Skip to main content

ரஷ்யா சொதப்பல்; இந்தியா கலக்கல்!  

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

Chandrayan victory and Russia's luna

 

நிலவினை ஆய்வு செய்வதற்காக ஜூலை 14ம் தேதி இஸ்ரோ செலுத்திய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவும் நிலவில் தனது தடத்தைப் பதித்துள்ளது. இதற்கு முன் நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்ய ரஷ்யா இந்தியாவிற்குப் போட்டியாக ஆகஸ்ட்  11ல் அனுப்பிய லூனா-25 விண்கலம். ஆகஸ்ட் 20 அன்று தொழில்நுட்ப கோளாறுகளால் ஏற்பட்ட சிக்கலில் விழுந்து நொறுங்கிய தகவலும் வெளியானது.

 

நிலவின் தென் துருவத்தில் நீர் வளங்கள் மற்றும் நிரந்தர நிழல் பள்ளங்கள் நிறைந்த பகுதியை ஆராய்ந்து ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட சந்திரயான்-3ஐ புதன்கிழமை மாலை 6 மணியளவில் நிலவில் தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டது. அதற்கான பணிகளைக் காலை முதலே தொடங்கியது இஸ்ரோ. ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்க்க, சரியாக மாலை 6.02 மணிக்கு நிலவின் தென்திசையில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த வெற்றியை இஸ்ரோ தலைவர் சோம்நாத், இந்தியா தற்போது நிலவின் மீது இருப்பதாக அவர் பெருமையாக குறிப்பிட்டார். சந்திரயான்-3க்கு முன்பு இந்தியா இரண்டு முறை தனது முயற்சியை மேற்கொண்டுள்ளது.

 

சந்திரயான் 1


அக்டோபர் 2008ல் சந்திரயான்-1 இந்தியா சார்பில் ஏவப்பட்ட முதல் நிலவு விண்கலமாகும். விண்கலம் மொத்தம் 11 ஆய்வு உபகரணங்களைத் தாங்கிச் சென்றது. அவற்றில் 5 கருவி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். மற்ற 6 கருவிகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டதாகும். நவம்பர் 2008ல் சுற்றுப்பாதையில் செருகப்பட்ட விண்கலம் ஆகஸ்ட் 2009 வரை செயல்பட்டது. பின்பு இஸ்ரோ மையம் ஆர்பிட்டருடனான தொடர்பை இழந்தது.  

 

இருந்தும் விண்கலம் அதே மாதத்தில் சுற்றுப் பாதையை அடைந்து, மூன் இம்பாக்ட் ப்ரோப் (எம்ஐபி)ல் இருந்து பிரிந்து நிலவின் தென் துருவத்தில் இறங்கியது. இது அடியில் நீர் இருப்பதைக் கண்டறிய வழிவகுத்து பெருமையைத் தேடித்தந்தது. இதன் பிறகு 29 ஆகஸ்ட் 2009 அன்று சந்திரயானில் வரக்கூடிய சிக்னல் நின்று போனது. 95 சதவீத ஆராய்ச்சிகள் முடிந்த நிலையில், சந்திரயான் 1 திட்டம் வெற்றிகரமானதாக அறிவிக்கப்பட்டது.

 

சந்திரயான் 2


ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் ஜூலை 22, 2019 அன்று சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் மேற்பரப்பின் சுற்றுப்பாதையில், நிலவின் நிலப்பரப்பு, கனிமவியல், தனிம மிகுதி, சந்திர எக்ஸோஸ்பியர் மற்றும் ஹைட்ராக்சில் மற்றும் நீர் பனியின் கையொப்பங்களை ஆராய்வதற்காகச் செலுத்தப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 20, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் வெற்றிகரமாக நிலைகொண்டது. தொடர்ந்து செப்டம்பர் 2ல், நிலவின் 100 கி.மீ., சுற்று வட்டப் பாதையில்  'விக்ரம் லேண்டர்' இருந்தபோது, சாதனம் பிரிந்தது. பின்பு நிலவின் மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ., தொலைவை லேண்டர் அடைந்தபொழுது இஸ்ரோவுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர், சந்திரயான் - 2 திட்டம் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.

