Skip to main content

விக்ரம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியீடு 

Published on 14/05/2018 | Edited on 15/05/2018
irumbu thirai.jpeg

 

 

vikram


விக்ரம் நடிப்பில் மாபெரும் வெற்றிபெற்ற சாமி படத்தின் இரண்டாம் பாகமான 'சாமி ஸ்கொயர்' படத்தை இயக்குனர் ஹரி முழு வீச்சில் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு காரைக்கடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹாவும் பிரபு, ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் ஆகியோர் முக்கிய காதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை வரும் மே 17ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளனர். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தை வரும் அக்டோபரில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'தாய் வயித்துல பொறக்கல, பேய் வயித்துல பொறந்தேன்' - தெறிக்கவிட்ட விக்ரம்!

Published on 04/06/2018 | Edited on 05/06/2018
vikram


சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'சாமி ஸ்கொயர்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். 'சாமி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் படத்தின் ட்ரைலரை நேற்று காலை 11 மணி அளவில் வெளியிடுவதாக படக்குழு முன்னர் அறிவித்திருந்தது.

 

 


அதன்படி படத்தின் பரபரப்பான ட்ரைலர் நேற்று காலை வெளியாகி ரசிகர்களிடையே கலவையான உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2003ல் எடுக்கப்பட்ட சாமி படத்தில் 'நான் போலீஸ் இல்ல பொறுக்கி', போன்ற பன்ச் வசனங்கள் இருந்ததைப் போல இந்தப் படத்தில் அதற்கு அடுத்த லெவலில் அதிரடியாகக் களமிறங்கி  நடிகர் விக்ரம் 'நான் தாய் வயித்துல பொறக்கல... பேய் வயித்துல பொறந்தேன்' என்றும் 'நான் சாமி இல்ல... பூதம்' என்றும் ட்ரைலரில் பன்ச் வசனங்களைப் பேசி ரசிகர்களை தெறிக்கவிட்டுள்ளார் விக்ரம். பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் 'பன்ச்'க்கும் பறக்கும் கார்களுக்கும் பேர் பெற்ற இயக்குனர் ஹரி படங்களின் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது போல. 

 

Next Story

அஜித்தின் குரலாக ஒலித்த விக்ரம்!

Published on 17/04/2018 | Edited on 17/04/2018

ஏப்ரல் 17 - நடிகர் விக்ரம் பிறந்தநாள் 

இந்திய சினிமாவின் பெருமை என்று ஒரு சிலரை சொல்வார்கள். அந்த நபர்களில் ஒருவராக இருப்பவர் சீயான் விக்ரம்.
 

vikram



தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதைக்கு ஏற்றது போல் தனது உடலையும், தனது தோற்றத்தையும் மாற்றக்கூடியவர் என்றால் கமலுக்கு பின்பு நடிகர் விக்ரம் என்று உறுதியாகச் சொல்லலாம். நடிகர், பாடகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்,போட்டோகிராஃபர் என்று பன்முக திறன்கொண்டவர் விக்ரம். இவரது திரைப்பயணம் 1990ஆம் ஆண்டு தொடங்கினாலும் பாலாவின் இயக்கத்தில் வெளியான 'சேது'தான் விக்ரமின் திரைப்பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை அளித்தது. அதனைத் தொடர்ந்து தில், ஜெமினி, தூள், சாமி, பிதாமகன், அந்நியன் என்று தமிழ் திரையுலகை ஒரு புயலாக சூழ்ந்தார் விக்ரம். 

இன்று துருவநட்சத்திரம் டீசரில் மிரட்டும் விக்ரமின் குரல் இப்பொழுது மட்டுமல்ல அப்பொழுதும் ஸ்பெஷல். நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விக்ரமுக்கு அதற்கு முன் சினிமாவில் கடினமான ஒரு காலகட்டம் இருந்தது. அப்பொழுது நடிகராக படங்கள் நடித்த பொழுதே தமிழ் சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் அஜித், பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்தவர் விக்ரம். அவ்வாறு விக்ரமின் குரல் விளையாடிய சில படங்கள்...  
 

அமராவதி அர்ஜுனுக்கு 

 

ajith ypung



இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ள, 'தல' என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்திற்கு 1993ஆம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில் அஜித் நடித்த அர்ஜுன் கதாபாத்திரத்திற்கு பின்னணிக்குரல் கொடுத்தவர் சீயான் விக்ரம்தான். அந்தப் படத்தில் அஜித்தின் அப்பாவித்தனமான இளம் காதலர் பாத்திரத்துக்கு விக்ரமின் குரல் முழுமை கொடுத்தது. இவ்வளவு நடிப்பை தனக்குள் வைத்திருப்பவரின் குரலும் நடித்தது. சுரேஷ் மேனன் இயக்கத்தில் வெளியான பாசமலர்கள் படத்தில் அஜித் ஒரு காட்சியில் வருவார். அதிலும் அஜித்துக்கு டப்பிங் பேசியிருப்பார் விக்ரம்.
 

"கண்ண பாக்காதடா" 

 

minsara kanavu



நடன கலைஞராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று இந்திய சினிமாவை கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவிற்கு இரண்டு படங்களில் டப்பிங் பேசியுள்ளார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான வெற்றிப்படமான 'காதலன்' மற்றும் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'மின்சாரக் கனவு' திரைப்படத்திற்கும் விக்ரம் டப்பிங் பேசியுள்ளார். மின்சாரக் கனவில் கஜோலின் காதலை மறுக்கும் அந்த கடல் காட்சியில் "கண்ண பாக்காதடா... ஏங்க எல்லா பொண்ணுங்களும் எனக்கு சிஸ்டர்ஸ்" என்று திணறும் அந்தக் காட்சி இன்றும் மறக்க முடியாதது. அதில் பிரபுதேவாவுக்கு உறுதுணையாக இருந்தது விக்ரமின் குரல். அந்த ஒரு காட்சிக்கு டப்பிங் செய்ய விக்ரம் அழைக்கப்பட்டிருந்தார்.   

 

சாக்லேட் ஹீரோவுக்கு சீயான் 

 

abbas



விக்ரம், மொத்தமாக 11 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். அதில் அதிகமாக அவர் டப்பிங் பேசியது இப்பொழுது ஹார்ப்பிக் பாயாகவும் அப்பொழுது பெண்களின் மனதில் சாக்லேட் பாயாகவும் இருந்த அப்பாஸிற்கு. காதல் தேசம், வி.ஐ.பி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் பேசியுள்ளார். 

 

vikram young



இப்படி எந்த வடிவில் இருந்தாலும் சினிமாவில் இருக்கவேண்டுமென்று மனம் தளராமல் இருந்த விக்ரம், ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தார். அந்த ஒரு நல்ல வாய்ப்பு மிக மிக தாமதமாக வந்தது, ஆனாலும் அப்பொழுது தொடங்கிய சினிமா சக்ஸஸ் இன்றும் தொடர்கிறது. வெற்றி தோல்வி தாண்டி, மீம்ஸ், ரசிகர்கள் ரைவல்ரி காலத்திலும் யாராலும் வெறுக்கப்படாத ஹீரோவாக இருக்கிறார் விக்ரம். இதுதான் சீயான் ஸ்பெஷல். ஹேப்பி பர்த்டே சீயான்...