Skip to main content

அஜித்தின் விஸ்வாசம் படம் தீபாவளிக்கு உறுதி...?

Published on 22/05/2018 | Edited on 24/05/2018

 

 

ajith

 

 


பட அதிபர்கள் ஸ்ட்ரைக் காரணமாக தள்ளிவைத்திருந்த 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் - சிவா கூட்டணி 4வது முறையாக இணைந்துள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக வரும் என்று முன்பு சொல்லப்பட்ட நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாக ஆரம்பித்ததனால் 'விஸ்வாசம்' படம் வரும் போது வரட்டும். தற்சமயம் படப்பிடிப்பாவது தொடங்கினால் சரிதான் என்ற மனநிலையில் அஜித் ரசிகர்கள் இருந்தனர். இதனால் படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்துவரும் நிலையில் தற்போது ஐதராபாத்தில் உள்ள அரங்கில் வேகமாக நடந்து வரும் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய இருக்கிறது. இதையடுத்து 2ஆம் கட்டமாக மும்பையிலும், அடுத்து சென்னையிலும் படப்பிடிப்பை வேகமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளார். மேலும் படப்பிடிப்பை மின்னல் வேகத்தில் முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே ஆக வேண்டும் என்பதில் சிவா உறுதியாக இருக்கிறார் என்று தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனால் வருகிற தீபாவளியை 'தல' தீபாவளியாக  கொண்டாடலாம் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

எப்பவேணா ஆபீசுக்கு வாங்க...டிடெயில்ஸ் தரோம்...! விஸ்வாசம் விநியோகஸ்தர் அதிரடி அழைப்பு...!

Published on 08/02/2019 | Edited on 08/02/2019
viswasam

 

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் - நயன்தாரா இணைந்து நடித்து பொங்கலன்று வெளியான 'விஸ்வாசம்' படம் வெற்றிகரமாக 4 வாரங்களை கடந்து 5வது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தின் வசூல் குறித்து சமீப நாட்களில் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து படத்தை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில்.... 

 

 

"விஸ்வாசம் படம் எல்லா சந்தேகங்களையும் தகர்த்தெறிந்து தமிழ் சினிமாவின் மிகப்பெரும் பிளாக்பஸ்டர் படமாக உருவெடுத்துள்ளது. விநியோகஸ்தர் என்ற முறையில் 'விஸ்வாசம்' படம் சரித்திரம் படைக்கும் வெற்றி பெற்றதை கர்வமாகவும், நமபிக்கையுடனும் இதன் மூலம் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். இன்னமும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், உங்களுடைய கவலைகளுக்கும், கேள்விகளுக்கும் எங்களுடைய அலுவலக கதவு எப்போதும் திறந்தே இருக்கும். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், பங்குதாரர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைவருக்கும் இது லாபகரமாக அமைந்துள்ளதால் படத்தை கொண்டாடி வருகின்றனர். மேலும் இதை கொண்டாட ரசிகர்களாகிய உங்களுக்கு நேரம் வந்துவிட்டது. சந்தேகமே இல்லாமல் 'விஸ்வாசம்' ஒரு மிகப்பெரும் வெற்றி படம்" என அறிவித்துள்ளனர்.

 


 

Next Story

பேட்ட, விஸ்வாசம் இதில் எந்த படம் வசூலில் அதிகம்...? உண்மை நிலவரம் இதோ..!

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
vp

 

பேட்ட படமும், விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் திரையரங்குகள் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில் இரண்டு படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே சமூகவலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்க பட்டுள்ளது. அதில்... "இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.

 

 

சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம் என்பதால் பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும். தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. மேலும் இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.