 

சந்திரயான் 3


இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராய கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3,  நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் நேற்று மாலை 6.02 மணியளவில் இறங்கி சாதனை படைத்துள்ளது  சந்திரயான் - 3. நிலவின் மேற்பரப்பை ஆராய்ந்து அறிவியல் தரவுகளைச் சேகரிப்பதன் நோக்கமாக ஏவப்பட்டது.

 

Chandrayan victory and Russia's luna

 

இதற்கு முன்னதாக இந்தியாவுக்கு சவாலாக ரஷ்யா நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய முடிவெடுத்து லூனா 25 என்ற விண்கலத்தைச் செலுத்தியது. இது நேரடியாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என ரஷ்யா தெரிவித்தது. ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட லூனா விண்கலம், சந்திரயான் 3 விண்கலத்துக்கு முன்பாகவே ஆகஸ்ட் 21ல் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என அறிவித்தனர். இதன் அடிப்படையில் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடாக ரஷ்யா பெருமையை இந்தியாவிடம் பறித்திருக்கலாம். 

 

விண்ணில் செலுத்தப்பட்ட லூனா 25 விண்கலம் கடந்த 17ம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து அதன்பிறகு நிலவின் சுற்றுவட்டப் பாதையின் அளவைக் குறைக்கும் பணிகளை ரஷ்யா தொடங்கியது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் லூனா 25 விண்கலம் இறுதிக்கட்ட சுற்றுவட்டப் பாதையை அடைய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, ரஷ்யாவின் நேரப்படி 14:57 மணிக்கு லூனா -25 விண்கலம், ருஷ்ய ஆய்வு மையத்துடன் தொடர்பை இழந்தது. பின்னர் லூனா- 25 விண்கலத்துடன் தொடர்பை ஏற்படுத்த முயன்ற நிலையில் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கிய தகவலை ரஷ்யா அறிவித்தது.

 

- மருதுபாண்டி 

 

 

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.

 

Next Story

“3ஆம் உலகப்போர் உருவாகும்...” - ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 Russian president warns about World War 3

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.  இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை தொடுத்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நின்றபாடில்லை. அதே வேளையில், உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து போர் ஆயுதங்களை வழங்கி வருவதாக ரஷ்யா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், மூன்றாம் உலகப் போர் உருவாகும் சூழல் வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்படுகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி ஆகியவை களம் கண்டன. ரஷ்ய வரலாற்றில் முதல்முறையாக நடைபெற்ற 3 நாட்கள் வாக்குப்பதிவில், 3வது முறையாக அதிபர் தேர்தலில் புதின் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு பிறகு தொடர்ச்சியாக 3வது முறையாக வெற்றி பெற்ற புதின், 200 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு சாதனையை படைத்துள்ளார். 

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும், புதின் பேசியதாவது, “அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளும், ரஷ்யாவும் நேருக்கு நேர் மோதிக்கொள்வது என்பது முழு அளவிலான மூன்றாம் உலகப் போரை நோக்கி ஒரு படி தொலைவில் இருக்கும் என அர்த்தம். இது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அத்தகைய சூழலை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில், இந்த நவீன உலகில் எல்லாம் சாத்தியமே. உக்ரைனில் ஏற்கனவே, நேட்டோ இராணுவ வீரர்கள் உள்ளனர். அவர்களில் ஆங்கிலம் பேசும் வீரர்களும், பிரஞ்சு பேசும் வீரர்களும் உள்ளனர். அவர்கள் அங்கு அதிக எண்ணிக்கையில் இறந்து கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நாடுகள் தங்கள் வீரர்களை திரும்பப் பெறுவது நலம்” என்று கூறினார். 

முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அங்குள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “இங்கே எல்லாம் அணுசக்தி மோதல் வருவதாக நான் நினைக்கவில்லை. உக்ரைன் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. உக்ரைனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால், அவை யதார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். அதே வேளையில், ராணுவ தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் சிந்தித்தால், நாங்கள் நிச்சயமாக தயாராக இருக்கிறோம். 

அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். மேலும், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை ரஷ்ய எல்லையில் அல்லது உக்ரைனுக்கு அனுப்பினால், ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபடும் என்பதை அமெரிக்கா புரிந்து கொள்ளும். ஒருவேளை, அமெரிக்கா ஆணு ஆயுத சோதனை நடத்தினால், அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.