய போடுகிறார்கள் என்று மக்கள் கொதிப்படைந்தனர். 
 

குண்டூர் பெரியகுளம் தூர்வாரப்பட்டு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது குறித்து ஊராட்சி செயலாளர் விக்னேஷிடம் கேட்டபோது, குண்டூர் குளத்தில் கடந்த வருடம் நடைபெற்ற பணிக்கு முடிந்த வேலைக்கு கல்வெட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்றார். 
 

கடந்த ஜூன் மாதம் திருச்சி - குண்டூர் பெரியகுளம் ’காப்புக் குழு’ மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் தண்ணீர் என்கிற அமைப்பு தூர்வாரும் பணியை துவக்கி வைக்க திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி துவக்கி வைத்தார். அப்போது குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தண்ணீர் அமைப்பின் தலைவர் திரு.சேகரன் தலைமையில் செயலாளர் திரு.கே.சி.நீலமேகம் மற்றும் இணைச்செயலர் கி.சதீஷ் குமார் உடன் குண்டூர் பெரிய குளம் காப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் தூயவளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் மற்றும் பெல் மகேந்திரன், திருமதி ரம்யாசதீஷ்குமார் சார்பில் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அப்போது கலெக்டர் ராஜாமணி ஆக்கிரமிப்புகள் அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலையோர பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இன்றைக்கு வரை இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையிலும் ஈடுபாடாத நிலையில் ஊராட்சி அலுவலரின் இந்த நடவடிக்கையினால் பொதுமக்கள் முதல் தன்னார்வலர்கள் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.