Skip to main content

சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் மனிதாபிமான நடவடிக்கை..!

Published on 06/04/2019 | Edited on 06/04/2019

சூடான் நாட்டைச் சேர்ந்த முகமது முஸ்தபா, இவர் தன் மேல் படிப்பிற்காக தனது நாட்டிலிருந்து தமிழகத்திலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் மேற்படிப்பை தொடர ஒரு ஆண்டு காலம் விசாவில் கடந்த 2016-ல் இந்தியாவுக்குள் வந்தார். தனது படிப்பில் கவனம் செலுத்தாமல் சுற்றித் திரிந்ததால் சில பாடங்களில் தோல்வி அடைந்து அரியர்ஸ் வைத்துள்ளார். இதை சரிசெய்து தனது படிப்பை முடித்துவிட்டு சொந்த நாட்டுக்கு செல்ல மேலும் 4 மாதம் கடந்து விட்டது. அதேசமயம் அவரது விசா காலம் முடிந்து அதிக நாட்கள் தங்கியதால் அபராத தொகை கட்டிவிட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார். மேலும் படிப்பு செலவிற்காக, அவர் திரும்பிச் செல்ல வைத்திருந்த விமான டிக்கெட் செலவுக்கான தொகையும் செலவு செய்து விட்டதால் வேறு வழி இல்லாமல் சுற்றித் திரிந்துள்ளார்.

 

mohamad mustafa

 

பின்னர் டிக்கெட் எடுக்காமல் ரயில் மூலம் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை வந்த முகமது முஸ்தபா பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். சரியான வேலை கிடைக்காததாலும் இவர் இஸ்லாமியர் என்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் பிச்சை எடுத்து அதில் கிடைக்கும் பணத்தில் உணவருந்தி வந்துள்ளார். சொந்த நாட்டுக்கு செல்ல பணம் இல்லாத காரணத்தால் வழிப்பறி செய்ய முடிவு செய்து, சில சிறு சிறு தவறுகளை செய்து வந்துள்ளார். 


இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மெரினா கடற்கரையில் சில மாணவர்களிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது பொது மக்கள் மடக்கிப்பிடித்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஜெயராஜ் நீதிமன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர். நான்கு மாதம் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த முகமது முஸ்தபா மீண்டும் செய்வதறியாத அப்பகுதியில் சுற்றி வந்துள்ளார். இதனை கண்காணித்த உளவுத்துறை சென்னை மாநகர கமிஷனருக்கு தகவல் அனுப்ப சம்பந்தப்பட்ட நபரை பிடித்து வர மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தினேஷ்குமார் உள்பட 4 பேர் கொண்ட தனிப்படை முகமது முஸ்தபாவை கண்டுபிடித்தனர். இந்த நிலையில் அவர் ஏன் தன் சொந்த நாட்டிற்கு போகவில்லை என்று விசாரணை நடத்தினர் அதில் அவர் சொந்த நாடான சூடானுக்கு செல்ல சில சட்ட சிக்கல் இருந்தது, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நடவடிக்கையால் மெரினா காவல் ஆய்வாளர் ஜெயராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோரிடம் முகமது முஸ்தபா சொந்த நாடான சூடானில் திரும்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். 
 

அதன்பேரில் டெல்லியில் உள்ள சூடான் தூதரகத்தில் நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட் பெற்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள இந்திய குடிமையியல் துறையிடம் முறையான அனுமதி பெற்று, பின்னர் அவர் சொந்த நாடு திரும்ப விமான டிக்கெட் உள்பட 60 ஆயிரம் ரூபாய் ஸ்பான்சர் பெற்று சனிக்கிழமை காலை அவன் தாய் நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வை என் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் மற்றும் ஆய்வாளர் ஜெயராஜ் உதவி ஆய்வாளர் தினேஷ் குமார் ஆகியோருக்கு நான் வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன் என்றும் மூன்று வருடம் கழித்து நான் சொந்த ஊர் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மேலும் நான் சொந்த ஊர் செல்வேனா தாய்நாடு அடைவேனா அல்லது இந்தியாவிலேயே இறந்துபோய் இருப்பேனா என்ற குழப்பத்தில் இருந்தேன். என்னை மீட்டு நான் செய்த தவறை மன்னித்து என்னை சென்னை போலீசார் என் தாய் நாட்டுக்கு செல்லவும் எனக்கு உதவி செய்ததை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன் என்று நெகிழ்ச்சியாக தெரிவித்து மகிழ்ச்சியுடன் தாய்நாட்டுக்கு விமானத்தில் பறந்தார் முகமது முஸ்தபா. சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் போலீசாரின் இந்த நடவடிக்கைகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

 

 

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.