Skip to main content

நன்றி மறவாதவர் விஜய் ஆண்டனி - பிரபல நடிகர் நெகிழ்ச்சி

Published on 15/05/2018 | Edited on 16/05/2018
irumbu thirai.jpeg

 

 

vijay antony


அண்ணாதுரை படத்தையடுத்து நடிகர் விஜய் ஆண்டனி தான் சொந்தமாக தயாரித்து நடித்துக்கொண்டிருக்கும் படம்  'காளி'. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

 

 


மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் பேசுகையில்...."நான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் 'தர்மதுரை' படமும், விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' படமும் லாபத்தில் ஓவர் ப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மறந்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக பாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். கிருத்திகாவை பார்த்து பிரமித்தேன். கதையில் என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார். மேலும் படத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். காளி என்றாலே ரொம்ப பவர் புல்லான தலைப்பு" என்றார்.
 

சார்ந்த செய்திகள்