ரஜினிகாந்த் காலா, 2.0 படங்களையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் ரஜினியுடன் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இப்படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிப்பது என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவி வருகிறது. அவ்வப்போது திரிஷா, நயன்தாரா, அஞ்சலி என்று முன்னணி கதாநாயகிகளின் பெயர்கள் அடிபட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த காலா இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி... 'மகள் வயது உடைய பெண்ணுடன் டூயட் ஆடுவதை நிறுத்திவிட்டதாக’ குறிப்பிட்டிருந்தார். அதே சமயம் தற்போது இந்த படத்தில் நடிகை சிம்ரன் நடிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ள நிலையில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிம்ரன் ஏற்கனவே சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த கங்கா வேடத்தில் நடித்திருக்க வேண்டியவர். ஆனால் அப்போது அவர் கர்ப்பமாக இருந்ததால் வாய்ப்பு பறிபோயிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவில்லை என்றும், அவர் படையப்பா நீலாம்பரி போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்றும் உலா வந்து கொண்டிருக்கிறது.
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் ?
சார்ந்த செய்திகள்
Next Story
பேட்ட, விஸ்வாசம் இதில் எந்த படம் வசூலில் அதிகம்...? உண்மை நிலவரம் இதோ..!
பேட்ட படமும், விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு ஒரே நாளில் வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் திரையரங்குகள் முழுவதும் திருவிழா கோலம் கொண்டுள்ள நிலையில் இரண்டு படங்களில் எது வெற்றி படம், எது வசூலில் அதிகம் என்று ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே சமூகவலைதளங்களில் கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு படங்களின் வசூல் நிலவரம் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் தற்போது விளக்கம் அளிக்க பட்டுள்ளது. அதில்... "இரண்டு படங்களுமே நன்றாக வசூலித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் வசூலில் விஸ்வாசம் தான் முன்னிலையில் உள்ளது. தமிழகத்தில் பேட்ட வசூல் ரூ.23 கோடி ஆகும். ஆனால் விஸ்வாசம் தமிழகத்தில் ரூ.26 கோடி வசூலித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரை ‘பேட்ட’ படத்தின் வசூல் 1.18 கோடியை தொட்டுள்ளது. ஆனால் ‘விஸ்வாசம்‘ வசூல் 88 லட்சம் தான் வந்துள்ளது.
சென்னையில் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் தான் அதிகம் என்பதால் பேட்ட படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் இதர பகுதிகளின் வசூலைப் பார்த்தால் தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ தான் அதிகம். இந்த வசூலை விட சுமார் ரூ.3 கோடி குறைவாகவே ’பேட்ட’ வசூல் இருக்கும். தமிழகத்தில் விஸ்வாசம் வசூல் குவிப்பது போல வெளிநாடுகளில் பேட்ட வசூல் சாதனை செய்து கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வசூலித்துள்ளது. விஸ்வாசம் உலக அளவில் ரூ. 43 கோடி வசூல் செய்துள்ளது. மொத்தத்தில் தற்போதுள்ள நிலவரப்படி எது அனைத்து தரப்புக்கும் லாபகரமான படமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாது. காரணம், இப்போது வரை 2 படங்களுக்குமே டிக்கெட் கிடைப்பதில் தட்டுப்பாடு இருக்கிறது. மேலும் இப்போதுள்ள வசூலை வைத்து சொல்ல வேண்டுமானால், இரண்டுமே சரி சமமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டுள்ளனர்.
Next Story