Skip to main content

சத்குரு ****தான்   ஆனால், அவர்கிட்ட போறவங்க எல்லாம்... -பியுஷ் மனுஷ்

Published on 30/10/2018 | Edited on 30/10/2018


 

இயற்கை வழிபாடுதான் உண்மையான இந்து மதத்தின் வழிபாடு. ஆன்மீகவாதிகளும் இயற்கை வழிபாட்டைதான் கடைபிடித்து நடந்தார்கள். ஆனால் இன்று யார், யார் இயற்கையை அழிக்கிறார்களோ அவர்களெல்லாம் ஆன்மீகவாதிகள் ஆகிவிட்டார்கள். சபரிமலையை பொறுத்துவரை ஐய்யப்பன் காட்டோடு ஒன்றாகிவிட்டார். காட்டை யார் பாதுகாக்கிறார்களோ அவர்களெல்லாம் ஐயப்பனுக்கு வேண்டியவர்கள்தான். நான் உண்மையான ஐயப்பன் பக்தர். இந்த நெய் அபிஷேகம் செய்வது இதெல்லாம் ஒன்றும் இல்லை. 1902 வரைக்குமே அங்கு பழங்குடியினர்தான், அவர்கள் வழிபாடுதான். அதற்குபின்புதான் பார்ப்பனியம் வந்தது. அதற்கு தெளிவான வரலாற்று ஆதாரங்களும் உள்ளது.    
 


இன்றைக்கு நிலைமை இதுதான், தெருவுக்கு, தெரு யாரு கோவில் கட்டிட்டு இருக்காங்க. கட்சி கவுன்சிலர், அதற்கு வீட்டுக்கு, வீடு வரி கட்டிட்டு இருக்காங்க தமிழ்நாட்டுல, 5000, 10,000 கட்டிட்டு இருக்காங்க கும்பாபிஷேகத்திற்கு. அது ரொம்ப பூதாகராமாக ஆகிவிட்டது. சத்குரு ****தான், ஆனால் அவர்கிட்ட போறவங்க எல்லாம் திருடர்கள் கிடையாது. உண்மையான குருகிட்ட போறோம்னு நினைத்துக்கொண்டுதான் போறாங்க. நித்தியானந்தாகிட்ட உண்மையான குருகிட்ட போறோம்னு நினைத்துக்கொண்டுதான் போறாங்க. அவுங்க திருடர்களாக இருக்கிறதுக்கு இவுங்க எப்படி பொறுப்பாவாங்க. கவுன்சிலர் யாருங்க அந்தந்த ஊர்ல கோவில் கட்டுவதற்கு, அரசியல்வாதிங்க கட்டிட்டு இருக்காங்க பாக்கவே ரொம்ப இதா இருக்கு, தாங்கவே முடியலை. மசூதி ஏன் கட்டுறிங்க, சர்ச் ஏன் கட்டுறிங்க, புத்த மடாலயங்கள் ஏன் கட்டுறிங்க அப்படினு எல்லாத்தையும்தான் கேக்கணும். மகாவீரர் கடவுளே இல்லைனு சொன்னவரு, ஆனால் அவருக்கே சிலை வைத்து அவருக்கே கோவில் கட்டுறாங்க. அதுவும் பெரிய, பெரிய கோவிலா கட்டுறாங்க, இந்து கோவில்களைவிட அது பெரியதாக இருக்கு. ரொம்ப கேவலமா இருக்கு. கடவுளுடைய வீட்லதான் நாம வாழுறோம். இந்த பூமி கடவுளுடைய வீடு, அதில்தான் நாம வசிக்கிறோம். கடவுளுக்கு வீடு கட்டிக்கொடுக்க மனிதனுக்கு தகுதி கிடையாது. நான் ஒரு வீடு கட்டுவேன், அதில்வந்து கடவுள் வாழ்வார் என்றால் அதைவிட அகந்தை வேற எதுவும் கிடையாது... 

 

 

முழுஉரையையும் காண வீடியோவை க்ளிக் செய்யவும்...

 

 

 

 

 

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.