Skip to main content

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் ஸ்டண்ட் சில்வாவின் மாப்பிள்ளையும் மரணம் 

Published on 24/05/2018 | Edited on 26/05/2018
stunt silva

 

 


தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி நடந்த 100வது நாள் போராட்டத்தின் போது போலிசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்  13 பேர் வரை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த பல்வேறு அரசியல் தரப்பினரும், பொதுமக்களும் தமிழக அரசுக்கு எதிராக கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்துக்கு  ரஜினி, கமல், விஷால், சத்யராஜ்  உட்பட பல திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், வீடியோ பதிவாகவும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் போராட்டத்தில் தனது உறவினரும் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் சில்வா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... "எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். மிக்க வேதனையோடு பகிர்கிறேன்" என வேதனையோடு பதிவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார். 

Next Story

”என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு சும்மா ஒன்னும் பெயர் கிடைக்கல” - ஸ்டண்ட் சில்வா பேட்டி 

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

stunt silva

 

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ’சினம்’ படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினரை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் சினம் படம் குறித்தும் அருண் விஜய் குறித்தும் ஃபைட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

“சினம் வழக்கமான போலீஸ் படமாக இருக்காது. படத்தில் முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன. அவையெல்லாமே கதையோடு ஒன்றிப்போகிற அளவுக்கு நேர்த்தியாக இயக்குநர் எழுதியிருந்தார். படத்தின் சண்டைக்காட்சிகளை 100 சதவிகித மெனக்கெடலுடன் உருவாக்கியிருக்கிறோம். 

 

செட்டில் விஜய்குமார் சார் தயாரிப்பாளர்போலவே நடந்துகொள்ளவில்லை. எல்லோருக்கும் முன்பே செட்டிற்கு வந்து என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்வார். செட்டில் என்ன பிரச்சனை வந்தாலும்சரி, அதை எப்படி உடனே சரி செய்யவேண்டும் என்பதை நன்றாக தெரிந்து வைத்திருந்தார். 

 

இந்தப் படத்திற்கான சண்டைக்காட்சியின் போது எல்லா விஷயங்களுமே எனக்கு உற்சாகத்தை கொடுத்தன. அருண் விஜய்க்கு எதிராக நடித்த அனைவருக்குமே மூன்று மாதங்களாக பயிற்சி கொடுத்தேன். அவருடைய எனர்ஜி எந்த அளவிற்கு இருக்கும் என்பது நமக்குத் தெரியும். இப்படி பண்னுங்க, அப்படி பண்ணுங்க என்று நாம் சொல்வதையெல்லாம் அமைதியாக கேட்பார். ஆனால், ஆக்‌ஷன் என்று சொன்னதும் ஏதோ பேய் புகுந்ததுபோல மாறிவிடுவார். 

 

அவரை பார்த்த உடனேயே செமயா இருக்கார்டா, இப்படி ஒரு ஷாட் வைக்கலாம் என்று நமக்கே தோன்றும். அந்த அளவிற்கு உடலை எப்போதும் தயார்படுத்தியே வைத்திருக்கிறார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு பெயர் கிடைத்தது என்றால் அது சும்மா கிடைக்கவில்லை. தொடர்ந்து 5 நாட்கள் ஒருசொட்டு தண்ணீர்கூட குடிக்காமல் இருந்துதான் அந்த சிக்ஸ்பேக் கொண்டுவந்தார். இவ்வளவு அர்ப்பணிப்போடு இருக்கக்கூடிய ஒருத்தர் கிடைக்கும்போது, அவரை எந்த அளவுக்கு நாம் பயன்படுத்த வேண்டும். அவரை சரியாக திரையில் காட்டவில்லை என்றால் நமக்கு திறமையில்லை என்றுதான் அர்த்தம்”.