Skip to main content

காரில் இருந்து இறங்கி நடந்தே சென்ற கலாம்...

Published on 27/07/2018 | Edited on 27/07/2018

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் நேரம் தவறாமையை வெகு கவனமாக கடைப்பிடித்து வந்தவர் என்பதற்கு எத்தனையோ சம்பவங்களை கண்முன் நிறுத்தலாம். 

 

abdul kalam

 

 

 

1999-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று சென்னை எம்.ஐ.டி.கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு, அந்தக் கல்லூரியின் பழைய மாணவரான  கலாம் கலந்து கொள்ள வந்தார். அப்போது இந்தியப் பாதுகாப்பு துறை அமைச்சக ஆலோசகராக இருந்தார், பாரத ரத்னா அப்துல் கலாம்.

 

 

 

சென்னை வாசிகளுக்குத் தெரியும் குரோம்பேட்டை எம்.ஐ.டி வளாகத்தினுள் நுழைவதற்கு நெடுஞ்சாலையிலிருந்து இரயில்வே தண்டவாளப்பாதையை கடந்தாக வேண்டும் என்பது. அன்றைக்குப் பார்த்து வண்டி வரும் நேரம் வழியில் குறுக்காக இரும்பு கேட் மூடப்பட்டிருந்தது.

தான் வந்த கார் வழியில் மாட்டிக் கொண்டதை உணர்ந்தார், கலாம். ரயில் வந்து செல்லவும் கேட் திறக்கவும்  எப்படியும் அரைமணி நேரமாகலாம். அதற்காக காத்திருப்பது காலதாமதத்தை ஏற்படுத்தும். எனவே நிகழ்ச்சிக்கு சரியான நேரத்தில் மேடையில் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கலாம், சட்டென்று காரிலிருந்து கீழே இறங்கினார்.

 

apj

 

உடன் வந்திருந்த கறுப்புப் படை காவலர்கள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அடைத்து கிடந்த இரும்பு கேட்டின் அடியில் குனிந்து தண்டவாளப் பாதையில் கடந்து கல்லூரிக்குள் நடந்தே போய்விட்டார். டாக்டர் அப்துல் கலாம் இதோ போகிறார் என்று மக்கள் அவரை அடையாளம் தெரிந்து கொண்டு அவர் பின்னால் ஓடினார்களாம்.

 

ஆக, நேரம் தவறாமையை கடைப்பிடிப்பதிலும் கலாம் எப்பொழுதும் முதல் குடிமகன் தான்.

 

Next Story

அப்துல் கலாமின் முன்னாள் ஆலோசகர் தலைமையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா! (படங்கள்)

Published on 03/11/2021 | Edited on 03/11/2021

 

நேற்று (2.11.2021) சென்னை வடபழனியில் உள்ள க்ரீன் பார்க்கில் ஸ்மார்ட் வில்லேஜஸ் என்னும் மாபெரும் புத்தக வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்தப் புத்தக பங்களிப்பாளர்களில் கல்வியாளர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள், பொது சுகாதார நிபுணர்கள், தொழில் முனைவோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் மிக முக்கியமாக தீர்வு செயல்படுத்தப்படுபவர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த நிகழ்ச்சியில் வெ. பொன்ராஜ், நக்கீரன் ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

 

 

Next Story

மாணவர்கள் கொண்டாடிய டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் (படங்கள்)

Published on 16/10/2021 | Edited on 16/10/2021

 

சென்னை, கண்ணகிநகர் அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் கண்ணகி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று (15.01.2021) டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முன்னாள் குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக மாணவர்களுக்குப் பேச்சு, கட்டுரை, ஓவியம் மற்றும்  விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நேற்று நடந்த நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக ஜெ. 11 காவல் நிலைய ஆய்வாளர் ஆல்ஃபின் ராஜ் வருகை தந்து பரிசுகளை வழங்கினார். குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பரிசுகளாக இயற்கை முறையில் விதைகளுடன் தயாரிக்கப்பட்ட எழுதுகோல், நோட்டு மற்றும் ஆத்திச்சூடி போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 

ad